Mar 18, 2009

செல்லமடி நீ எனக்கு . .

"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.. செல்லம்மா.."
"என்னடா.."
"ஒண்ணுமில்ல..
சும்மா கூப்டலாம்னு தோனுச்சு ..
அதான் கூப்டேன்"
"ஏய்.. சனியண்டா நீ.."
"உங்க ஊர்ல பொண்ணுங்கல்லாம்
சனியனுங்களதான் காதலிப்பீங்களா.."
" கிறுக்கனாடா நீ.. "
"உன்ன மாதிரி கிறுக்கிய
காதலிச்சா கிறுக்கனாதானே
இருக்க முடியும்.."
"டேய்.. ஒழுங்கா பேசுடா..
எனக்கு கோபம் வருது.."
"எங்க ஊர்ல கோபம் வந்தா
கட்டிபுடிச்சு முத்தம் தருவாங்க.."
"ஹேய்ய்.. பொறுக்கி..
நீ அடங்கவே மாட்டியாடா.."
" அட.. சிறுக்கி..
நீதான் அடங்கவே விடமட்டேங்குறியே.."
"இதுக்கு மேல பேசுன..
மவனே நானே உன்ன கொன்னுடுவேன்டா.."
என்னோடு நீ செல்லமாக
மல்லுகட்டும் அழகிற்காகவே
உன்னை அடிக்கடி சீண்ட
தோன்றுகிறது எனக்கு.
.............................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Mar 17, 2009

காலம் உள்ள காலம் வரை . .


மஞ்சள் முகத்தழகி மயக்கம் தரும் பேரழகி
மன்னன் இவனென மனதோடு நினைத்ததென்ன
சின்ன கொடியிடையாள் சிதறடிக்கும் பூவிழியாள்
சிங்கார கூந்தலிலே என் மனதை முடிந்ததென்ன
கோடி மலரெடுத்து கொடிமலரின் பாதம் நான் தூவ
கொண்டவனை நீ நினைத்து விரலாலே கோலம்போட
நின் மடியோடு சாய்ந்து நீங்காமல் வாழ்ந்திருப்பேன்
உன் வாழ்வோடு கலந்தோடி வளமாக பூத்திருப்பேன்
ஆசைகள் கோடிகோடி அலுக்காமல் சொன்னதென்ன
அத்தனையும் மூடிவச்சு அழுதுகொண்டு போனதென்ன
பொழுதிருக்கபொன்மனசிருக்கபோனதெங்கேபொன்மயிலே
காலமுண்டுகாதல்நெஞ்சமும்உண்டுகாணவில்லைகண்மணியை
வயதிருந்தும்வண்ணகனவிருந்தும்வாழ்வதற்குமனமில்லை
எச்சங்களால்இதழ்நனைத்தோம்எதற்காகபிரிவுஅறிந்தோம்
ஏன் இந்த ஏக்கங்கள் எதற்கிந்த தவிப்புகள்
விழியெல்லாம் மழையாக மனமெல்லாம் நினைவாக
மங்கயுனை மறந்துவிட மரணத்தை நேசிக்கிறேன்
காலங்கள் மாறிவிட கண்ணீரும் காய்ந்து விட
சொந்தங்கள் கூடி வந்து செல்வம் பல தந்திடினும்
என் காலம் உள்ள காலம் வரை கன்னியுந்தன்
மடி சாய்ந்த நினைவாலே வா ழ் ந் தி ற ப் பே ன்.
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Mar 7, 2009

செ ல் ல ம் மா . .

இப்போதெல்லாம்
கோவிலுக்கு சென்றால்
உன்னைவிட
எனக்காக அதிகம்
வேண்டிக்கொள்கிறேன்.
கடவுளைவிட
என் காதல்மேல்
நம்பிக்கை அதிகம் எனக்கு.
அது உன்னை நன்றாக
பார்த்துகொள்ளும் என்று.
.........................................................
எதற்கும் தயங்காமல்
அவ்வப்போது கொட்டி
தீர்த்துவிடும்
மழையை போல்தான்..
சமயங்களில்
என்னை
திணற திணற
நனைத்துவிடுகிறது..
உன் காதல்.
.................................................
எனக்கு தெரிந்து
எந்த பூவும்
அருகில் சென்றாலே
முகம் சிவப்பதில்லை..
உன்னை தவிர.
...............................................
நீ செல்லம் கொஞ்சும்
அழகிற்காகவே
இன்னும்
குழந்தையாகவே
இருக்கிறது
என் காதல்.
............................................
ஆசை பட்டு
கேக்குது மழைச்சாரல்..
குடை இல்லாமல்
வா வெளியே..
வெட்கம் விட்டு
கேக்குது பூந்தோட்டம்..
ஒரு புன்னகை
தந்துவிட்டு போ பெண்ணே..
நெஞ்சம் தொட்டு
கேக்குது என் காதல்..
முத்தமொன்னு
வச்சுவிட்டு போ உயிரே.
........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .