Aug 13, 2010

உடைந்த நிலவு..கலையாத வெளிச்சம்..


சுய விருப்பங்கள்
தொலைத்து
விருப்பப்படிவாழவோ
அல்லது வாழ வைக்கவோ
மிக கவனமாய்
போராடிக்கொண்டிருக்கும்
எண்ணற்ற மனிதர்களில்
நானும் ஒருவன்.

என் வழியில்
ஏய்ப்புகள் இல்லை..
ஏமாற்றங்கள் உண்டு..
அகங்காரங்கள் இல்லை..
ஆசைகள் உண்டு..
போகின்ற வழிகளெங்கும்
ஆசைகளை விலையாய்
கொடுத்து ஏமாற்றங்களை
வாங்கி குவிக்கிறேன் இதயத்தில்..

எந்திரமாக்கிவிடுமென
பயந்து இதுவரை தள்ளியே
நின்றிருந்தேன் ..
சூழ்நிலைகளிடமிருந்தும்
சமூகத்திடமிருந்தும்.
ஆனாலும் மனதை
மெல்ல மெல்ல அழுத்துகிறது
கடமை எனும் பெயரில்
சூழ்நிலைகள்..

முகம் காட்ட
முடியாது உன்னால்..
எனக்கே எனக்கென்று
இன்னும் மீதமிருக்கும்
சில நேரங்களிலாவது
வந்து போ..
இருள் சூழ்ந்த இரவின்
கருப்பு நினைவுகளாய்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.