இத்தனை வயசாகியும்
இப்போதும் சின்னக்குழந்தையாய்
உண்டியலில் காசு
போட்டு வைக்கும்
பழக்கம் உனக்கு.
ஏன் எனகேட்க
ஒருநாளைக்கு யாருக்கேனும்
உதவுமே என்பாய்.
உடனே மண்டியிட்டு
கத்தத்தோன்றும்
எனக்கு.
நீ காசு சேர்த்து
வைப்பதைப்போல்
நான் காதல் சேர்த்து
வைத்திருக்கிறேனடி
உனக்கு மட்டுமே
செலவழிக்க வேண்டுமென்று!
********************************
ப்ப்ரியமுடன்..
லோகநாதன்.