Feb 13, 2010

என் மனதோடு நீ..

பாட்டி சொல்லும்
கதைகளில் வரும்
தேவதை பெண் நீ..
கதை கேட்கும்
பிரமிப்புகள் அகலாத
சிறுவன் நான்.
இன்னும் எத்தனை
நாட்களானாலும்
அதிசயம்தான் நீ எனக்கு.
...............................................
போகின்ற போக்கில்
என் வீட்டு தோட்டத்து
பக்கமும் வந்து போ..
அவை சாகா வரம்
பெற்று வாழ்வதை
பார்க்க ஆசையாக
இருக்கிறதெனக்கு.
............................................
கவிதை
மிகப்பிடிக்கும் எனக்கு..
உன்னை போலவே.
அதற்காக உன்னை
கவிதையென்று
சொல்லமாட்டேன்.
கவிதைக்குள்
அடங்காதவள் நீ.
...........................................
நான் சொல்லி
நீ ரசிக்கவோ..
அல்லது
நீ சொல்லி
நான் ரசிக்கவோ..
இன்னும் எத்தனையோ
மிச்சமிருக்கின்றது.
நமக்கான நேரங்களிருந்தால்
கண்டுபிடுத்து சொல்.
..........................................................
உன்னை சந்தித்த
நாள் நினைவில் இல்லை..
சந்திக்கபோகும் நாளும்
எதிரில் இல்லை.
ஆனாலும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்..
என் மனதோடு.
.......................................................
நீ என்ற
ஒற்றை பிம்பம்..
என்னில் கடக்கமுடியா
பெருவெளியாய்.
....................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.