Jan 31, 2011

அடி ஆத்தீ..

உன் நெனப்புல ஊஞ்சல் கட்டி
என் உசுரு ஆடுது புள்ள
உன் வெள்ளரி மனசுல மயங்கி
தலைசுத்தி போகுது மனசு கிறங்கி
அடியேய்.. உன் மடியில
சாஞ்சா மெல்ல
கொடியேய்.. என் உசுரு பறக்கும்
பறக்கும் பறக்கும் பறக்கும் புள்ள.

அந்த சக்கர வள்ளி கெழங்கா இனிக்குற..
நீ சொக்குற மல்லி பூவா மணக்குற..
பூப்பூக்கவில்லையடி ஆனா வாசம் வீசுது..
காத்தாடி இல்லையடி ஆனா மனசு பறக்குது..
செல்லமா மொழி பேசையில
மனசெல்லாம் கரையுதடி..
மெல்லமா விழி பார்க்கையில
உசுரெல்லாம் கரையுது
கரையுது கரையுது கரையுது ..
(அடி ஆத்தீ.. கரைஞ்சு போச்சுங்க..)
********************************************
ப்ரியமுடன்
லோகநாதன்.

Jan 27, 2011

முட்டகண்ணு முழியழகி

கவனிப்பதற்கு பதிலாக
சந்தேகம்தான் வருகிறது..
வானம் எப்போது வெள்ளை நிறமாகி
நிலவு எப்போது கருமை நிறம் ஆனதென்று.
அட முட்டகண்ணு முழியழகி
கோலிகுண்டு கண்ணை உருட்டி உருட்டி
பேசாதே இனி என்னிடம்.
***************************************
தொடாமலேயே சிணுங்கும்
வெட்கச் சிணுங்கியாக இருக்கிறாயே..
வெட்க்கப்படாமல் வா..
வெயில் படாத இடங்கள்
காதலுக்கு ரொம்ப பிடிக்குமாம்.
**************************************
மொழிகளை விட
மௌனங்கள்தான் காதலை
அழுத்தமாய் பதிய வைக்கும் என்றால்
நம்ப மறுக்கிறாய்.
கட்டியணைத்து ஒரு முத்தம்
தந்து பார் புரியும்.
***************************************
நாளைக்கு நான் ஊருக்கு போகணும்.
இன்னிக்கு டிக்கெட் புக் பண்ணனும் என்றாய்.
சட்டென்று கேட்க தோன்றியது எனக்கு.
பூக்கூடைக்கெல்லாம் டிக்கெட்
புக் பண்ணனுமா என்ன?
************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 22, 2011

அடி கிறுக்குபுள்ள..




கடலலையில் கால் நனைத்து சந்தோசமாய் விளையடிகொண்டிருந்தாய்..
அலைகளும் உன் கால் நனைக்கும் சந்தோசத்தில் துள்ளித்துள்ளி வந்துகொண்டிருந்தன கரைக்கு.
"ஏய்.. எனக்கொரு சந்தேகமடி.."
"என்ன?" விளையாடிகொண்டே கேட்டாய்.
" நீ மட்டும்தான் இப்டி கிறுக்கியாட்டம் இருக்கியா ..
இல்ல உங்க வீட்ல எல்லோரும் இப்டிதனா?"
"என்ன வம்புக்கு இழுக்காத .. கோவம் வரும்.."
"உண்மையத்தானே கேட்டேன்?"
"டேய்.. யார் கிறுக்கி? நீதாண்டா கிறுக்கு பையன்.."
"நான் கிறுக்கனா? சரி விடு..
எங்க ஊர்ல கிறுக்கு பசங்களெல்லாம்
என்ன பண்ணுவாங்க தெரியுமா?"
"என்ன பண்ணுவாங்களாம்?"
"அப்டியே கட்டிப்பு.."
சொல்லி முடிப்பதற்குள் தர ஆரம்பித்துவிட்டாய்.
முத்தங்கள் எனும் பெயரில் வரங்களை.
*********************************************



"சீய்.. போடா .. நீ ரொம்ப மோசம்.." என்கிறாய்.
அப்படி என்ன சொல்லிவிட்டேன் நான்?
சாயங்காலம் ஆகிவிட்டதென்றாய்.
நானோ இல்லை இல்லை உன் மடி சாயும் காலம்
ஆகிவிட்டதென்றேன்.
இதற்காகவா இந்த மோசக்காரன் பட்டம்?
ஹய்யோடி.. பொல்லாதவர்கள்... இந்த காதலிகள்.
**********************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 12, 2011

மனசு..









பிரிவுகள் சுகம்தானே
அதற்கேன் இப்படி வருத்தம்?
களையிழந்த காம்பிடம்
கேட்டதற்கு..
அவளில்லாத நீயும்
இப்படித்தானே இருந்தாய் என
திருப்பி கேட்கிறது.
...............................................................
உனக்கும் எனக்குமான
நேரங்களைஎல்லாம்
மிக கவனமாய் சேர்த்து
வைத்திருக்கிறது மனசு.
நமக்கான எதிர்காலமே
இனி இல்லை என
நீ உணர்த்தும்போதேல்லாம்
நம் இறந்தகாலங்களை
இறுகப் பற்றிக்கொள்ள
தவறியதேயில்லை ஒருபோதும்.
.............................................................
ஒருமுறை அழகாய்
பூத்து குலுங்கினால் போதும்
ஆயுள் வரை வாடாமல்
பார்த்துகொள்ளலாம்தான்.
எனக்கு வேர்களே இல்லை என்கிறாயே.
.........................................................................
விரும்பினாலும் விலகினாலும்
உன்னிடம் மட்டுமே வருவேனென
அடம்பிடித்து தொலைக்கிறது.
விரும்பி வரும்போதெல்லாம்
காயங்கள் மட்டுமே தருவாய்
என்பதை அறியாமல்.
..........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 6, 2011

காதல்பேச்சு.


உன்னுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம்
சொல்பேச்சு கேளாமல் காதல் பேச்சு மட்டுமே
கேட்பேனென அடம் பிடிக்கின்றன
என் நேரங்களும் வார்த்தைகளும் மற்றவையும்.
அதற்காக என் காதலை சீண்டி பார்க்காதே
பிறகு உதடு வலிக்கிறதென சொன்னால்
நான் பொறுப்பாக முடியாது.
***********************************************
குட்டி கவிதைகளாகவோ அல்லது
கொஞ்சும் நினைவுகளாகவோ எப்படியும்
என்னுடன்தான் இருக்கப்போகிறாய் நீ..
பிறகு ஏன் இனிமேல் உன் முகத்திலே
முழிக்கவே மாட்டேனென அழிச்சாட்டியம்
செய்து போகிறாய்?
************************************************
"வர வர என்னை சீண்டுவதே உனக்கு
வேலையாக போய்விட்டது
இனிமேல் உன் பக்கமே வரமாட்டேன் பார்.. "
கொஞ்சலாய் வந்தது கோபமொழி.
"ஆமா.. ஆமா.. உன் வெட்கத்தை பார்த்தாலே
எதாச்சும் பண்ண தோணுது எனக்கு..
வரும்போதே அதை எங்காச்சும் விட்டுட்டு வந்துடு.
எனக்கும் வெட்கமில்லாத உன்னை பார்க்க
ஆசையாய் இருக்கிறது.." என்றேன் புன்னகைத்துக்கொண்டே.
"ம்க்கூம்.. ரொம்பதான் ஆசை.."
மறுபடியும் போர்த்திகொண்டாய் வெட்கத்தை.
புன்னகைகளில் கரையத்தொடங்கியது
வெட்கம் மெல்லமாய்.
********************************************************
என்றுமில்லாத அதிசயமாய்
என் தோட்டத்து செடிகளில் ஒன்று மட்டும்
அதிகமாக பூத்து குலுங்கியது.
என்னவென்று கேட்டுதொலைக்க
கர்வமாய் சொல்கிறது..
நேற்று நீ அந்த செடியில்தான் பூ பறித்து சென்றாயாம்.
*************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.