Aug 29, 2014

இந்த இரவு..


எதிர்ப்படும் ஏதோவொரு
சம்பவம் போல்
அத்துனை எளிதாய்
கடந்துவிடப்போவதில்லை
இந்த இரவு..
மாறாக இதயத்தின்
அடிவேர் வரை நிதானமாய்
ஊடுருவ ஆரம்பித்து
சாத்தியமில்லா இருத்தலை
நிலைப்படுத்த முயற்சித்து
கொல்லும்.

எழுதி முடித்தவுடன்
காய்ந்து விடும்
பேனா மையைப்
போல் சட்டென்று
முடிந்துவிடப்போவதில்லை
இந்த இரவு
மாறாக அக்கவிதையின்
வார்த்தைகள் சுமந்து கொண்டிருக்கும்
வலிகளைப்போல்
உன் ஞாபகங்களை
சுமந்து கொல்லும்.

எதற்கும் கொஞ்சம்
தள்ளியே நில்..
ஞாபக தனலாய் தீண்டி
வெம்மையாய் கழிவதற்கு
பதிலாக வெறுமையாய்
கழிந்துவிட்டு போகட்டும்
இந்த இரவாவது.
*******************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jun 18, 2014

பேரன்பின் சாட்சி..!

பேசிக்கொண்ட வார்த்தைகள்
யாவும் முற்றுப்பெற்று
உறைந்து..
பார்த்து சிரித்த கண்கள்
இன்று மெளனமாய் புதைந்து..
எதிர்பார்த்த நேரங்களெல்லாம்
கரைந்து எதிர்ப்பட தயங்கி..
ஏந்திக்கொள்ளும் நினைவுகளை கூட
புதைத்து வைத்து..
இப்போதெல்லாம் ஏதேனும்
ஒரு தனிமை நினைவில்
சட்டென தெறித்து விழும்
ஒற்றை கண்ணீர் துளி மட்டுமே

பேரன்பின் சாட்சியாய்..!
*******************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Mar 21, 2014

பேரன்பே..!











சின்ன சின்னதாய்தான்
ஆரம்பித்தது எல்லாமும்.
பள்ளிக்கு செல்லும்போதே
மாமா வந்தால்தான்
வருவேன் என்பாய்.
ஒற்றை கடலை
மிட்டாயை கூட
மாமாவிற்கு பாதி என்று
எடுத்து வைப்பாய்.

சின்ன சின்னதாய்
உண்டியலில் நீ சேர்க்கும்
பணமெல்லாம்
என் தேவைகளாய் செலவழியும்.

வார்தைகளில் ஒரு
மழை நாளை கண்முன்
நிறுத்துவாய்..
சிணுங்கல்களில்
இதுவரை கேட்டறியா
மெல்லிசையை
உணரவைப்பாய்.

முதன் முதலாக
சேலை கட்டிய போது
ஓடி வந்து
நல்லாருக்கா என
கேட்டுகொண்டிருந்தது
இன்னும் என் செவிகளில்..

உனக்கென்று எதுவும்
கேட்டறியாதவள் நீ
எனக்கென்றுதான்
பார்த்து பார்த்து
அத்தனையும் செய்ய 
கற்றுக்கொண்டிருந்தாய்.

விடிகாலைப் பொழுது
தூறலிடும் மழை நாள்
மஞ்சள் வெயிலின் 
மாலைப்பொழுது
வெண்ணிலவின் 
பெளர்ணமி காலம் என
அத்தனை அழகான நாட்களும்
‘என்னை பிடித்திருக்கா’ எனும்
உன் கேள்வியில்லாமல் 
கடந்ததே
இல்லை எனக்கு.

என்னை பிடித்திருக்கா என்
ஆயிரம் முறை கேட்ட நீ
ஒருமுறகூட உன்னை பிடிக்கும்
என சொன்னதே இல்லை என்னிடம்.
மாறாக உன் வருகைகளும்
உன் செய்கைகளுமே உணர்த்திவிடும்.


பேரன்பின் பிம்பங்களாய்
சிரித்தாய் ரசித்தாய்
கொஞ்சினாய் இன்னும்
என்னவெல்லமோ செய்தாய்

உன் வார்த்தைகளாய்
உன் சிணுங்கல்களாய்
உன் கோபங்களாய்
உன் கெஞ்சல்களாய்
உன் பிம்பங்களாய்
என் அறையெங்கும் சிதறி கிடக்கிறது.
உன் காதலும் ப்ரியங்களும்.

பேரன்பாய் தொடங்கி
பேரன்பாய் முடியும்
எல்லா காதலும் போலவே
நம் காதலும்..
இதோ பிரிந்த இதயங்களின்
வரிசையில் நம் இதயமும்.

இப்போதெல்லாம்
எப்போதும் அதிகம்
பேசிக்கொண்டிருந்தவள்
எதிர் வரும் ஏதேனும்
ஒரு நேரத்தில் கூட
மெளனமாய் ஒரு பார்வை.
அதிகம் பேசியறியாத நானோ
மனதோடு அரற்றிக்கொண்டு.


உன்னால்தான்
காதாலாய் காதலாகி
காதலால் வாழ்ந்துகொண்டிருக்கிறது
என் உலகம்.
ஆனால் நீயில்லாத எதுவும் 

முழுமையாகவில்லை எனக்கு.
*************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Sep 18, 2013

மகா கிறுக்கு..!




ஒரு அந்திமாலைப்பொழுதில்
மருண்ட விழிகளுடன்

 துள்ளிச்சென்ற
பூனைக்குட்டியை 

பார்த்தவாறே சொன்னாய்
‘எனக்கு பூனைன்னா 

ரொம்ப பிடிக்கும்..!’
மறுகணமே முடிவு 

செய்துகொண்டேன்
அடுத்த ஜென்மத்தில்

 பிறந்தால் பூனையாக 
பிறக்க வேண்டுமென்று.
பிரிதொருமழைநாளில் 

தூறலாய் நனைந்திருந்த 
பூக்களைப் பார்த்தவாறே
ரசித்து சொன்னாய்..
’எவ்வளவு அழகு.. 

ஒவ்வொன்னும் ஒரு வரம்..!
ரொம்ப பிடிச்சிருக்கு!’
ரசித்தவாறே 

நினைத்துக்கொண்டேன்
இனம் இனத்தோடுதான்

 சேருமென்று.
இன்னுமொரு அழகான 

முன்னிரவுப்பொழுதில்
நட்சத்திரமாய் ஜொலிக்கும்
வானைப்பார்த்துக்கொண்டே

 சொன்னாய்..
’ஹய்யோ நிலா.. 

கொட்டிக்கொடுத்தாலும்
காணக்கிடைக்காத அழகுடா..! 

ரொம்ம்ப பிடிச்சிருக்கு..”
சட்டென்று ஏங்கி 

தொலைத்தது மனசு
’என்னைப்பிடிக்குமென்று 

ஒருநாளேனும் 
சொல்லமாட்டாயா?’ என்று.
எப்படிப்படித்தாயோ மனதை.. 

மறுகணமே சொன்னாய்.
‘சொல்லித்தான் 

தெரியனுமா உனக்கு?
உன்னை பிடிக்காத நாளொன்று 

என் வாழ்வில் இல்லையடா.. 
மறைந்தாலும் உன் வாசல் மண்மீது
பூப்பூவாய் பூத்துக்கொண்டே 

இருப்பேன்.. உன்னை ரசிக்க..!’
அன்றிலிருந்து எனக்கும் பிடித்தது 

ஒரு மகாகிறுக்கு.
உனக்கு பிடிக்காததும் சேர்த்து 
எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.
********************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Sep 10, 2013

காதலன்னப்பறவை..

பிடிக்கும் என்று
ஒருமுறைகூட
சொல்லாவிட்டாலும்
பிடிக்காதென்று
சொல்லி சொல்லியே
சண்டையிட்டு
கொண்டிருந்திருக்கலாம் நீ!
உன்னோடு
உன் விருப்பு 
வெறுப்புகளையும்
நேசிக்க கற்று 
வைத்திருந்தவன் நான்.
*******************************
சரிசமமாய் கலந்திருக்கும்
உனதன்பு மற்றும்
உனது வெறுப்புகலிலிருந்து
உனதன்பை மட்டும்
இன்னும் இருத்தி 
வைத்துக் கொண்டிருக்கும்
காதலன்னப்பறவை நான்!
**************************
யாரேனும் கவிதை
எழுதிதர சொல்லி கேட்டால்
உன் புன்னகைகளைத்தான்
மொழிபெயர்த்து
கொடுக்கிறேன்!!
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன். 

Sep 6, 2013

மழைக்கவிதை..!


எங்கள் கல்லூரியில்
கவிதைப்போட்டி.
ஒரு மழைக்கவிதை
சொல்லேன்என்றாய்
ரொம்பநாளைக்குப்பிறகு.
மழையே ஒரு கவிதைதானே
அதற்கென்று தனியாக
ஒரு கவிதை எதற்கு' என்றேன்.
ஏய்ய்ய்.. விளையாடம சொல்லு
சிணுங்கினாய்.
எனக்குள் அப்போதே மழை
வரத்தொடங்கியது.
சரி கேளேன்..
மழைக்கும்
உன் மனதிற்கும்
மழைக்கும் அப்படியொன்றும்
பெரிதாய் வித்தியாசமில்லை.
மழையின் ப்ரியம்
மண்ணை நனைக்கும்
உன் ப்ரியம் 
என் மனதை நனைக்கும்!
எப்படி இருக்கு?’ என்றேன்.
ம்ம்ஹீம்ம்.. வேற சொல்லு..’
ம்ம்ம்.. இந்த மழைக்கும்
உன் வெட்கங்களுக்கும்
நேரம் காலமே தெரிவதில்லை..
இரண்டுமே அவ்வப்போது வந்து
நனைத்து சென்றுவிடுகின்றன
மனதை..!’
ப்ச்ச்இதுவும் நல்லால்ல..’
சரி கேளேன்..
எப்போது வந்தாலும்
உன் நினைவை 
கூட்டிக்கொண்டுதான்
வருகிறது இந்த மழை.
போகும்போது மட்டும்
தனியே சென்றுவிடுகிறது
நானோ விட்டுவிட
மனசில்லாமல்
உன் நினைவில் 
நனைந்துகொண்டு..!’ என்றேன்.
சுமார்தான்.. வேற..’
வேற என்ன..
பேசாமல் மழை வரும்போது
நீ குடை பிடித்து நடந்து காட்டு..
அதுக்கு பேர்தான் மழைக்கவிதை..
முதல் பரிசும் உனக்குதான்..

அட லூசு..’
சிரித்துக்கொண்டே நனைய
வைத்தாய் வெட்கங்களில்..!
***************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.