Dec 29, 2009

ஏய்.. செல்லம்மா..

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.
..............................................
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.
.....................................
காலம் நேரம்
சேர்ந்து வாழ்த்தும்
தென்றலாக..
நீயும் நானும்
வாழ்ந்திருப்போம்
பூவும் வாசம் போலே.
..........................................
எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.
.........................................................
செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.
..........................................................

ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 13, 2009

வாழ்ந்து பார்க்கிறேனே..

இலக்குகளற்ற பயணத்திலிருந்தேன்..
இலக்காய் உன்னை நினைக்க செய்தாய்..
நினைத்து நினைத்து நெருங்கி
வரும்போதுதான் நெருப்பென
சுடுகிறது உண்மை..
உனக்கான இலக்கு நான் மட்டுமே அல்ல..

வார்த்தை என்றால் அது
இதழிலிருந்து அல்ல..
இதயத்திலிருந்து வரவேண்டும்..
புன்னகை என்றால் அது
இதயத்தை நிறைக்கவோ. .
அல்லது கரைக்கவோ..
காயங்கள் செய்யகூடாது.
உன் வார்த்தைக்கும்..
புன்னகைக்கும் இனி
சாத்தியமே இல்லை என தோன்றுகிறது.

நீண்ட நெடிய ஆங்காரமான
இரவுகளிலெல்லாம் அனலில்
பட்ட புழுவாய் துடிதுடித்து
பெரும் போராட்டத்திற்கு பின்
பேரமைதியாகும்போதே உணர்ந்து கொண்டேன்.
என் மனம் உன்னை விட்டு
விலக ஆரம்பிக்கிறதென்று.

இனி நான் கண்டு ரசிக்க
எதுவுமே தட்டுபடபோவதில்லை
என் கண்களுக்கு.
இனி நான் பேசி மகிழ
எந்த இரவுமே வாய்க்கபோவதில்லை
என் ப்ப்ரியங்களுக்கு.

பரவாயில்லை..
மீண்டுமொருமுறை
வாழ்ந்துதான் பார்க்கிறேனே..
ஆசைகளற்ற இயந்திரமாய் வாழ்க்கையோடும்..
வலிகளை மட்டுமே தரும் கொடிய தனிமையோடும்.
..........................................................................

ப்ரியமுடன்.
லோகநாதன் .

Oct 31, 2009

கண்ணாடி ஜன்னல் நீ..

மழையோடு மகிழ்ந்தாடி
மனதோடு கலந்திருக்கும்
மண்வாசம் போல..
என் மனதோடு உறவாடி
உயிரெங்கும் நிறைந்திருக்கும்
சுவாசங்கள் நீயடி.
........................................................
எப்படியும் கொஞ்ச
நேரம்தான் எனும்
உண்மை அறியாமல்
பேருந்து பயணத்தில்
ஜன்னலோர இருக்கை
கிடைத்துவிட்ட
குழந்தையின் குதூகலங்கள்..
உனக்கும் எனக்குமான
நேரங்களில்.
.........................................
உனக்கென
காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நாளும்..
எனக்காகவே
வருகிறாய்
ஒவ்வொரு நாளும்..
நமக்கான காதல் மட்டும்
ஏனோ கண்ணாமூச்சியாய்.
..................................................
மழைத்துளிகளின்
நடுவே கண்ணீராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நான்..
உன்னை காதலென்று
நினைத்திருந்தால்
கரைந்து போயிருப்பாய்..
உயிரென்று நினைத்திருந்தால்
மறைந்து போயிருப்பேன்..
நீ கரையவுமில்லை..
நான் மறையவுமில்லை.
.................................................
தொட்டவுடன்
உடைந்து விடும்
கண்ணாடி ஜன்னல்தான் நீ..
அதற்காக என்
காதலையுமா
தாங்க முடியவில்லை உன்னால்?
...........................................
சுகந்தமாய் வாழ்ந்து
பார்க்கிறேன்
உன் நினைவுகளோடு..
உதிர்ந்த மலரின்
கலையாத வாசங்களாய்..
நிறைந்த மனதில்
புரியாத ஏக்கங்கள்.
......................................

Sep 29, 2009

கண்மணிக்கு..

கவிதையாய்
என் நெஞ்சில்
வாசம் செய்கிறாய்..
ஆனால் நான்
ரசனைகள்
தொலைத்து நாட்கள்
மாதங்களாகி விட்டன.
..........................................
நாட்கள் மாதங்களாகலாம்..
மாதங்கள் வருடங்களாகலாம்..
அதனால் என்ன..
என் காதல்
குறைந்துவிடவா போகிறது..
காதலுக்கேது காலமும்.. நேரமும்..
....................................................
காலமும் நேரமும்
காத்திருக்க போவதில்லை
உனக்காக..
உனக்கான சொந்தங்கள்கூட
உனக்காய் கடைசீ வரை
காத்திருப்பதென்பது
இயல்புகள் மீறிய ஒன்றுதான்..
என் காதல் காத்திருக்க
ஆசைப்படுகிறது..
என் கல்லறைமீது
பூக்களாய் பூத்தேனும்.
...............................................
கல்லறை மீது
பூத்ததை தவிர
வேறென்ன பாவம் செய்தன
கல்லறை பூக்கள்..
கூந்தல் ஏறவும் முடியவில்லை..
பூஜைக்கு போகவும் முடிவதில்லை..
அப்படியே சில இதயங்களும்..
நேசம் வைத்த
பாவத்தை தவிர
வேறெந்த பாவமும்
அறியவில்லை என்றாலும்..
வாழவும் முடிவதில்லை..
சாகவும் முடிவதில்லை.
....................................................................

Sep 7, 2009

என் காதல்..

நட்சத்திரங்களுடன்
கைகோர்த்து
முப்பத்து முக்கோடி
தேவர்கள் அண்ட் தேவதைகள்
சுகந்தம் பாட..
நகரும் நிமிடங்களோடு
கைகோர்த்து
பூக்களும் தோரணங்களும்
கவிதை பாட..
இதழ் நிறைய புன்னகை
சிந்தும் உறவுகளும்..
மனம் நிறைய வாழ்த்துகள்
சொல்லும் உள்ளங்களும்
நிறைந்திருக்க..
உன் கரம் பிடிக்கும்
அந்நாள்..

இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்..
கனவில் தினமும்
நினைத்து தொலைக்கிறது.
என் காதல்.
.................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 24, 2009

உணர்வு நீ..

வெறும் வார்த்தைகளாகவோ..
அல்லது உன் செய்கைகளில்
அன்னியமகவோ எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
ஏன் உன் வார்த்தைகளில்
பரிவையும்..
உன் செய்கைகளில்
காதலையும்
கொட்டி வைத்தாய்..
இப்போது பார்..
நலமாய் வாழ்வான் என
நீ நினைத்திருக்க..
இங்கே யாரும் அறியாமல்
மிக நுட்பமாய்
பைத்தியமாகிகொண்டிருக்கிறேன் நான்.
..........................................................................
என் உலகம் முழுதும்
உன் நினைவுகளால்
சூழப்பட்டு அதற்கான
கதவுகளாலேயே
அடைத்துக்கொண்டு விட்டது.
நானும் அவ்வப்போது
ஒவ்வொன்றை உடைத்து
வெளியில் வர
முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.
இன்னும் முழுதாய் வந்தபாடில்லை.
ஒருவேளை என் காலம்
முழுதும் இப்படியே
சென்று விடுமோ..
........................................................................
ஒரு சர்வாதிகாரியை போல
என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு
ஆங்காரமாய் அமர்ந்திருக்கிறாய்..
நீ இருக்கிறாய் என்று
ஆணவமாய் நடைபோட வேண்டிய
நானோ இன்று அழுதுகொண்டு.
.....................................................................
மழையை கண்டாலே
மகிழ்ந்தாடும் என் மனதிற்கு
இப்போதெல்லாம் மழை நாட்களை
கண்டாலே பயமாய் இருக்கிறது .
எப்போதும் போல அது
மனதை நனைத்து செல்லாமல்
இப்போதெல்லாம் மிக ஆழமாய்
காயங்கள் செய்யவும் செய்கிறது.
உன் நினைவுகளால்..
.....................................................................
இதுவரை எவ்வளவோ
தொலைத்தாயிற்று..
ஒன்று கூட என் மனதில்
ஆழமாய் சலனம்
ஏற்படுத்தியதில்லை..
உன்னை தவிர.
..................................................................

Jul 28, 2009

மனசின் வார்த்தைகளின்மை..

முகம் மூடி
வைத்துகொண்டால்
முக(ம்)வரி மறந்து விடுமா?
இதழ் மூடி
வைத்துக்கொண்டால்
வார்த்தைகள்
தொலைந்து விடுமா?
இமைகள் பாரமென்று
கண்கள் சொல்லாதடி..
நினைவுகள் சோகமென்று
இதயம் வெறுக்காதடி....
கெஞ்சும் உன்னை கெஞ்சும்
உன் வெட்கம் கண்டு கொஞ்சும்..
நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உன் மடியில்தான் தஞ்சம்..
மூடிவைக்கவா நான்
ஆசைகள் வளர்த்தேன் பெண்ணே..
உன்னை பிரிந்து செல்லவா
நான் காதல் வளர்த்தேன் பெண்ணே..
சொல்லி புரிவதில்லையடி காதல்
சொல்லவும் வார்த்தைகள்
இல்லையடி என்னிடம்..
ஆம் பெண்ணே..
வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
...............................................

Jul 24, 2009

ஜமால் அண்ணாவுக்கு பிறந்தநாள்..

உறவுகளையெல்லாம் தாண்டி
என் உயிருக்கு மிக மிக
நெருக்கமாய்..
மயக்கங்களைஎல்லாம் தாண்டி
என் மனதுக்கு மிக மிக
இதமாய்..
எழுதும் வார்த்தை வசந்தமாய்..
சொல்லும் சொல்லில் சுகந்தமாய்..
வாழும் வாழ்க்கையில் வாசங்களாய்..
எல்லைகள் தாண்டி
ஏகாந்தமாய் வாழும் கவிதை
உனக்கு இன்று பிறந்தநாள்..
உன்னை வாழ்த்தினால் அவை
வெறும் வார்த்தைகளாகி போகும்..
வாழ்க பல்லாண்டு..
வணங்கி மனம் நிறைகிறேன்..
அல்லது..
நீ.. நானாகி
கர்வப்பட்டுகொள்கிறேன்.
- இப்படிக்கு..
உன் உடன்பிறவா சகோதரன்.

Jul 9, 2009

உன்னை நினைத்தே..

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..
அடிபாவி..
இப்படியா முழுவதுமாய்
என்னை ஆட்கொள்(ல்)வாய் நீ..
...............................................................
இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..
நன்றியடி பெண்ணே..
என்மீதான உன்
தொலைந்துபோன
பிரியங்களுக்கு.
..............................................
சோலையின்
சுகந்தமாய்..
தென்றலின்
வசந்தமாய்..
தனிமை
இனிமையாய்..
நெஞ்சின்
ரணமாய்..
வாழ்க்கையின்
ஆதாரமாய்..
இன்னும் எத்தனை
முகம் இருக்கும்..?
உன் நினைவுகளுக்கு.
................................................
பொன்னேரம் இந்நேரம்
பூங்காத்தும் தாலாட்ட..
பூவாசம் வந்தாட..
ராசாத்தி உன் நினைவால்..
என் மனதில் தேரோட்டம்.
......................................................
களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற.
................................
வசந்தம்
வரும்போதெல்லாம்
இயல்பாய்
செழித்திருக்கும்
சோலையை போல்தான்..
உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.
...................................................

Jul 7, 2009

நினைவோ ஒரு பறவை..

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..
........................................
கூந்தல் வாழ
ஆசைப்படும்
பூவுக்கு வாழ்க்கை
தொடர்வதுமில்லை..
காதல்கொண்ட
மனதிற்குள் நிம்மதி
இருப்பதுமில்லை..
இரண்டையும்
ஓரிரு நாட்களிலேயே
கசக்கி எறிந்துவிடுகிறார்களே..
இந்த பெண்கள்..
.......................................
இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..
................................................
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..
......................................
ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
...............................................
...........................................

May 26, 2009

அன்புள்ள செல்லம்மாவுக்கு..


அன்புள்ள செல்லம்மாவுக்கு,
கவிதை நீ..
காகிதம் நான்..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் பக்கங்களில்
இன்று என் கண்ணீர்த்துளிகள் மட்டுமே..


சோலை நான்..
சுகந்தம் நீ..
நீ மட்டுமே நிரம்பியிருக்க
வேண்டிய என் வெளியெங்கும்..
வெம்மையாய் என் ஏக்கங்கள் மட்டுமே..


உன் பிம்பம்
உன் புன்னகை..
உன் கொஞ்சல்..
உன் மிஞ்சல்..
எனக்கான உன் நேரங்கள்..
எல்லாவற்றையும் சேர்த்துவைக்கும்
ஒரு அற்புதமாய் இருந்தது
என் இதயம்..
எல்லாவற்றையும் ஒரே வார்த்தையால்
மீட்க முடியாமல் சிதறடிக்க முடிந்தது
உன்னால் மட்டும்?

தினம் காலை வந்து
மாலை மறைய
என் உலகின் சூரியனல்ல நீ ..
என் வானம்..
நொடிப்பொழுதும் மறையாமல்
என்னுடனே இருக்கணும் நீ..
இப்போதும் இருக்கிறாய்..
நிஜங்களாக அல்ல..
நினைவுகளாக..
அதற்காக உன் நிஜங்களை
திருடிக்கொள்ள விருப்பமில்லை எனக்கு..
ஆம் பெண்ணே..
கரைவது என் வாழ்க்கையானாலும்..
நிறைவது உன் மனமாக இருக்க வேண்டும்.
- இப்படிக்கு..
மறுபடியும்
கனவுகளை
தொலைத்தவன்.
.....................................................................................



May 19, 2009

முத்தவியல்..

"டேய்.. "
"........................."
"டேய்.. உன்னத்தான்டா.."
"ம்ம்.. என்ன..?"
"என்ன அய்யா வந்ததுலேர்ந்து
ஒண்ணுமே பேசல?"
"ஒண்ணுமில்ல..
ஒரு யோசனைல இருந்தேன்.."
"என்னிடம் கூட பேசாமல்
அப்டி என்ன யோசனை உனக்கு?"
"அதான் யோசனையே..
உன்னிடம் பேசாமலேயே
உன்னிடம் முத்தம் வாங்க வேண்டும்..
எப்டீன்னு யோசித்து பார்த்தேன்.."
"அதானே பார்த்தேன்..
நீ திருந்தவே மாட்டியாடா.."
"சரி..சரி.. ஒரு சின்ன்ன்ன முத்தம் கொடு..
ஒரு ரெண்டு நிமிசத்துக்கு திருந்திகறேன்.."
"ஏய்.. கொன்னுடுவேன்.. வேற பேசு.."
"செல்லம்மா.."
"என்ன சொல்லு.."
"அள்ளஅள்ள குறையாதுன்னு
சொல்லுவாங்களே என்ன அது?"
"அது அட்சய பாத்திரம்டா.."
"அத பாத்திருக்கியா?"
"இல்ல.. கேள்விப்பட்டதோட சரி.."
"சரி.. கொள்ள கொள்ள நிறையாததுனு
கேள்விப்பட்டிருக்கியா ?"
"இல்லையே.. என்ன அது?"
"அது என்னன்னெல்லாம் சொல்லமுடியாது..
ஆனா அது என்னிடமே இருக்கு.."
"என்னடா அது?"
"அதான் சொல்றேன்ல சொல்லமுடியாதுன்னு..
வேணும்னா நீ டெஸ்ட் பண்ணி பாரு.."
"நானா.. எப்படீடா.."
"அப்படி கேளு..
இப்போ நீ எனக்கு முத்தம்
தந்துட்டே இரு ..
என் காதல் நிறையுதான்னு பார்ப்போம்.."
"நான் அப்பவே நெனச்சேண்டா..
நீ இங்கதான் வந்து நிப்பேன்னு..
இதுக்கு மேல பேசாதே நீ.."
"....................."
"....................."
"......................................... . . . ."
"டேய்.."
"ம்ம்.."
"உனக்கு என் முத்தம்ன அவ்ளோ இஷ்டமா?"
"ம்ம்.. நீ முத்தங்களாக வெறும்
சத்தங்களை மட்டும் தருவதில்லையே..
உன் காதலையும் சேர்த்தல்லவா தருகிறாய்.."
"ம்ம்.. எதாச்சும் ஒன்னு சொல்லிடுவியே..
சரி உனக்காக ஒன்னே ஒன்னு தரேன்.."
.
.
.
.
.
.
"அம்மாடீ.. ஒன்னே ஒண்ணுனு சொன்ன..
இப்போ கூடை நிறைய தந்துட்ட.."
"ம்ம்..பரவால்ல.. வச்சுக்க.."
"ம்ஹூம்.. எனக்கு இப்போதைக்கு
ஒன்னு போதும்..
மீதியை உனக்கே திருப்பி தரேன்..
எங்கே உன் கன்னம்.. கழுத்து.. மா.."
"ஷ்.. சொல்லாதே.. செய்.."
ஹய்யோ.. என்னதான் தினமும் கொடுத்தாலும்
உன் காதல் குறைவதுமில்லை..
என் மனம் நிறைவதுமில்லை..
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்..

May 9, 2009

காதல் சாபம்.

என்னதான் கெஞ்சி
கேட்டாலும்
என் பக்கமே வருவதில்லை நீ ..
எந்த சிறையில்
அடைத்தாலும் என்னை தேடியே
உன் ப்ரியங்கள்..
...................................
தவமின்றி கிடைத்த
வரங்கள் உன் ப்ரியங்கள்..
அதனால்தான் அவற்றை
தொலைக்க நான்
கடும் தவம் செய்ய
வேண்டியிருக்கிறது.
.............................................
ஒரு மழை நாளில்
நீ கைநீட்டி விளையாடும்
உன் வீட்டு சாளரத்திலிருந்து
ஒழுகும் மழைத்துளியாக
மாறவேண்டும் அல்லது
எதேச்சையாக நீ
தெருவில் நடக்க
எதேச்சையாக வரும்
மழையில் உன் மீது
விழும் மழை துளியில்
முதல் துளியாக இருக்க
வேண்டும் என்றேன்.
இப்போதெல்லாம் உன்
உலகில் மழையே வருவதில்லை
என்கிறாய் என்னிடம்.
.............................................
வசந்தம் வீசும்
அதிகாலையில்..
சுகந்தம் பாடும்
அந்தி மாலையில்..
அமைதியான
ஒரு பௌர்ணமி இரவில்....
ஆர்ப்பாட்டமான
ஒரு மழைநாளில்..
என் இதயத்தில்
கொட்டிகிடக்கும் காதலெல்லாம்
உனக்கானதுதான் என
எப்படியாவது உனக்கு
உணர்த்த ஆசைதான் எனக்கு..
நமக்கான அந்த நாட்கள்
இனி வரப்போவதில்லை
என தெரிந்திருந்தும்.
........................................................
உன்னை விட்டு
விலக ஆரம்பித்த
அந்த நாளிலிருந்தே
என் வீட்டு பூனைக்குட்டி
உட்பட என் எல்லாமே
என்னை விட்டு விலக
ஆரம்பித்து விட்டன..
ஏன் இப்படி என்னை
தனிமரமாக்குகிறாய்..
................................................
நீ காதலை உணரும்
நாட்களில் ஒரு
கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள்
சாபங்கள் தந்துவிட்டானோ
எனக்கு..
இன்னமும் உன்னையே
காதலித்துகொண்டிருக்கிறேன்.
....................................................

Apr 25, 2009

என் காதல் செல்லம்மா..

செம்பவழம் நீதானே
பூவாசம் நான்தானே
போகும் வழியெங்கும்
மகாராணிக்கு வாசங்கள்
கொட்டி வைக்கும்
என் காதல் கண்மணியே
கள்ளிருக்கும் ரோசாவே
வண்ண பூஞ்சோலை நீதானே
வாடைகாத்தும் நான்தானே
உன்னை வட்டமிட்டு
செல்லம் கொஞ்சும்
என் காதல் செல்லம்மாவே
உன் முகம் நெஞ்சில் நிறைத்து
நெஞ்சுக்குள்ளே ஆசை வைத்து
ஆசைகளில் ஊஞ்சல் கட்டி
ராசாத்தி நீ ஆட
ராப்பகலா பார்த்திருக்கும்
என் காதல் கதையெல்லாம்
கட்டுமரம் போலாச்சு
கட்டவிழ்ந்து போயாச்சு
கண்ணீரில் மிதக்குது
கரை அது காணவில்லை
தேடிப்பார்க்கவும் மனசில்லை.
...........................................................

Apr 22, 2009

மறவாதே கண்மணியே..

கனவினில் பார்த்தேன்
காணவில்லை வேர்த்தேன்..
இரவுகள் கூட
கானலாய் ஆனதடி பெண்ணே..
நிஜங்களை மறந்து
நினைவுகளில் தொலைந்தேன்..
நிகழ்வுகள் மறந்து
சுயங்கள் தொலைக்கிறேன் அன்பே..
என் விடியல்களை எல்லாம்
கோடி சூரியன்களை கொண்டு
பிரகாசிக்க செய்தாய்..
உன் காலை வணக்கங்களால்..
என் இரவுகளை எல்லாம்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
அழகுற செய்தாய்
உன் இரவு வணக்கங்களால்..
இன்னொரு தாயாய்
நெஞ்சினில் நிறைந்தாய்..
பெண்ணொரு தேவதை
மனதோடு உணர்த்தினாய் ..
காயங்கள் மட்டும் ஏனோ
தந்தாய் அன்பே..
என்கவிதை கூட
கலங்குது பெண்ணே..
காயங்கள் மட்டுமே
தந்தாலும்..
கண்ணீரில் எனை
நனைய வைத்தாலும்
என் காலங்கள் உள்ள
காலம்வரை
என் நெஞ்சம் உன்னை
மறவாதே கண்மணியே.
....................................................

Apr 12, 2009

தெரிந்தால் நீயாவது சொல்லடி பெண்ணே..

அழகான நிலவு
துணையாய் இருந்தும்
அமிலம் ஊற்றியதை போல்
எரியும் என் இரவுகளை
என்ன செய்து கழிப்பதென்று
தெரியவில்லை எனக்கு.

ஆறறிவு இருந்தும்
சுற்றி நடப்பவற்றை
அறிய இயலாத ஜடமாய்
மாறிப்போன என் சிந்தனைகளை
என்ன செய்து மீட்பதென்று
புரியவில்லை எனக்கு.

ஏந்திக்கொள்ள எல்லாம் இருந்தும்
ஏதுமில்லாத வெறுமையாய்
மாறிப்போன வாழ்க்கையை
எதைக்கொண்டு நிறைப்பதென்று
இன்னும் விளங்கவில்லை எனக்கு.

இதுவரை பிரியங்களை மட்டுமே
சுமந்த என் காதல் முதன் முறை
பிரிவுகளை முழுமையாய்
தாங்கும் சக்தியற்று தவிக்கிறது..
எதை சொல்லி தேற்றுவதென்று
தெரியவே இல்லை எனக்கு..

நான் கல்லறைக்கு போகும்முன்
நீயே ஒருமுறையாவது சொல்லிவிடு ..
என் காதல் கல்லறையிலாவது
நிம்மதியாக உறங்கட்டும்..
...............................................................

Apr 10, 2009

திசை மாறும் பறவை..

உப்பை தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டும்..
காதலை அறிந்தவன்
கண்ணீர் விட வேண்டும்..
இன்னும் எழுதப்படாத
விதிகளிங்கே எத்தனையோ..

நேசம் வைத்து
நிறைந்த மனது
காயம்பட்டு
தவிக்குது இங்கே..
காதல் வைத்து
கரைந்த உயிர்
கண்ணீர் விட்டு
கலங்குது இங்கே..

சிகரம் தொடும்
வாழ்க்கை..
இங்கே சிறகுகள்
முறிந்து கிடப்பது
யாருக்கு தெரியும்..

வானம் தொட்டுவிடும்
வயசு..
இங்கே வழி தெரியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பது
எத்தனை பேருக்கு தெரியும்..

சிறகடித்து பறக்கும்
மனசு..
இன்று கிணற்று தவளையாய்
ஒடுங்கி கிடப்பது
அந்த கடவுளுக்கு கூட
தெரிய வாய்ப்பில்லைதான்..

ஒன்றாய் பயணிக்கும்
இதயங்களிரண்டு
தனித்தனியாய்
போகும் தருணங்கள் மிக
கொடூரமானவைதான்..
கண்சிமிட்டும்
ஜோடிபுறாக்களின் பயணம்
காற்றின் அலைக்கழிப்பால்
ரத்தாகும் தருணங்களை போல.
........................................................

Apr 7, 2009

கா - த - ல - க - ரா - தி

என் சிறு வயது
பண்டிகை காலங்களையெல்லாம்
என் கண்முன்னே
நிழலாட வைக்க
உன் சிறு புன்னகையால்
மட்டுமே முடிகிறது.
...................................................
எனக்கான எல்லா
கடவுள்களும்
சேர்ந்துதான் உன்னை
படைத்திருக்க வேண்டும்.
அதனால்தான்
நான் கேட்க்காமலேயே
உன் ப்ரியங்களைஎல்லாம்
வரங்களாக்கி
தருகிறாய் எனக்கு.
.............................................................
நான் எது
கேட்டாலும் 'சீ.. போடா'வென்று
வித விதமாய் வெட்கங்கள்
காட்டுகிறாய் நீ.
எனக்கு பெரும்
அதிசயமாகவே இருக்கிறது.
ஒரு பூவுக்கு இத்தனை
விதமாய் வெட்க்கப்பட
தெரியுமா என்று.
..........................................................
இனிமேல் நான்
எங்கேனும் வெளியே
செல்லும்போது
வழியனுப்புகிறேன்
என வாசல் வரதே நீ.
உன்னை பார்த்துவிட்டால்
நின்ற இடத்திலிருந்து
நகர மறுத்து
அடம்பிடிக்கிறது என் காதல்.
...................................................
என் முழங்கையில்
உன் தாவணிக்காத்தாடி
படர நடந்து சென்ற
அந்த இரண்டு நிமிட
பயணம் போல
சுகமான பயணம்
இதுவரை இருந்ததே
இல்லை எனக்கு.
......................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Apr 1, 2009

ஒரு நட்சத்திரத்திற்கு
ஒரு முறை என
கணக்கு வைத்துக்கொண்டு
ஒவ்வொரு நட்சத்திரமாக
எண்ணிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை எத்தனை முறை
நினைத்திருப்பேன் என
நினைத்துக்கொண்டு.
........................................................
ஏதுமற்ற அனாதையாய்
தெருவில் கிடக்கிறது
என் காதல்..
பார்த்துக்கொண்டே
தாண்டி செல்கிறாய் நீ.
வலிக்கிறது மனசு..
காதல் தெருவில்
கிடைப்பதற்காக அல்ல..
நீ பார்த்துக்கொண்டே
தாண்டிசெல்வதை பார்த்து.
..............................................................
எண்ணி பார்த்தால்
மரணத்தை விட சிறந்தது
வேறெதுவும் இருப்பதாக
தோன்றவில்லை எனக்கு..
.....................................................
எதையோ எதிர்பார்த்து
செல்லும் பயணங்களில்..
எதிரே வரும் பேருந்தின்
அலைகளிப்பால் எதிர்பாராமல்
நம் கண்ணில் விழுந்துவிடும்
ஒரு சின்ன தூசியை போல்தான் நீயும்..
என் மனதில் விழுந்து விட்டாய்..
என்ன செய்தும் கரைக்கவோ..
எடுக்கவோ முடியவில்லை..
என்னிலிருந்து உன்னை..
.............................................................
ப் ரி ய மு ட ன் ..
லோ க நா த ன் . .

Mar 18, 2009

செல்லமடி நீ எனக்கு . .

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா.."
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
.............................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Mar 17, 2009

காலம் உள்ள காலம் வரை . .


மஞ்சள் முகத்தழகி மயக்கம் தரும் பேரழகி
மன்னன் இவனென மனதோடு நினைத்ததென்ன
சின்ன கொடியிடையாள் சிதறடிக்கும் பூவிழியாள்
சிங்கார கூந்தலிலே என் மனதை முடிந்ததென்ன
கோடி மலரெடுத்து கொடிமலரின் பாதம் நான் தூவ
கொண்டவனை நீ நினைத்து விரலாலே கோலம்போட
நின் மடியோடு சாய்ந்து நீங்காமல் வாழ்ந்திருப்பேன்
உன் வாழ்வோடு கலந்தோடி வளமாக பூத்திருப்பேன்
ஆசைகள் கோடிகோடி அலுக்காமல் சொன்னதென்ன
அத்தனையும் மூடிவச்சு அழுதுகொண்டு போனதென்ன
பொழுதிருக்கபொன்மனசிருக்கபோனதெங்கேபொன்மயிலே
காலமுண்டுகாதல்நெஞ்சமும்உண்டுகாணவில்லைகண்மணியை
வயதிருந்தும்வண்ணகனவிருந்தும்வாழ்வதற்குமனமில்லை
எச்சங்களால்இதழ்நனைத்தோம்எதற்காகபிரிவுஅறிந்தோம்
ஏன் இந்த ஏக்கங்கள் எதற்கிந்த தவிப்புகள்
விழியெல்லாம் மழையாக மனமெல்லாம் நினைவாக
மங்கயுனை மறந்துவிட மரணத்தை நேசிக்கிறேன்
காலங்கள் மாறிவிட கண்ணீரும் காய்ந்து விட
சொந்தங்கள் கூடி வந்து செல்வம் பல தந்திடினும்
என் காலம் உள்ள காலம் வரை கன்னியுந்தன்
மடி சாய்ந்த நினைவாலே வா ழ் ந் தி ற ப் பே ன்.
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Mar 7, 2009

செ ல் ல ம் மா . .

இப்போதெல்லாம்
கோவிலுக்கு சென்றால்
உன்னைவிட
எனக்காக அதிகம்
வேண்டிக்கொள்கிறேன்.
கடவுளைவிட
என் காதல்மேல்
நம்பிக்கை அதிகம் எனக்கு.
அது உன்னை நன்றாக
பார்த்துகொள்ளும் என்று.
.........................................................
எதற்கும் தயங்காமல்
அவ்வப்போது கொட்டி
தீர்த்துவிடும்
மழையை போல்தான்..
சமயங்களில்
என்னை
திணற திணற
நனைத்துவிடுகிறது..
உன் காதல்.
.................................................
எனக்கு தெரிந்து
எந்த பூவும்
அருகில் சென்றாலே
முகம் சிவப்பதில்லை..
உன்னை தவிர.
...............................................
நீ செல்லம் கொஞ்சும்
அழகிற்காகவே
இன்னும்
குழந்தையாகவே
இருக்கிறது
என் காதல்.
............................................
ஆசை பட்டு
கேக்குது மழைச்சாரல்..
குடை இல்லாமல்
வா வெளியே..
வெட்கம் விட்டு
கேக்குது பூந்தோட்டம்..
ஒரு புன்னகை
தந்துவிட்டு போ பெண்ணே..
நெஞ்சம் தொட்டு
கேக்குது என் காதல்..
முத்தமொன்னு
வச்சுவிட்டு போ உயிரே.
........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .






Jan 21, 2009

. . ல் த கா சை ஆ

பூக்களை போன்று
மென்மையானதுதான் என்றாலும்
பூக்களை போன்று
சில நாட்களில்
உதிரக்கூடியதல்ல
என் காதல்..
அது காலங்கள் தாண்டி
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
.......................................................
நிலவைபோன்று
இனிமையானதுதான் என்றாலும்
எதோ சில நாட்களின்
நீண்ட இரவுகளில்
தீர்ந்து விடக்கூடியதல்ல
என் காதல்..
அது என் காலம் உள்ள காலம் வரை
உன்னோடு வாழ ஆசைப்படுகிறது.
...........................................................
'இது எனக்கான சொந்தம்'
ஓயாமல் கரையை தேடி வரும்
அலையை போல்தான்
என் காதலும்..
'இவள் எனக்கானவள்' என
உன்னுடன் கம்பீரமாக
நடைபோட ஆசைப்படுகிறது.
......................................................
உலகம் போற்றும்படியாக
இல்லாவிட்டாலும்..
உன் உள்ளம் நிறையும்படியாகவாவது
வாழ்ந்துவிட்டு போக
ஆசைப்படுகிறது என் காதல்.
....................................................
கடவுளுக்கு தினமும்
சேவை செய்யும்
ஒரு நல்ல பக்தனை போல..
தன் தாயை
தன் நெஞ்சில் தாங்கும்
உண்மையான மகனை போல..
உனக்கான ஒவ்வொன்றையும்
பார்த்து பார்த்து செய்ய
ஆசைப்படுகிறது என் காதல்.
......................................................
ஒரு சின்ன கோபமாய்..
ஒரு செல்ல சண்டையாய்..
கொஞ்சம் ஆசையாய்..
நிறைய்ய சிணுங்கலாய்..
விடியும் நிமிடம் முதல்..
கனவுகளில் தொலையும்
நிமிடம் வரை..
உன்னோடு.. உனக்காகவே
வாழ ஆசைப்படுகிறது
என் காதல்.
.....................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Jan 9, 2009

முதற்கனவே..


















சட்டென நினைவுக்கு வருகிறது..
உனக்கும் எனக்குமான நிகழ்வுகள்..
சடசடவென பேரிரைச்சலுடன்
நம்மை கடந்து செல்லும்
அதிவேக ரயிலை போல்தான் ..
கண்மூடி கன நேரம் நின்றாலும்
இதமாய் வந்து இம்சை செய்துவிட்டு போகிறது..
முற்றுபெறா முதற்காதல்..

வகுப்பறைக்குள் நுழைந்த
மறுகணமே ஏகாந்தமாய்
என் மீது விழும்..
உன் பார்வை பனிமழையும்..
உன் புன்னகை பூமழையும்..

ஒரே வரிசையில்
அமர்ந்ததினாலோ என்னவோ..
இடம் மாறிக்கொண்டவை
ஏடுகள் மட்டுமல்ல..
நம் இதயங்களும்தான்.

வருகை பதிவேட்டில்
அடுத்தடுத்து பெயர்கள்
அதிர்ஷ்டமாய் அமைந்திருக்க..
எல்லோரும் வரிசையாய்
'பிரசன்ட் சார்' சொல்லிக்கொண்டு வர
நீ பார்ப்பாய் என்பதற்காகவே
கூப்பிடும் வரை
'பிரசன்ட் சார்' சொல்லாமலிருந்தவன் நான்.

பாடம் சொல்லும் பத்ரகாளி
வகுப்பறைக்குள் நுழையும் போதே
என் பெயர் சொல்லி ஏதேனும்
ஒரு வினா கேட்டுக்கொண்டே வர..
'இதே பொழப்பா போச்சு'
மூச்சுவிடாமல்
முனகிக்கொண்டே நான் எழுந்து நிற்க..
'களுக்'கென்று
ரகசியமாய் சிரித்துகொள்வாய்..
ரகசியங்களை ரசிக்கவே
பலமுறை பதில் சொல்லாமலிருந்தவன் நான்.

மகிழ்ச்சியாய் மட்டம் தட்டிவிட்டு
மறுநாள் வந்து வருகை பதிவேட்டை பார்க்கையில்..
உன் பெயருக்கு நேராய் மதியம்
விடுப்பென இருக்கும்..
சட்டென நிமிர்ந்து பார்க்க புரியாத
ஒரு பார்வை பார்ப்பாய்..
சடசடவென மழைத்துளி விழ ஆரம்பிக்கும்
பூமியில் அல்ல.. என் மனதில்..
புதிர்கள் புரிவதற்காகவே
பலமுறை விடுப்பு எடுத்தவன் நான்..

பாடம் படிக்கிறோமென
மரத்தடியில் அமர்ந்து
புத்தகங்களை படிக்காமல்
புன்னகைகளை படித்த
நாட்கள்தான் எத்தனை..

ஏதாவது பேசலாமென்று
எதிர்பார்த்து எதிரே வரும்போது
ஏதும் பேசாமல் ஏகாந்தமாய்
கடந்து சென்ற நாட்கள்தான் எத்தனை..

அத்தனைக்கும் அச்சாரமாய்
ஆட்டோகிராபில் அழுத்தமாய்
பதித்து தந்தாய் உன் இதயத்தை..
அள்ளிக்கொள்ளத்தான் ஓடோடி வந்தேன்..
உன் அழகு விழிகள் அழுதுவிடுவேன் என
மிரட்டியதால் தள்ளி சென்று விட்டாய்..

ஒருவேளை என்னைபோலவே
நாம் அமர்ந்திருந்த
நம் வகுப்பறையும்..
நாம் அமர்ந்திருந்த அந்த
மர நிழலும் . .
இன்னும் சொல்லிக்கொண்டிருக்குமோ..
சொல்லாமற்போன நம் காதலை..

மீண்டும் சொல்கிறேன்..
சடசடவென பேரிரைச்சலுடன்
நம்மை கடந்து செல்லும்
அதிவேக ரயிலை போல்தான் ..
கண்மூடி கன நேரம் நின்றாலும்
இதமாய் வந்து இம்சை செய்துவிட்டு போகிறது..
முற்றுபெறா முதற்காதல்..
..........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Jan 3, 2009

என் ராசாத்தி..

உன் குறுநகையின்
ஓசை கேட்க
குயில் கூவ
மறக்குமடி..
உன் செந்தூர
பார்வை பட
செந்தாழம்பூ
மலருமடி..
நீ தாளெடுத்து
நடக்கையிலே
தாமரைப்பூ
மயங்குமடி..
உன் கொலுசு
சினுங்கையிலே
கொண்டசேவல்
வியக்குமடி..
உன் கூந்தல்
தழுவும் தென்றல்
நாணப்பட்டு -
மயக்கம் கொண்டு
பூக்கள் மீது
காதல் கொள்ளாதோ..
ஒரு வார்த்தை
நீ பேச - என் ராசாத்தி
என் உயிரும்
கரையாதோ..
..................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .