Jun 18, 2014

பேரன்பின் சாட்சி..!

பேசிக்கொண்ட வார்த்தைகள்
யாவும் முற்றுப்பெற்று
உறைந்து..
பார்த்து சிரித்த கண்கள்
இன்று மெளனமாய் புதைந்து..
எதிர்பார்த்த நேரங்களெல்லாம்
கரைந்து எதிர்ப்பட தயங்கி..
ஏந்திக்கொள்ளும் நினைவுகளை கூட
புதைத்து வைத்து..
இப்போதெல்லாம் ஏதேனும்
ஒரு தனிமை நினைவில்
சட்டென தெறித்து விழும்
ஒற்றை கண்ணீர் துளி மட்டுமே

பேரன்பின் சாட்சியாய்..!
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.