..........................................
ஆர்பாட்டமான
கடற்கரையில்
அமைதியாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்
சட்டென்று சிறு வாக்குவாதம்
உனக்காக சாகவும்
தயார் என்கிறாய் கண்ணில் நீரோடு.
அமைதியாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்
சட்டென்று சிறு வாக்குவாதம்
உனக்காக சாகவும்
தயார் என்கிறாய் கண்ணில் நீரோடு.
ஹய்யோ.. இந்த காதலிகளுக்கு
கொஞ்சம் கூட அறிவே இல்லை..
அவர்களுக்காகவே வாழும்
நம் காதலும் அந்த காதலுக்காகவே
வாழும் நாமும்
அவர்களை இழந்துவிட்டு
எப்படி வாழ்வதாம் ?
யாராவது இந்த காதலிகளுக்கு
புரிய வையுங்களேன்.. ப்ளீஸ் ..
..........................................
எனக்கு மெரூன் ரோஜா
ரொம்ப பிடிக்கும்..
ஹய்யோ.. மல்லிகை
மனசை அள்ளுது..
பூக்களின் புராணம்
அடிக்கடி பாடுகிறாய்..
இனம் இனத்தோடுதான்
சேரும் என்பது
உண்மைதான் போல.
...................................................
" ஹாய் செல்லம்.."
"ம்"
"நான் ஒன்னு கேக்கட்டுமா"
"நீ என்ன கேப்பேன்னு எனக்கு
தெரியும்"
"அப்ப குடு"
"போடா நான் தரமாட்டேன்.."
முகம் வாட தொடங்கும்போதே
இச்சென்று பதிகின்றன
உன் இதழ்கள்..
ஹய்யோ..
உன் பிஞ்சு இதயத்தில் எப்படி
உன்னால் இவ்வளவு
காதலை சேர்த்து வைக்க முடிகிறது.
...................................................
"ஹலோ.."
"..........."
"ஹலோ .. ஹலோ.. ஹலோ.."
".........."
"இப்ப பேசறியா இல்லையாடா.."
" ஹாய் செல்லம்.."
"எரும மாடு.. தண்டம்..
எத்தனை ஹலோ சொன்னேன்
ஏன்டா பேசல"
" ஒண்ணுமில்ல..
என்னோட மொபைல்ல
மழை பெய்யுதோன்னு
சந்தேகமா இருந்துச்சி ..
அதான் பாத்துட்டு இருந்தேன்.."
"ச்சீய்.. போடா.."
ஹய்யோ.. எவ்வளவு அழகாய்
இனிக்கிறது உன் "ச்சீ .. போடா".
.............................................
"ஏண்டீ.. உங்க அப்பா
அம்மாவுக்கு அறிவே இல்லையா.."
" டேய் .. என்ன வம்புக்கு இழுக்காத..
நான் கோபமா இருக்கேன்.."
"பின்ன என்னடி..
உனக்கு இப்படி பேர் வச்சிருக்காங்க"
" எங்க பேருக்கு என்னவாம்?"
"உன்ன கூப்டும்போதெல்லாம்
இனிக்குது..
கம்முனு சர்க்கரைனு வச்சிருக்கலாம்"
"ஆரம்பிச்சுட்டியா.." ன்னு நீ
ஆரம்பிக்கும்போதே
ஆரம்பிக்கிறது உன் வெட்கம்.
ஹய்யோ.. வெட்கத்திற்கு
இத்தனை நிறங்கள் இருக்கிறதா.
.........................................................
அதான் பாத்துட்டு இருந்தேன்.."
"ச்சீய்.. போடா.."
ஹய்யோ.. எவ்வளவு அழகாய்
இனிக்கிறது உன் "ச்சீ .. போடா".
.............................................
"ஏண்டீ.. உங்க அப்பா
அம்மாவுக்கு அறிவே இல்லையா.."
" டேய் .. என்ன வம்புக்கு இழுக்காத..
நான் கோபமா இருக்கேன்.."
"பின்ன என்னடி..
உனக்கு இப்படி பேர் வச்சிருக்காங்க"
" எங்க பேருக்கு என்னவாம்?"
"உன்ன கூப்டும்போதெல்லாம்
இனிக்குது..
கம்முனு சர்க்கரைனு வச்சிருக்கலாம்"
"ஆரம்பிச்சுட்டியா.." ன்னு நீ
ஆரம்பிக்கும்போதே
ஆரம்பிக்கிறது உன் வெட்கம்.
ஹய்யோ.. வெட்கத்திற்கு
இத்தனை நிறங்கள் இருக்கிறதா.
.........................................................
ப் ரி ய மு ட ன். . லோ க நா த ன். .