Jul 17, 2013

புதைகுழி..



என்ன சொன்னாலும்
ஏனோதானோவென்று
ஒரு அவதானிப்பு!
என்ன கேட்டாலும்
ஏதுமில்லாமற்போல்
ஒரு ஏகாந்தம்..!
எத்தனை காதலை
கொட்டினாலும்
புரியாதாவென அவ்வப்போது
சண்டையிட்டதாய் ஞாபகம் .
பிரிதொரு மழை நாளில்
ஈரமாய் புன்னகைத்து
மழையோடு மழையாய்
பொழிந்தாய் ஒற்றைப்பார்வையை..
விருப்பா..
வெறுப்பா..
இயலாமையா..
களிப்பா..
ஏகாந்தமா..
எதுவும் புரியாமலேயே
புரிந்துகொண்டேன்.
உனக்கு புரியாமலில்லை..
புதைத்து வைத்திருக்கிறாய் என்று!
**************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்..

Jul 6, 2013

நிலவு நீ..!


விடாது கொட்டித்தீர்த்த பின்பும்
தூறிக்கொண்டிருக்கும் தூவானமாய்..

ஓயாமல் அழுதுமுடித்த பின்பும்
விசும்பிக்கொண்டிருக்கும் மனசு!
***************************************************


சந்தோஷம்..
புன்னகை..
கோபம்..கண்ணீர்..
வலி.. தாபம்..
பிரிவு..
இப்படி ஏதேனும்
ஒன்றை கொடுத்து
கொண்டே இரு.
உன்னிடமிருந்து
ஏதேனும் ஒன்று 
பெற்றுக்கொண்டே
இருக்கவேண்டும்

இந்த காதலுக்கு!
**************************************

‘இனி சொல்ல ஒன்னுமில்ல’
எனும் வார்த்தைக்குள்
உற்று கவனித்தால்
ஒருவேளை தெரியக்கூடும்..

கடலளவு ப்ரியங்கள்!
*******************************************

உன் முத்தங்களின்
ஞாபகம் தீண்டும்போதெல்லாம்
எனக்கு சிறுவயதில்
சாப்பிட்ட நிலாச்சோறு
ஞாபகம் வரும்.
பூமிக்கு நிலவு..

எனக்கு நீ!
********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.