Dec 27, 2010

எனக்கான ஒரு மனம்.






எதேச்சையாய் கரம் பற்றி இழுக்கும்போது
எதிர்பாராமல் உடைந்த கைவளையை பார்த்து
"ப்ச்..போச்சே.." என்றதற்கு..
"விடு..விடு..
சேலைன்னா கசங்கணும்
வளையல்னா உடையணும் "
என்று சொல்லி சத்தமில்லாமல்
உடைக்க ஆரம்பிக்கிறாய் என் வயதை.
******************************************
தென்றல் கூட வழக்கத்திற்கு மாறாய்
கோக்குமாக்காக வீசுகிறது..
உன் முந்தானை வாசம் திருடிய கிறக்கத்தில்.
எப்போதும் உன் வாசம் மட்டுமே பற்றிகொள்ளும்
என் காதல் மட்டும் சும்மாவா இருக்கும்?
**************************************
எதேச்சையாய் ஆற்றங்கரையோரம் வந்த
உன்னை பார்த்து இரு மீன்கள் பேசிக்கொண்டன.
" அட.. நம் இனம் தண்ணீருக்கு வெளியேயும்
வாழ முடிகிறதே.."
கேட்டதும் நான் மெல்ல புன்னகைத்தேன்.
நீ கொஞ்சமே கொஞ்சமாய் வெட்கப்பட்டாய்.
என் புன்னகையால் எதுவும் நிகழவில்லை.
ஆனால் உன் வெட்கத்தால் மெல்லமாய்
சிவக்க ஆரம்பித்தது அந்தி வானம்.
********************************************
"எல்லோருக்கும் ஒரு மனம்
எனக்கென்று ஒரு மனமும் வைத்திருப்பதில்
தவறில்லைதான்..
ஆனால் அதை என் சொல்பேச்சு
கேட்க விட்டால் குறைந்தா போய்விடுவாய் ?"
"ஐ.. அஸ்கு புஸ்கு.."
பழிப்பு காட்டிக்கொண்டே ஓட ஆரம்பித்தாய்.
ஹய்யோ.. இன்னும் கொஞ்ச நேரமேனும்
இங்கேயே இரேன்..
எனக்கான அந்த மனம் உன் வெட்க்கத்திடமோ
அல்லது அது சார்ந்த எதோ ஒன்றிடம்
மன்றாடிகொண்டிருப்பதாய் படுகிறது எனக்கு.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.


Dec 20, 2010

அழகிற்கெல்லாம் அழகு..

ஒருமுறை வெட்கப்பட்டு காட்டு
என சொன்னால் முறைக்கிறாய்..
ம்ம்.. ஒரு முறை கொஞ்சமே கொஞ்சமாய்
கோபப்பட்டு காட்டேன் என்றால்
சீய்.. போடாவென வெட்கப்படுகிறாய்..
கிறுக்கியாடி நீ?
**************************************
ஹய்யோ.. பகலிலேயே இப்படி
பொறுக்கித்தனம் செய்கிறாயே
இரவில் என்னவெல்லாம் செய்வாய் என
கன்றிப்போன உதடுகளை ஈரம்
செய்துகொண்டே முறைக்கிறாய்..
நான் வேறெதுவும் செய்யபோவதில்லை..
விடியாத இரவுகள் மட்டும் செய்து
வைத்துக்கொள்வேன் அவ்வளவுதான்.
***********************************
என்னதான் ஆடைகள் அணிந்து
ஒய்யாரமாக வந்தாலும்
அழகாக மட்டும்தான் தெரிகிறாய்.
ஒரு முறை என் காதலையும்
சூடிக்கொண்டு வந்துதான் பாரேன்
அழகிற்கெல்லாம் அழகு
பேரழகாய் தெரிவாய்.
*************************************
அழகு செய்கிறேனென நீ வைக்கும்
நெற்றிபொட்டு கூட உன்னைக்கொண்டு
தன்னை அழகு செய்துகொள்வதை போல
உன் மனதோடு வாழ்ந்து தன்பிறவி
பயனை அடைய நினைக்கிறது என் காதல்.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 16, 2010

நட்பூபூபூ.. பூ... பூ ..

கடந்த சனிகிழமை . நேரம் நாலு மணி
நாம்பாட்டுக்கு சிவனேன்னு ஆபீஸ்ல உக்காந்து வேலைய பாத்துட்டு இருந்தேன்.( என்ன வேலைன்னு கேக்காதீங்க நானே சொல்லிடறேன். வேறென்ன பண்ணுவம்? மொக்கைதான்.)

"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
ஆஹா..எவனோ ஆரம்பிசுடானேனு பயந்துட்டே செல்ல எடுத்து பாக்க நம்ம பங்காளி பயபுள்ளை..
" ஹலோவ்.."
" ஹலோவ்.."
"ஹலோவ்.."
"ஹலோவ்..'
"இங்கிட்டு லோகுங்க ..அங்கிட்டு..?"
" டேய்..வெளக்கெண்ணை.. நாந்தாண்ட பேசுறேன்.."
"தெரிது..தெரிது.. சொல்லு பங்கு.."
"எங்கேடா இருக்க?"
"எங்க இருக்கணும்?"
" சொர்கத்துல இருக்கோணும்..போறியாடா.. மாலை வாங்கிட்டு வரேன்.. கேக்குறான் பாரு கேள்வி.."
"ஆபீஸ் தான்.."
"அதானே பார்த்தேன் .. கழுதை கேட்ட குட்டிசெவுறு.."
(நம்ம வேலைக்கு போறத என்னமா நெனசுட்ட்ருகானுங்க..க்க்ராதகர்கள்..)
" என்னடா சொல்லி தொலை.."
"ஒரு ஆறு மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாப் வாடா.."
"டேய்.. எனக்கு ஆபீஸ் ஏழு மணிக்கு.."
"எல்லாம் தெரியும் ..வந்து சேருடா.. ரொம்ப முக்கியம்.. பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றோம்.."
மறு வார்த்தை பேசும் முன் இணைப்பு கட்.

பண்றோமா? அப்டீன்ன என்னவாக இருக்கும்? யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் சொன்ன அதே கழுதை கெட்ட குட்டிசெவுறு ஞாபகம் வந்தது. ம்ம்..அப்போ அதுக்குதான் கூப்ட்ட்ருபானுங்கலோ..
போய்தான் பார்ப்போமே. சரியாக ஐந்து ஐம்பதுக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்க..
" எண்டா.. இதன் வர டைமா? கல்யாணத்துக்கு வர சொன்னா புள்ள பொறந்ததுகப்ரம்தான் வருவியாட..?"
( என்னா ஒரு உதாரணம் )
" டேய்..சொன்ன டைமுக்கு முன்னாடியே வந்தாச்சு.இதுக்கு மேல பேசின கொரவளைய கடிச்சு துப்பிடுவேன்.. ஜாக்ரதை.."
" சரி..சரி.. வாடா போலாம்.."
"எங்கேனு சொல்லவே இல்லியேட.."
" அது ஒண்ணுமில்ல பங்கு.. எனக்கு பொண்ணு பாத்துட்டாங்க.. நாளைக்கு பேசி முடிக்க வரசொல்லிட்டாங்க.. அதுக்குதான் ட்ரீட் வைடா எனக்கு.."
( இது எப்பருந்து ஆரம்பிச்சங்கனு தெரிலையே..ஆண்டவா..)
"டேய்..கல்யாணம் உனக்கு.. ட்ரீட் நானடா.. அதெல்லாம் இங்க நடக்காது ராசா.."
"டேய்.. பங்கு.. நாமல்லாம் அப்டியா பழகுனோம்..?"
( அஹா..ஒரே வார்த்தைல ஆப் பண்ண கத்து வச்சிருக்கானுங்களே..)
" சரி.. வாடா.. பொய் தொலையலாம்.. ஆனா வீட்டுக்கு போயிடுதான் வருவேன்.. காணோம்னு தேடுவாங்கடா.."
" அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. பேக்க குடு இங்கியே கடைல வச்சுட்டு போலாம்.."
.
.
.
" டேய்.. உனக்கு ஒரு பீர் போதும்தானேடா.."
" இல்லடா.. நீ வாங்குரதுலையே எனக்கும் சேத்து வங்கிக்கோ.."
எதோ சொல்ல கூடாததை சொன்ன மாதிரி என்ன மேலும் கீழும் பாத்துட்டு.. சரிடா என்றான்.
" எங்க போலாம்டா?"
"எங்கும் வேணாம் இங்கயே பாத்துட்டு.. சாப்டு போய்டலாம்ட.. இனி வீட்டுக்கு போய் சாப்ட முடியாது."
"சரி வாட.."

உள்ளே போகவும்.. அங்கே ராஜ வரவேற்ப்பு அவனுக்கு. எங்கல்லாம் பழக்கம் புடிச்சு வச்சிருக்கானுங்க.
ஒரு அரை மணி நேரம் கழிச்சு..
"டேய்.. பங்கு.."
"என்னடா வெளக்கெண்ணை..?"
"இன்னும் ஒரு ரவுண்டு..."
"சொல்லுடா பங்கு.. கடையே நம்மோடதுதாண்டி.."
அங்கேயே ஆரம்பித்தது சனியன்.
" ஹலோ அண்ணா.. நா சிகரெட் கேட்டு ஒரு மணி நேரமாச்சு.. இன்னுமா கொண்டு வர?"
( இவன் எப்ப கேட்டான் நமக்கு தெரியாம)
" என்னப்பா நீ கேக்கவே இல்லல்ல?" இது கடைக்காரர்.
"அதான் இப்போ கேக்குரமுள்ள..போ..பொய் கொண்டு வா.."
"டேய்..பங்கு.."
"ஆஹா.. பசிக்குதுடா.. வா போலாம்.."
.
.
.
" வாங்கப்பா.. எங்க இப்போல்லாம் கடை பக்கமே காணோம்.."
"யோவ்.. எங்கள பாத்தா உனக்கு அப்பன் மாதிரி தெரிதா.."
"அட அதுக்கில்லப்பா.."
"அதான் வந்துட்டமுள்ள.. இலைய போடறது.."
"சரி உக்காருங்க.."
"என்ன சாப்ட்றீங்க?"
"அதெல்லாம் நாங்க சொல்லிகறோம்.. நீங்க பொய் கல்லா பொட்டிய பாருங்க.. எவனாச்சும் அமுக்கிர போறான்.. மச்டர்ர்.. ரெண்டு செட்டு தோசை.."
.
.
"யோவ்.. மாஸ்டர்.. நா ஒரு அம்லேட்தனே கேட்டேன்.. உன்ன யாரு ரெண்டு வெக்க சொன்னா?"
"டேய்..பங்கு.. ஒன்னுதண்ட இருக்கு.. கம்னு கொட்டி தொலை.."
மணி பார்க்க ஒன்பது ஆகியிருந்தது.
" டேய் பங்கு போலாம்டா.."
"ம்ம்.. வண்டிய எடுத்துட்டு வா.. போலாம்.."
" அந்த பேச்சுக்கே எடமில்ல.. என்னால ஓட்ட முடியாதுட.."
" என்னாலும் முடியாதுடா பங்கு.."
ஒரு பத்து நிமிட அலசலுக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான்.
" விட்றா.. எல்லாம் எங்க அப்பன் வீடு ரோட்தானே.. வா போவோம்.."
ஹய்யோ.. அம்லேட்டே ரெண்டா தெரிஞ்சதே இவனுக்கு.. ரோடு நாலா தெரியுமே.. மறுபடியும் ஆலோசனையில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினோம். கடைசியில் ஒரு ஜென்டில் அக்ரீமென்ட்.
வண்டியை ஸ்டாண்டில் போட்டுவிட்டு இருவரும் பஸ் ஏறி போவதென்று. அங்கே பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து போவதென்று ஒருமானதாய் தீர்மானம். எப்டியோ பஸ் ஏறி நம்ம ஊர் பஸ் ஸ்டாப்பில் இறங்கியாச்சு. இனி ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே..
" டே..பங்கு.. ரீ சார்ஜ் பண்ணலாம்டா.."
"வந்து தொலை.."
" அக்கா.. ஏர்செல் நூறு ரூபா கார்டு இருக்கா?"
"இருக்குப்பா.."
"அப்போ எனக்கு ஒரு பத்து ரூபாய்க்கு ஈ சி பண்ணிவிடுங்க.."
(டேய்..அக்கா அடிசிற போறாங்கடா)
"நம்பர் சொல்லுப்பா.."
"நோ டெல்லிங்.. ஒன்லி மிஸ்டு கால்.."
ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு நடராஜா சர்வீசை தொடங்கினோம். வழியில் பண்ணாத அலப்பறை இல்லீங்க. சொன்ன உங்க காதுல ரத்தம் வந்துடும். இந்த குளுருல ராத்திரி பதினோரு மணிக்கு கெணத்துல குதிச்சு குளிச்ச புண்ணியமெல்லாம் கெடச்சது எனக்கு. ஒருவழியா வீட்டுக்கு வந்து படுக்கும் போது தோனுச்சு..
இனிமேல் இந்த பொழப்பு ஆகாது.
மறு நாள் காலைலயே கெளம்பியாச்சு.. பிரண்ட் வீட்டுக்கு போறேன்னு.. ( பின்ன .. இருந்தா ஆயிரத்தெட்டு கிராஸ் கொஸ்டியன்ஸ் வரும்.. சமாளிக்க தெம்பில்ல... அதன் இந்த பொழப்பு.)
மணி மதியம் ரெண்டு இருக்கும்..
"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
எடுத்து பாத்தா பங்காளி பயல்.
" டேய்..பங்கு.. எங்க இருக்க.."
" பிரண்ட் வீட்லதா.. ஏன்டா?"
" ஒண்ணுமில்ல.. உங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேடா.."
"ஐயோ.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடறேண்ட.."
" வேண்டாம்டா.. நா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடு ஊசி போட்டுட்டு வந்தாச்சு.. மாத்திரை வாங்கிருக்கு .. வந்தவுடன் பாத்து குடுத்துடு.. ஒ.கே வ?"
"சரிடா.. வச்சிரு.. நா வந்திடுவேன் அரை மணி நேரத்துல.."

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்னு சொல்லுவாங்க. அப்டியேதாங்க.. கெட்டு குட்டிசுவர் ஆனாலும்.. ஆக்குனாலும்.. நண்பன் நண்பன்தாங்க.
-------------------------------------------------------------------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 14, 2010

ஹய்யோ..வெட்கம்.

நீ அணிந்திருக்கும்வரைதான் என்றில்லாமல்
களைந்தெறிந்த பின்பும் உன் வெட்கங்களை
பூசிக்கொண்டு ஜொலிக்கும்
உன் உடைகளை போல்தான்..
நீ முத்தமிட்டு சென்றபின்பும்
அந்த சுவடுகளினூடே நின்றுகொண்டு
திரும்ப வரமாட்டேனென்று
அழிச்சாட்டியம் செய்கிறது மனசும்.
*********************************************
எப்போதெல்லாம் உன்னோடு
பேசிக்கொண்டிருக்கிறேனோ அப்போதெல்லாம்
என் நேரங்கள் போவதே தெரிவதில்லை என்கிறாய்.
அடி பாவி.. நானா உன் நேரங்களை
திருடுகிறேன்.. அந்த வேலையை
உன் வெட்கங்கள்தனே செய்கின்றன என்றதற்கு..
அதற்கும் காரணம் நீதானே என்கிறாய்
வெட்கப்பட்டுக்கொண்டே.
**********************************************
" இந்த மருதாணியை பாரேண்டா..
எவ்வளவு அழகாய் சிவந்திருக்கு..
இப்டி சிவந்து நா பாத்ததே இல்லடா.."
" ம்ம்.. நல்லாதானிருக்கு..
ஆனா இதவிட அழகா சிவந்ததைஎல்லாம்
நா பாத்திருக்கேனே.."
"இன்னும் சிவக்குமா?
எங்க பாத்த?"
" உன் கன்னத்துலத்தான்..
ஒருமுறை வெட்கப்பட்டு காட்டேண்டி.."
.
.
" ஏய்.. நா ஒருமுறைதானே சொன்னேன்..
அதுக்குள்ள ஒரு வெட்க்ககுளியலே நடத்திட்ட?"
"ஏய்.. சும்மா இருடா.."
ம்ம்.. எங்கிருந்துதான் வருமோ
இந்த பெண்களுக்கு மட்டும்.
************************************
எதிரே வரும் என்னை பார்த்ததும்
உன் கண்கள் சிரிப்பது இயல்புதான்..
அனால் உன் கைகள் உடைகளை
சரி செய்கின்றனவே ஏன்?
மறைக்கிறையா.. இல்லை ஞாபகம் செய்கிறாயா?
*********************************************
என்னிடம் மிகப்பிடித்தது
என்னவென்று கேட்டாய்..
அதெல்லாம் சொல்லக்கூடாதது
என்று சொன்னதற்கு
முறைத்தால் என்னடி நியாயம்?
****************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 9, 2010

நான் + நாம்..

தயக்கமின்றி பேசிய
வார்த்தைகளெல்லாம்
தள்ளி செல்ல மறுத்துவிட்டன.
தவணை முறையில்
தந்த முத்தங்களெல்லாம்
தயக்கமின்றி கொல்கின்றன.
குறுகி போய் ஒரு வட்டத்திற்குள்
அடைபடும் முன்
வந்துவிடு வசந்தங்களாய்..
ஒருமுறையேனும்.
---------------------------------------------------------------
நான் கேட்காமலேயே
உன் பிரியங்களை
வரங்களாக்கி தர
தெரிந்திருந்தது உனக்கு.
கெஞ்சி கேட்டும்
பிரிவுகளை தள்ளி போட
முடியவில்லை உன்னால்.
----------------------------------------------------------

அவள் என்னோடு
பழகியது வரங்களாக
இருக்கலாம் எனக்கு.
நான் அவளோடு
பழகியது சாபங்களாகி
போய்விட்டதே..

வரங்களை மறுக்கலாம்..

சாபங்களை என்ன செய்ய?
-------------------------------------------

நான் அவளுடன் இருந்த
நேரங்கள் குறைவுதான்..
அனால் அவள் என்னுடன்
இருந்த.. இருக்கபோகும்
நேரங்கள் மிக அதிகம்.
முன்பு நிஜமாகவும்..
கனவாகவும்..
இனி நினைவாகவும்..
கண்ணீராகவும்.
-------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 8, 2010

மூச்சு விடும் ரோஜாப்பூ..

ப்ரியமுடன்..

லோகநாதன்.

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..

கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம்
உன் கண்களை உற்று பார்த்து விடாதே..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்
உன் நேரங்களை அல்லது சந்தோஷங்களை
பறித்து விட கூடும்.
**********************************
காலை பனியாய்..
மாலை மயக்கமாய்..
சிரிக்கும் பூக்களாய்..
வெடிக்கும் ஆசைகளாய்..
கடக்கும் காலம் முழுதும்
காதலாய் உன்னை
சுமக்க வேண்டுமென்றேன்..
பதிலாக நினைவுகளையேனும்
தந்து சென்றாயே..
செல்லம்தானடி நீ எனக்கு.
*******************************
நீ.. உன் வார்த்தைகள்..
உன் மனம்.. அதன் வாசங்கள் என
உன்னை சார்ந்த எல்லாவற்றையும்
நேசிக்க கற்றுகொண்டவன் நான்.
உன் பிரிவுகளை மட்டும்
வெறுத்து விடுவேனென
நினைத்து விட்டயாடி முட்டாள் பெண்ணே..
*************************************
பூவும் வாசம் போல
இணைந்திருந்தோம் நீயும் நானும்.
பூக்கள் போல வாடிவிட்டேன்
உன் பிரிவுகளினால்..
ஆனாலும் வாடிய பூக்களின் வாசங்களாய்
உன் நினைவுகள் மட்டும் என்னுடனே.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 4, 2010

மறந்து விடுகிறேன்..

கலைந்து கொண்டிருப்பவை
எல்லாமே கனவுகள் அல்ல..
சமயங்களில் நிஜங்களும்
கலைந்து கதறுகின்றன.
தூக்கி எறிபவை
எல்லாமே குப்பைகள் அல்ல..
சமயங்களில் பிரியங்களும்
தூக்கி எறியப்பட்டு
ஊமையாய் அழுகின்றன.
கடக்கும் காலங்கள் எல்லாம்
கண்களில் ஏந்துகிறேன்
கிடைக்கும் தனிமைகள் எங்கும்
நினைவுகளில் தேடுகிறேன்
பூக்கள் வாடிய பின்தானே
வாசங்களை உணர்ந்தேன்
மனது வலித்த பின்தானே
வார்த்தைகளை உணர்ந்தேன்..
என்னுடைய உண்மைகளை
சொல்ல வார்த்தைகள் இல்லை
உன்னுடைய நினைவுகளை
கலைக்க வழி இல்லை..
இழந்து விடுகிறேன் எல்லாவற்றையும்
உன்னை நினைக்கும்போது..
மறந்து விடுகிறேன் என்னையும்
உன்னை மறக்க நினைக்கும் போது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Nov 19, 2010

வசிய பிசாசு.

இப்பொழுதெல்லாம் என் காதலோடு
என் பொழுதுகளும் என்னை
கெஞ்ச ஆரம்பித்து விட்டன.
எப்பொழுதும் உன்னுடனே இருக்க சொல்லி..
சரியான வசிய பிசாசுடீ நீ.
********************************************
வேணாம்..வேணாமென
வாங்க நினைக்கிறாய்..
வேணும்..வேணுமென்றால்
தர மறுக்கிறாய்..
ஏனடி முத்தங்களில் மட்டும் இப்படி
முரண்பட்டு மூச்சடைக்க வைக்கிறாய்?
********************************************
கடந்து செல்லும் ஐஸ்கிரீம் வண்டியின்
மணிச்சத்தத்தை கேட்டுகொண்டே
பின்னோக்கி செல்லும் சிறுவனின்
மனதைபோல்தான்..
கடந்து செல்லும் உன்
முந்தானை வாசத்தை பற்றிக்கொண்டு
உன்னுடனே வந்துவிடுகிறது
என் மனசும்.
***********************************
தேவதைகள் ஊஞ்சலாடுவதை
பார்க்க ரொம்ப அழகாக இருக்குமாம்..
ஒருமுறை எனக்கு ஊஞ்சலாடி
கட்டுகிறாயாடீ செல்லம்.
************************************
கைகளில் மருதாணி வைத்திருக்கிறாயே
சேலை நான் கட்டி விடட்டுமா என
கேட்டதற்கு ஏனடி இப்படி முழிக்கிறாய்?
இன்னும் போக போக என்னவெல்லாமோ
கேட்பேனே அப்போது என்ன செய்வாய்?
*******************************************

எதுவுமே கொடுக்க கொடுக்க

குறைந்துகொண்டேதான் வரும்.

நம் காதலில் முத்தங்கள் மட்டும்

அதிகரித்துக்கொண்டே வருகின்றனவே.

********************************************

ப்ரியமுடன்..
லோகநாதன்.

Nov 9, 2010

பிரியங்களை என்ன செய்ய?



மிக அழகாய் பிறந்திருந்தும்
தனிமையில் தேயும் நிலவை போல்தான்
அநாதையாய் கிடக்கின்றன..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்.

எட்ட முடியா ஏகாந்தமென
தெரிந்திருந்தும்
'தேவதைகளின் தேவதை' என
செல்லம் கொஞ்சிய அரளிபூக்கள் அவை.

வார்த்தைகள் இல்லா
பயணத்தில் உன் நினைவுகளாய்
உருமாறி கொல்லும்
வன்கவிதைகள் அவை..

தூக்கமில்லா பின்னிரவுகளின் நீட்சியில்
முட்களாய் மாறி இதயத்தை வலிக்க செய்து
ரசித்து விழுங்கும் கொடுந்தீ ..

ஆனாலும் வார்த்தைகளால்
அவ்வப்போது காயங்கள் செய்ய
மட்டுமே முடிகிறது உன்னால்..
அவற்றை கொலை செய்ய
உனக்கும் தெரியவில்லை..
அவற்றுக்கும் தற்கொலை
செய்துகொள்ள தெரியவில்லை..

என்ன செய்ய நான்?
..............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Oct 29, 2010

ஹய்யோ.. முத்தம்.

யாருமே இல்லாதபோது
முத்தம் கேட்டால்
பழிப்பு காட்டுகிறாய்..
எல்லோரும் இருக்கும்போது
ரகசியம் சொல்கிறேனென்று
காதில் சொல்லாமல்
கன்னத்தில் சொல்கிறாயே..
நீ திருட்டு சிறுக்கியா..
முரட்டு ராட்சசியா.
நான் ஐந்தாறு கேட்க
நீயோ ஒன்ன்றே ஒன்றுதான்
என்கிறாய்.
சரி.. உனக்கும் இல்லை..
எனக்கும் இல்லை..
மூன்றாக வைத்துகொள்வோம்.
ஆனால் ஒவ்வொரு முத்தமும்
குறைந்தபட்சம்
அரை மணி நேரமாவது
தர வேண்டும்.
சரியாடி செல்லம்மா.
இனிமேல் கைவிரல்களில்
நகம் வளர்க்காதே என்றாய்.
'ஏன் அழுக்கு பிடிக்குமா'
என கேட்க
இல்லை..எனக்கு காயங்கள்
படுமே என்கிறாய்.
சரி.. வெட்டிகொள்கிறேன்.
ஆனாலும் ஒரு சந்தேகமடி..
நகங்களால் மட்டும்தான்
காயங்கள் செய்ய முடியுமா என்ன?
...............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Oct 26, 2010

ரசித்து விளையாடும் பொம்மை..

உனக்கும் எனக்குமான
அறிமுகங்கள் இயல்பாய் இருந்தன..
நமக்கான நிமிடங்களும்
மிக இயல்பாய் கரைந்தன..
நம்மிடையேயான கோபங்கள் கூட
மிக மிக இயல்பாய்தான்..
நம்மிடையேயான பிரிவுகள் மட்டும்
நெருடுகின்றன நெஞ்சை.
புன்னைகைக்கும் பூக்களிளெல்லாம்
உன் முகம் பார்க்கிறேனோ என்றால்
இல்லை என்றுதான் சொல்வேன்..
ஆனால் உன் ஒவ்வொரு புன்னகையிலும்
பூக்களோடு வாசங்களும்
சேர்ந்தனைக்கின்றன என்னை.

இனம் புரியாமல் இதயத்தில்
மிக ஆழமாய் வேர்விட்டிருக்கும்
நேசங்கள் நமக்கு மட்டுமேயான
மிகசிறந்த நேரங்களை செய்து தரும்.
அப்போது தன்னை மறந்து
ரசிக்கும் குழந்தையாய்
மாறியிருப்பாய் நீ.
நீ ரசித்து விளையாடும் பொம்மையாய்
மாறியிருப்பேன் நான்.

புன்னகைக்கும் பூக்களை
பார்க்கும்போதெல்லாம்
ஏனோ என்னையும் அறியாமல்
வந்து செல்கிறது..
உன் மனசின் ஞாபகம்.

காதல்..
மொழிகள் தாண்டிய ஒன்றல்லவா..
வார்த்தைகள் சொல்லாததை
விழிகள் சொல்லுமாம்.
விழிகள் சொல்லாததை
இதழ்கள் சொல்லுமாம்..
எப்படி என்று தெரிந்தால்
எனக்கும்தான் சொல்லி தாயேண்டி
உன் இதழ்களால்.
...........................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Sep 30, 2010

மனசு..

இனி நமக்கான நேரங்களே
இல்லையென உணரும்போது
கடந்துசென்ற நமக்கான
நேரங்கலனைத்தையும் மிகச்சிறப்பாய்
உணர்கிறது மனசு..
நமக்கான நேரங்களனைத்தும்
பெரும்பாலும் சண்டைகளாகவே
முடிந்திருந்தாலும்.
------------------------------------------------------------------
எப்போதும் போல்தான்
வருகின்றன மழை நாட்கள்..
கொஞ்சம் கவிதைகளையும்
நிறைய்ய நினைவுகளையும்
தாங்கிக்கொண்டு..
மனசில் மட்டும் ஏனோ
சந்தோசங்களுக்கு பதிலாய் வலிகள்.
-------------------------------------------------------------
கடந்து சென்ற காலங்கள் அல்லது
உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை
போல்தான் சில உறவுகளும்..
எவ்வளவுதான் தவமிருந்தாலும்
கைசேருவதே இல்லை
கடைசீவரை..
---------------------------------------------------
மிகப்பிடிக்கும் என்றாலும் இப்போதெல்லாம்
அடர்தனிமைகளில் பயணம் செய்யவே
நடுங்குகிறது மனசு.. வழியெங்கும்
உயிரை கொல்லும் உன் நினைவுகளும்
சுயங்கள் திருடும் உன் பிம்பங்களும்
மட்டுமே சிதறி கிடக்கின்றன.
.................................................................................
ப்ரியமுடன்...
லோகநாதன்.

Sep 7, 2010

காதல் மகராணி..

பூக்களுக்கு பூக்கள்
நலம் விசாரிப்பது இயல்புதான்.
அதற்காக வரும்போதெல்லாம்
பூந்தோட்டத்திற்கு போகாதே நீ..
இந்த நடமாடும் செடியில்
எவ்வளவு அழகாய் இரண்டு பூக்கள்
இருக்கின்றன என்று பூக்களெல்லாம்
பொறாமைபடுகின்றன.
நம் உலகின் ஒவ்வொரு
நாளையும் மழை நாளாக
மாற்றி வைக்க போகிறேன் அல்லது
விடியாத இரவுகள் செய்து
வைக்க போகிறேன்..
உன் மனம் சாய்ந்து தூங்க.
உன்னுடனான
என் பயணங்கள் எல்லாமே
சுகமா என்று சொல்லதெரியவில்லை..
ஆனால் ஒவ்வொரு முறையும்
இத்தருணங்கள் சிறகு முளைத்து
பறந்துகொண்டே இருக்கவேண்டுமென்று
நினைப்பது நிஜம்.
நீ தலை சாய்த்து பேசுவதை
ரசிக்கவே தனியொரு உலகம்
செய்துவைக்கபோகிறேன்..
அங்கே மிக முக்கியமாய்
கடிகாரம் இல்லை.. காலம் இல்லை..
இதுவரை உன்னருகே இருக்கும்போது
எனக்கு மட்டுமே மாறமலிருந்த காலம்
இனி இருவருக்குமே..
யாருமற்ற தெருவில்
உன் வாசம் பற்றி நடக்கும்போது
எதேச்சையாய் எட்டி முத்தமிட..
'ஹ்ய்யூ.. யாராவது பார்த்தால்
என்னாவது?'
பூக்களாய் வெடிக்கிறாய்..
நம் காதல் கைகட்டி
ரசித்துக்கொண்டிருப்பதை அறியாமல்.
.............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Aug 13, 2010

உடைந்த நிலவு..கலையாத வெளிச்சம்..


சுய விருப்பங்கள்
தொலைத்து
விருப்பப்படிவாழவோ
அல்லது வாழ வைக்கவோ
மிக கவனமாய்
போராடிக்கொண்டிருக்கும்
எண்ணற்ற மனிதர்களில்
நானும் ஒருவன்.

என் வழியில்
ஏய்ப்புகள் இல்லை..
ஏமாற்றங்கள் உண்டு..
அகங்காரங்கள் இல்லை..
ஆசைகள் உண்டு..
போகின்ற வழிகளெங்கும்
ஆசைகளை விலையாய்
கொடுத்து ஏமாற்றங்களை
வாங்கி குவிக்கிறேன் இதயத்தில்..

எந்திரமாக்கிவிடுமென
பயந்து இதுவரை தள்ளியே
நின்றிருந்தேன் ..
சூழ்நிலைகளிடமிருந்தும்
சமூகத்திடமிருந்தும்.
ஆனாலும் மனதை
மெல்ல மெல்ல அழுத்துகிறது
கடமை எனும் பெயரில்
சூழ்நிலைகள்..

முகம் காட்ட
முடியாது உன்னால்..
எனக்கே எனக்கென்று
இன்னும் மீதமிருக்கும்
சில நேரங்களிலாவது
வந்து போ..
இருள் சூழ்ந்த இரவின்
கருப்பு நினைவுகளாய்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jun 20, 2010

வாழ்க்கை..

எதுவுமே இவ்வளவு
அழகாய் கற்றுதந்ததில்லை
வாழ்க்கையை..
வாழ்க்கையை தவிர.
.........................................................
வென்மேகத்திலிருந்து
இறங்கி வந்த
தேவதை ஒன்று
இரக்கம் இருந்தால்
கொஞ்சம் தாயேன் என்றது.
அதை இதயம்
இருப்பவனிடம் போய்
கேள் என்றேன்.
திரும்பி செல்ல
எவ்வளவு எவ்வளவு
தடுமாறியது தேவதை.
'ஐயோ.. பார்த்து '
என்றேன்..
சட்டென திரும்பி
'இப்படித்தானே
சக மனிதர்களிடமும்
நடந்து கொள்வாய்'
என்று சிரித்தது.

ம்.. இன்னும் நிறைய
ரௌத்திரம் பழக்க வேண்டும் மனதை.
.....................................................................
எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.
..........................................................






Jun 16, 2010

நேசம்..

காலங்கள் மாறிவிட்டன..
கனவுகளும் கரைந்துவிட்டன..
காயங்கள் மட்டும்
இன்னும் ஆறாமல் அப்படியே..


தனிமையில் நெஞ்சம்
தறிகெட்டு ஓடுது..
நினைவுகளின் பிடியில்
சருகாய் ஆகுது.


சுடும் நெருப்பென்று
தெரியாமல்
சுகமளிக்கும் பனிதுளிஎன்று
சேர்த்துவைத்துவிட்டேன் உன்
புன்னகைகளை என்னிதயத்தில்..

எரியும் நிலவென்று
தெரியாமல்
சிரிக்கும் பூவென்று நினைத்து
பதித்துவைத்துவிட்டேன்
என் கண்களில் உன் முகத்தை..

முட்களோடுதான் வாழ்க்கை
என தெரிந்தும் சிரித்துக்கொண்டே
மலர்ந்திருக்கும் ரோஜாவை
போல்தான் நானும்..

ம்ம்.. ஆண்டாண்டு காலம்
கடந்தாலும் உனக்கான என்
பிரியங்களை ஒருபோதும்
உணரபோவதில்லை நீ..

என் காலம் உள்ள
காலம் வரை உன் மீதான
என் பிரியங்களும் கரையப்போவதில்லை...
.......................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 29, 2010

எனக்கான சொந்தம்..

நீ சூடும் பூக்களெல்லாம்
உதிர்வதாகவே நான்
நினைப்பதில்லை.
என் மனதோடும்..
மூடப்பட்ட என்
புத்தகத்தின் ஏதேனுமொரு
பக்கத்திலும்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றன..
இன்றுவரை.
............................................................
என் நினைவெங்கும்
உன் வாசம் ..
நாளெல்லாம் என்னில்
வீசும்..
நினைவுகளால்
உன்னை சூட
மனதெங்கும்
மழைசாரலடி..
கவிதையாய்
உன்னை பாட
என் உலகெங்கும்
புது வசந்தமடி.
..........................................
நீ வரமாட்டாய் என
தெரிந்தும்
பூச்செடிகள்
வளர்த்து வைத்திருக்கிறேன்
என் வாழ்வில்.
உன் நினைவுகளாவது
சுகமாய் இருந்துவிட்டு
போகட்டுமே.
.................................................
நீ பூக்களை சிந்துகிறாய்
என்றால்..
இல்லை நான் புன்னகை
சிந்துகிறேன் என்கிறாய்..
கவிதை எழுதி காட்டினால்
அது என் பெயரென்று சொல்கிறாய்..
இப்போது சொல்கிறேன்..
நீ கட்டி இருப்பது
சேலைதான் என்று..
நீயும் எப்போதும் போலவே
இல்லை..அது உன் காதல் என்கிறாய்..
பூக்களை சிந்திக்கொண்டே.
. .................................................................................
உன் கூந்தல்
பூக்களை போலவே
என் பிரியங்களையும்
மிக சுலபமாய்
எடுத்தெறிந்து விடுகிறாய்..
அதற்காக பூக்களை போல்
அவை வாடிவிடுமென
எண்ணிவிடாதே..
அவை காலங்கள்
தாண்டியும் உன்னை
சொந்தமென கொள்ள
ஆசைபடுகிறது.
.......................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Feb 13, 2010

என் மனதோடு நீ..

பாட்டி சொல்லும்
கதைகளில் வரும்
தேவதை பெண் நீ..
கதை கேட்கும்
பிரமிப்புகள் அகலாத
சிறுவன் நான்.
இன்னும் எத்தனை
நாட்களானாலும்
அதிசயம்தான் நீ எனக்கு.
...............................................
போகின்ற போக்கில்
என் வீட்டு தோட்டத்து
பக்கமும் வந்து போ..
அவை சாகா வரம்
பெற்று வாழ்வதை
பார்க்க ஆசையாக
இருக்கிறதெனக்கு.
............................................
கவிதை
மிகப்பிடிக்கும் எனக்கு..
உன்னை போலவே.
அதற்காக உன்னை
கவிதையென்று
சொல்லமாட்டேன்.
கவிதைக்குள்
அடங்காதவள் நீ.
...........................................
நான் சொல்லி
நீ ரசிக்கவோ..
அல்லது
நீ சொல்லி
நான் ரசிக்கவோ..
இன்னும் எத்தனையோ
மிச்சமிருக்கின்றது.
நமக்கான நேரங்களிருந்தால்
கண்டுபிடுத்து சொல்.
..........................................................
உன்னை சந்தித்த
நாள் நினைவில் இல்லை..
சந்திக்கபோகும் நாளும்
எதிரில் இல்லை.
ஆனாலும்
வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாய்..
என் மனதோடு.
.......................................................
நீ என்ற
ஒற்றை பிம்பம்..
என்னில் கடக்கமுடியா
பெருவெளியாய்.
....................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 31, 2010

கண்ணாடி பொம்மை..

அடர்ந்த பனி பொழிவினூடே
மெரூன் வர்ணத்தில்
கண்ணாடி பொம்மை ஒன்று

நெருங்கி வா..
பேரானந்தம் என்றது.
நெருங்க நெருங்க
காயங்களை தருமென்று
தெரியாமல் போய்விட்டதெனக்கு.

சிந்தித்து பார்..
உன்னை நெருடவில்லை
நெருங்குகிறேன் என்றது
என் சிந்தனைகளை
முடக்கி வைத்துவிட்டு.

நினைவுகளில் இதமாகவும்
சமயங்களில் ரணமாகவும்..
கனவுகளில் சுகமாகவும்
சமயங்களில் சுமையாகவும்
எப்போதும் என்னுடனே
இருக்க பழகிவிட்டது அது.

நானே அறியாமல்
மெல்ல மெல்ல
மிக நுட்பமாய் என்
சுயங்களை திருடி எங்கோ
ஒழித்து வைக்க தொடங்கியது.

மெல்ல மெல்ல சிதைந்து
தனிமையில் புதைந்து
ஆழ்மனத்தின் ஏதுமற்ற வெளியில்
மிக மிக நிதானமாய்
பயணிக்கும்போது
சர்வ நிச்சயமாய்
என்னால் உணர முடிகிறது.

அது கண்ணாடி பொம்மையல்ல..
காதலென்று.
.................................................
ப்ரியமுடன்
லோகநாதன்.

Jan 18, 2010

முழுதாய் நான் தோற்றுவிட்டேன்..

எதிர்படும் எத்தனையோ
முகங்களில் மனதில்
பளிச்சென்று பதியும்
சிற்சில முகங்களில்
ஒன்றாகவோ..

சூழல் மறந்து
தாய்மையை
ரசிக்க வைக்கும்
மழலையின் மந்திர
புன்னகையாகவோ..

கண்ணாடி முன்
நிற்கும்போதெல்லாம்
சட்டென்று ஞாபக செல்களில்
தெறித்து செல்லும்
விநாடி நேர
நினைவுகளாகவோ..

நாள் முழுதும்
நனைந்திருந்தாலும்
வீட்டில் நுழைந்ததும்
ஜன்னல் கம்பிகளில்
பட்டு தெறித்து முகம்
சிலிர்க்க வைக்கும்
அந்தி நேரத்து
மழை சாரலாய்..

இன்னும் எப்படிஎல்லமோ..
உன்னுள் எந்தன் இருப்பை
உணர செய்ய முயன்று
முழுதாய்
தோற்றுவிட்டேன் நான்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 13, 2010

நானும்.. எனக்கான நீயும்..

உறவுகள் மீது
நம்பிக்கை இழந்து விட்டேன்..
கூடவே நட்புகள் மீதும்..
காதல் மீதும்..
என் எல்லாமே நீதானென்று
வாழ்ந்தது சத்தியமாய்
என் தவறுதான்.
..............................................
ஏமாற்றங்கள்
இயல்பாய் நிகழும்..
எதிர்பார்ப்புகள்
இருக்கும்வரை..
எதிர்பார்க்காதே..
யாரிடமும்..
எதுவும்.
.............................................
மனதெங்கும்
உன்னை
காணவேண்டுமென
ஏக்கம்தான்..

ம்.. கிணற்று தவளை
கத்துவது ஊருக்கு
கேட்கவா போகிறது?
...............................................
இயல்புகளை மீறிய
ஒன்றுதான்..
உனக்கும் எனக்குமான
சொந்தம்.,
அதற்காக நீ
இயல்புகளை
இழந்து விடாதே..
பிறகு வழிகள் மறந்து
வலிகள் மட்டுமே
தெரியும் உனக்கு.
...............................................
எப்போதும் போல
இனி எப்போதும்
பொய் சொல்ல
அறிவை பழக்கி கொள்கிறேன்
அல்லது சுத்தமாய்
அழித்தொழித்து விடுகிறேன்..
தினமும் 'எப்படி
இருப்பாய் நீ' என
கேட்கும் ஏன் வீட்டு
தோட்டத்து பூக்களையும்..
என் மனதையும்.
................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 4, 2010

வெறுமை..

ஈரமில்லா இடத்தில்
செடிகள் நட்டு
ரசசனைகளை புதைத்து
பூக்கள் வளர்க்க
ஆசைப்படுவதை போல்தான்
இதயத்தை தொலைத்து
இருட்டினில் வாழும் உன்னிடம்
அன்பையும் நேசத்தையும்
யாசிக்கிறேன் நான்..

யாராலும் எட்ட முடியா
அடர்ந்த தனிமைகளில்
பயணம் செய்ய போகிறேன் இனி..
அங்கே உன் உயிரை கொள்ளும்
பிரியங்களும் ..
நெஞ்சம் வதைக்கும்
நேசங்களும் துணை வரப்போவதில்லை.
வழித்துணையாக வரப்போவதெல்லாம்
ஆழ் மனதின் வெறுமைகளும்..
சிற்சில கவிதைகளும்தான்.

மற்றவரை துன்புறுத்தும்
விருப்பங்கள் வேண்டாம்..
நம்மை வஞ்சிக்கும்
இலக்குகள் வேண்டாம்..
போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை..

வாழ்க்கையின் ஆதாரமே
கொஞ்சம் நம்பிக்கையும்..
நிறைய்ய நேசமும்தான் ..
உணர்ந்திருந்தும்
வெறுமையை விரும்பும்
நானும் ஒரு மனிதன்தான்.
.................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 1, 2010

என் காதல் கண்மணியே..

குழந்தையாய் மாறி
புத்தாண்டு வாழ்த்துகள்
சொல்லிகொண்டிருக்கிறாய்
எனக்கு.
உன்னை பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
நானே புதிதாய்
பிறந்து வருகிறேன்
என்பதை அறியாமல்.
.......................................................
இனிமேல் தயவு செய்து
கண்களை நிமிர்ந்து பார்க்கவோ..
அல்லது யாரிடமும் சிநேகமாக
புன்னகைக்கவோ செய்யாதே..
ஒரு இதயம் சிதைந்து
கொண்டிருப்பதே போதும்.
........................................................
எல்லோருக்கும் கொடுத்தே
பழகியவள் நீ..
என்னிடம் மட்டும் எடுத்து செல்கிறாயே..
இதயத்தை.
.......................................
"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.."
"என்னடா?"
"நியூ இயர்க்கு என்ன ஸ்பெஷல்?"
"ஒண்ணுமில்லடா.."
"அப்ப ஒன்னு பண்ணு.."
"என்னடா..?"
" தின்னுட்டு மாமன நெனச்சு
கனா கண்டுக்க.."
"அதன் டெய்லி கண்டுகறேனே.."
"அப்போ போரடிக்குமா..?"
" அதன் இல்ல.. டெய்லி
கனவுல வந்தாலும்..
நீ மட்டும் புதுசாத்தான் தெரியிற எனக்கு.."

அட.. இந்த காதலிகளுக்கு
எவ்வளவு அழகாய்
காதலிக்க தெரிந்திருக்கிறது.
........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.