Jun 20, 2010

வாழ்க்கை..

எதுவுமே இவ்வளவு
அழகாய் கற்றுதந்ததில்லை
வாழ்க்கையை..
வாழ்க்கையை தவிர.
.........................................................
வென்மேகத்திலிருந்து
இறங்கி வந்த
தேவதை ஒன்று
இரக்கம் இருந்தால்
கொஞ்சம் தாயேன் என்றது.
அதை இதயம்
இருப்பவனிடம் போய்
கேள் என்றேன்.
திரும்பி செல்ல
எவ்வளவு எவ்வளவு
தடுமாறியது தேவதை.
'ஐயோ.. பார்த்து '
என்றேன்..
சட்டென திரும்பி
'இப்படித்தானே
சக மனிதர்களிடமும்
நடந்து கொள்வாய்'
என்று சிரித்தது.

ம்.. இன்னும் நிறைய
ரௌத்திரம் பழக்க வேண்டும் மனதை.
.....................................................................
எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.
..........................................................






Jun 16, 2010

நேசம்..

காலங்கள் மாறிவிட்டன..
கனவுகளும் கரைந்துவிட்டன..
காயங்கள் மட்டும்
இன்னும் ஆறாமல் அப்படியே..


தனிமையில் நெஞ்சம்
தறிகெட்டு ஓடுது..
நினைவுகளின் பிடியில்
சருகாய் ஆகுது.


சுடும் நெருப்பென்று
தெரியாமல்
சுகமளிக்கும் பனிதுளிஎன்று
சேர்த்துவைத்துவிட்டேன் உன்
புன்னகைகளை என்னிதயத்தில்..

எரியும் நிலவென்று
தெரியாமல்
சிரிக்கும் பூவென்று நினைத்து
பதித்துவைத்துவிட்டேன்
என் கண்களில் உன் முகத்தை..

முட்களோடுதான் வாழ்க்கை
என தெரிந்தும் சிரித்துக்கொண்டே
மலர்ந்திருக்கும் ரோஜாவை
போல்தான் நானும்..

ம்ம்.. ஆண்டாண்டு காலம்
கடந்தாலும் உனக்கான என்
பிரியங்களை ஒருபோதும்
உணரபோவதில்லை நீ..

என் காலம் உள்ள
காலம் வரை உன் மீதான
என் பிரியங்களும் கரையப்போவதில்லை...
.......................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.