Aug 29, 2014

இந்த இரவு..


எதிர்ப்படும் ஏதோவொரு
சம்பவம் போல்
அத்துனை எளிதாய்
கடந்துவிடப்போவதில்லை
இந்த இரவு..
மாறாக இதயத்தின்
அடிவேர் வரை நிதானமாய்
ஊடுருவ ஆரம்பித்து
சாத்தியமில்லா இருத்தலை
நிலைப்படுத்த முயற்சித்து
கொல்லும்.

எழுதி முடித்தவுடன்
காய்ந்து விடும்
பேனா மையைப்
போல் சட்டென்று
முடிந்துவிடப்போவதில்லை
இந்த இரவு
மாறாக அக்கவிதையின்
வார்த்தைகள் சுமந்து கொண்டிருக்கும்
வலிகளைப்போல்
உன் ஞாபகங்களை
சுமந்து கொல்லும்.

எதற்கும் கொஞ்சம்
தள்ளியே நில்..
ஞாபக தனலாய் தீண்டி
வெம்மையாய் கழிவதற்கு
பதிலாக வெறுமையாய்
கழிந்துவிட்டு போகட்டும்
இந்த இரவாவது.
*******************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.