May 24, 2011

தீராதது காதல்


இந்த பாடல் எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று.

ப்ரியமுடன்..
லோகநாதன்.

May 17, 2011

வார்த்தைகள்..

பொருளற்று பிறந்திருந்தாலும்
மிக பொறுமையாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
என் வெளியெங்கும்
தீராத ஏக்கங்களோடு..

மணிக்கணக்கில்
பேசிய பின்பும்
போகும்போது இன்னும்
ஏதோ மீதமிருப்பதை
போல தோன்றும்..
இப்போதும் தோன்றுகிறது..
நம் உறவுகள் முடிந்துவிட்டன
என தெரிந்தும்..
இன்னும் கொஞ்சம்
அழுத்தமாகஅல்லது ஆழமாக
பேசியிருக்கலாம்தான்..

கொஞ்சம் சண்டையாக
நிறைய்ய கவிதையாக
மாற தெரிந்ததற்கு
முட்களாக மாற
தெரிந்திருந்ததில்
வியப்பேதும் இல்லை..


எதற்கும் கவனமாய் இரு.
ஒரு வேளை உன்னிடத்திலும்
சுயங்கள் திருட முயற்சிக்கலாம்..
உனக்கும் எனக்குமாய்
பிறந்து தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள்.
***********************************