Dec 23, 2008

அம்மாடீ..

கைகளில்
முத்தமிடுதலை
கண்டுபிடித்தவ(ளை)னை
கட்டி வைத்து
உதைக்க
தோன்றுகிறது எனக்கு.
...................................
உன்னருகே
இருக்கும்
நேரங்களில் எல்லாம்
முத்தவியலை
முழுதாய்
கற்றுக்கொள்ள
ஆசைப்படுகிறேன் நான்.
ஒருமுறைகூட
முழுதாய்
கற்றுக்கொள்ள
விடுவதேயில்லை..
உன் வெட்கவியல்.
.........................................
"ஹாய்.. செல்லம்ஸ்"
"................."
"என்ன பேசமாட்டியா.."
"நான் வந்து ஒரு மணி நேரமாச்சு.."
"சாரிடா.. கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.."
"இதுதான் கடைசீ..
இனிமேல் நீ எங்கே
கூப்ட்டாலும் வரமாட்டேன்.."
" ஒ.கே ..ஒ.கே..
நான் ஒன்னு
சொல்றேன் கேட்பாயா.."
"சொல்லி தொலை.."
"இனிமேல்
அந்தி வானிற்கும்..
அழகு வானவில்லிற்க்கும்..
உன் வெட்க்க வர்ணங்களை
கடனாக தராதே.."
"கிறுக்கனாடா நீ.."
கிறுக்கியாடீ நீ.."
"ஏய்....!"
"உஷ்ஷ்..
இந்த கிறுக்கன காதலிக்கிற
நீ கிறுக்கியாத்தான இருப்ப.."
"சீ.. போடா.."
அம்மாடீ..
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்..
நிமிடங்களில் கோபங்களை கொட்டவும்..
மறு நிமிடங்களில் காதலை கொட்டவும்.
..........................................................
"ஹாய்டா.."
"ஹாய்.."
"எப்போ வந்த?
"நான் வந்து
ஒரு மணி நேரமாச்சு.."
"உனக்கு கோபமே வராதாடா.."
"உன்னை பார்த்தாலே
மனசு பனியாகிவிடுகிறது..
கோபத்திற்கு நான் எங்கே போக.."
"ம்ம்ம்.. நாளைக்கு
எனக்கு பர்த்டேடா.."
"ம்ம்ம்.. இருக்கட்டும்.."
"உனக்கு கொண்டாட
தோணலியா.."
"ஐயோ.. மண்டு..
உன்ன பாக்கும்போதெல்லாம்
எனக்கு நீ புதுசா பிறந்து
வருவதை போல்தான் இருக்கு..
இதில் எந்த நாளை
உன் பிறந்த நாளென்று நான் கொண்டாட.."
"சும்மா.. கதை பேசாதே.."
"சரி.. உனக்கு ஏதாவது
ஆசை இருந்தால் சொல்..
நாளைக்கு செய்றேன்.."
"அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.."
"எதாச்சும் கேளு.."
"கேக்கட்டுமா.."
"ம்ம்ம்.."
"தினம் காலை விடிந்ததும்
உன் முகத்தில் விழிக்கும்
உன் வீட்டு தோட்டத்தின்
அதிர்ஷ்டமான பூக்களில்
ஒன்றாக பூக்கணும் நான்.."
அய்யோடீ..
இந்த காதலிகளுக்கு
இந்த மாதிரி ஆசைகளெல்லாம்
எப்படி வருகிறது..
.........................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Dec 21, 2008

கடைசியாய்..


கவிதையாய்
வாசம் செய்ய
தவிக்கிறது
என் காதல்..
உன் ப்ரியங்கள்தான்
இல்லை இங்கே..

பூக்களாய்
தவமிருக்கிறது
என் காதல்..
தென்றலாய்
உன் வருகைகள்தான்
இல்லை இங்கே..

சட்டென்று தோன்றி
சட்டென்று மறையும்
வானவில்லை போல்தான்
நமக்கான நேரங்களும்..
எதிர்பாராமல் தோன்றி
எதிர்பாராமல் முடிந்துவிட்டன..
என் கைகளை
பிடித்து உணர்த்த
வாய்ப்பில்லைதான் உனக்கு..
என் கண்களை பார்த்து
சொல்லும் வாய்ப்பும்
இல்லைதான் உனக்கு..
என்றாலும்..
எப்படியேனும் எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
இதுதான் நம்
கடைசி சந்திப்பென்று..
இன்னும் கொஞ்சம்
ஆழமாக உன் வார்த்தைகளை
தேக்கி வைத்திருக்கக்கூடும்
என் நெஞ்சம்.
.......................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . . .

Dec 16, 2008

வாழ்க்கை..

இப்போதெல்லாம்..
என் ஜன்னலில்
தென்றல் வருவதில்லை..
என் வாசலில்
கோலங்கள் இருப்பதில்லை..
என் தோட்டத்தில்
பூக்கள் மலர்வதில்லை..
என் உலகில்
வெளிச்சங்கள் இருப்பதில்லை..

என்றாலும் மிக மிக
பிடித்திருக்கிறது
இந்த வாழ்க்கை..

உன்னை எண்ணி
மண்ணில் வாழும்
வாழ்க்கை போதுமே..
ஜென்மம் ஏழும்
என் நெஞ்சம்
நிறைந்து வாழ்ந்திடுமே.
.........................................
இறைவா..
தெரிந்தோ.. தெரியாமலோ..
என்னை மனிதனாக படைத்து
எனக்கும் அவளுக்கும்
இடைவெளி வைத்துவிட்டாய்..

மீண்டும்
பிறப்பிருந்தால்..

அவள் எண்ணங்களாக..
அவள் அசைவுகளாக..
அவளில் வாழும்
வரம் வேண்டுமடா..
...........................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .



Dec 10, 2008

பொறாமை..

தினம் காலை நீ
கண்விழித்ததும்
நீ சோம்பல்
முறிக்கும் அழகை
கண்மூடாமல் பார்க்கும்
உன் வீட்டு கண்ணாடி ஜன்னலை
பார்க்க பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.........................................
பூவை தாங்கும்
காம்பென..
தண்ணீர் குடம்
தாங்கி நீ நடந்து வர..
தழும்பி வழியும்
தண்ணீரை பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
நீ தூங்க ஆரம்பிக்கும்போது
சமர்த்தாய்
உன் கூந்தலோடு
உறவாடிக்கொண்டிருந்தாலும்..
நடு இரவில்
உன் நெஞ்சாங்குழியில்
தஞ்சமடைந்திருக்கும்
தலையணையை
பார்க்க பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
சின்ன குழந்தைதான்
என்றாலும்..
நீ ஒரே ஒரு
முத்தம் கொடு என
கொஞ்சும்போது..
வேறென்ன...
பொறாமைதான் எனக்கு.
........................................
எங்கேனும்
அருவியை பார்க்க..
உன் புன்னகையை
கடன் வாங்கியிருக்குமோ என
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
............................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Dec 8, 2008

கண்மணிக்கு..

என் கனவுக்கும்
இல்லை கால்கள்..
உன்னிடம் ஓடிவர..
என் நினைவுக்கும்
இல்லை நிஜங்கள்..
உன்னை சேர்ந்துவிட..
காலம்காலமாய்
காதலின் சாபக்கேடு
இந்த பிரிவுகள்..
என்றாலும் பரவாயில்லை..
முட்கள் இல்லாத ரோஜாக்கள்
அழகாய் இருப்பதுமில்லை..
வேதனை இல்லாத காதல்
சுகமாய் இனிப்பதுமில்லை.
..........................................................
பாசம் என்ன.. நேசம் என்ன..
எல்லாம் வேஷம்தானடி..
உண்மை ஏது.. உணர்ச்சி ஏது..
உலகம் ஊமைதானடி..

ஆசை வைத்து மாலை செய்தேன்
அது சேரவில்லை உந்தன் சன்னதிதான்..
கட்டாந்தரை.. கல்லறை போர்வை..
அது எந்தன் நெஞ்சுக்கு நிம்மதிதான்..

ஜோடி சேர ஆசையுண்டு
சொந்தம் என்று நீ பக்கமில்லை..
வாழ்ந்து பார்க்க வாழ்க்கை உண்டு
சேர்ந்து வாழ ஒரு வாழ்க்கை இல்லையே..

கட்டம் போட்டு முடிக்கும் முன்பே
கணக்கை முடித்தது யார் செய்த தவறு..
வட்டம் ஒன்று போட்டு வைத்து அதில்
வாழ்க்கையை வைத்தவன் செய்த தவறுதானடி.
.................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Dec 6, 2008

தன் பெருமை தானறியாதவள்..

கோடானு கோடி
கவிதைகளை
உன்னுள் வைத்துக்கொண்டு
தினம் ஒன்றாக
எனக்கு தந்து..

கோடானு கோடி
ஆசைகளால்
நிறையாத என் நெஞ்சை
உன் சிறு புன்னகையால்
நிறைத்து..

தவறி விழுந்த
கைக்குட்டையை
எடுக்கும் போது
என் நெஞ்சையும் சேர்த்து
அள்ளிக்கொண்டு..

என்னுயிரை
ஒரு போர்க்களமாக்கி விட்டு
ஏதும் அறியாதவள் போல
எனை கடந்து செல்கிறாய்..

தன் பெருமை
தானறியாதவள்தான்
நீ.
......................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன் . .

Dec 4, 2008

தனிமை..

"கடைக்கு வரியா.."
"தலை வலிக்குது.. வரலை.."
நட்புக்கு பொய் சொல்லி
மனதுக்கு பழகிவிட்டது..
"ஏன்டா லேட்டு?"
"ஒண்ணுமில்லம்மா.."
கால் போன போக்கில்
என் நேரங்களும்
போக தொடங்கிவிட்டன.

"வாடா சாப்டலாம்.."
"நான் சாப்ட்டாச்சு.."
சொந்தங்கள் ஆயிரம்
இருந்தும் தனிமையை
உணரும் மனசு.

இப்போதெல்லாம்
தனிமைதான் எனக்கு
தாய் போல..
உன் நினைவுகளால்
தாலாட்டிகொண்டே இருக்கிறது.
............................................................
காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்.
........................................................

Ppriyamudan..

லோ க நா த ன் . .

Dec 2, 2008

சிதறல்கள்..

நல்ல மலரோடு
வாசமாய் கட்டிக்கொள்ள
மயக்கம்தானடி..
முழு இரவோடு
கவிதையாய் ஒட்டிக்கொள்ள
தயக்கம் ஏனடி..
..............................................
நல்ல மலரோடு
வண்டாடும் வாசம்..
என் நினைவோடு
திண்டாடும் உன் நேசம்..
..............................................
உன் கொலுசுகள்
விட்டு செல்லும்
சத்தங்கள்..
என் ஜீவன்
வருடி போகும்
முத்தங்கள்..
..................................
உன் பாதம்
அசைந்தாடும்
கொலுசுகள்..
என் நெஞ்சில்
நின்றாடும்
ஸ்வரங்கள்..
......................................
ஒரு நிலவை
போல்தான் நீயும்..
நிஜங்களால் தேய்ந்து
நினைவுகளால் வளர்கிறாய்..
ஏனடி இந்த
விளையாட்டு..
போதுமடி என்னை
தாலாட்டு..
........................................
ஒரு சின்ன சிணுங்களில்..
ஒரு சின்ன புன்னகையில்..
ஒரு செல்ல சண்டையில்..
எங்கே கற்றுக்கொண்டாய் நீ..
என்னை வேரோடு சாய்க்க.
................................................
நீ கவிதைதான் எனக்கு..
அதனால்தான்
என் நெஞ்சோடு
எப்போதும் இனிமையாய்
இருக்கிறாய்..
..................................................
நான் ரசிகன்தான் உனக்கு..
அதனால்தான்
நான் விரும்பும்
சிலவற்றிலும் முதலாய்
இருக்கிறாய்..
.................................................
என் புத்தகம் கூட
பூ வாசம் வீசுதடி..
உன் பெயரெழுதி பார்க்கையில்..
................................................
கனவாகி உந்தன்
நினைவாகி
உயிராகி உந்தன்
உணர்வாகி
ஒரு முத்தம் வைக்க
சத்தம் போடுமோ..
உந்தன் பெண்மை
எட்ட நின்று
ஏக்கம் தருமோ..
..........................................
தேவதை..
இதுவரை மற்றவர்
சொல்ல கேட்டதோடு சரி..
ஒருமுறைகூட நேரில்
பார்த்ததில்லை..
ஆனாலும் அவ்வார்த்தை
கேட்கும்போதெல்லாம்
நினைவுக்கு வருவது
நீ மட்டும்தான்.
.............................................

ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

காதலன் நான்..

இப்போதெல்லாம் நீ
என் மடியோடு
சாயும் நேரங்களை விட
என் மனதோடு
சாயும் நேரங்கள்தான்
அதிகம் என்கிறாய்.
அதற்காக உன்
மடியை குறைபட்டுகொள்ளாதே..
அது என் காதல்
இளைப்பாறும் நந்தவனம்.
.......................................................
பூக்கள் மாநாடு
போடும் வேளையில்
பூந்தோட்டத்திற்கு போகாதே
என்றால் கேட்கிறாயா நீ..
இப்போது பார்
அவை தங்களுக்குள்
யார் அழகு என்கிற
சண்டையை நிறுத்திவிட்டு
உன்னை பார்த்துக்கொண்டிருகின்றன.
..................................................
" இனிமேல் ரோஜாவை
மட்டும் நீ சூடிக்கொண்டு
வராதே..
மற்ற பூக்கள்
எல்லாம் என்னிடம்
தினமும் முறையிடுகின்றன.."
"பூக்கள்.."
" ம்ம்.."
"உன்கிட்ட.."
"ஆமாண்டீ.."
"நான் நம்பணுமாக்கும்.."
" ஏன் நம்பமாட்டியா..
பூக்களின் ராணி நீயே
என்னிடம் பேசும்போது
பூக்கள் என்னிடம்
பேசாதா என்ன?"
....................................................
" டேய்.. ஒரு கவிதை சொல்றா.."
" இங்க பார்ரா..
ஒரு கவிதை..
கவிதை கேக்குது.."
" சும்மா மழுப்பாதடா.."
"சரி.. எனக்கு
கவிதை எல்லாம்
தெரியாது..
வேணுன்னா எனக்கு புடிச்ச
பூ என்னன்னு சொல்றேன் கேட்டுக்க.."
" இது எனக்கு தெரியாதா..
ரோஜாதானே.."
" இல்ல.. உன் மனசு.."
..................................................
" டேய்.. அந்த கடைல
இருக்குற ரோஜாவை பாரேன்..
எவ்வளவு அழகா இருக்கு.."
"உன் சிரிப்பு கூட அழகாத்தான் இருக்கு.."
"இந்த உலகம் ரொம்ப பெருசில்ல.."
"உன் மனசை விடவா..?"
"சீ.. போடா.. உனக்கு வேற எதுவுமே தெரியாதா.."
"ம்.. உன்னை தவிர வேறு எதையுமே
ரசிக்கவோ.. நேசிக்கவோ..
தெரியாது எனக்கு".
......................................

ப் ரி ய மு ட ன். .
லோ க நா த ன். .

Nov 26, 2008

ஹய்யோ..

..........................................
ஆர்பாட்டமான
கடற்கரையில்
அமைதியாகத்தான்
பேசிக்கொண்டிருந்தோம்
சட்டென்று சிறு வாக்குவாதம்
உனக்காக சாகவும்
தயார் என்கிறாய் கண்ணில் நீரோடு.

ஹய்யோ.. இந்த காதலிகளுக்கு
கொஞ்சம் கூட அறிவே இல்லை..
அவர்களுக்காகவே வாழும்
நம் காதலும் அந்த காதலுக்காகவே
வாழும் நாமும்
அவர்களை இழந்துவிட்டு
எப்படி வாழ்வதாம் ?

யாராவது இந்த காதலிகளுக்கு
புரிய வையுங்களேன்.. ப்ளீஸ் ..
..........................................
எனக்கு மெரூன் ரோஜா
ரொம்ப பிடிக்கும்..
ஹய்யோ.. மல்லிகை
மனசை அள்ளுது..
பூக்களின் புராணம்
அடிக்கடி பாடுகிறாய்..
இனம் இனத்தோடுதான்
சேரும் என்பது
உண்மைதான் போல.
...................................................
" ஹாய் செல்லம்.."
"ம்"
"நான் ஒன்னு கேக்கட்டுமா"
"நீ என்ன கேப்பேன்னு எனக்கு
தெரியும்"
"அப்ப குடு"
"போடா நான் தரமாட்டேன்.."
முகம் வாட தொடங்கும்போதே
இச்சென்று பதிகின்றன
உன் இதழ்கள்..
ஹய்யோ..
உன் பிஞ்சு இதயத்தில் எப்படி
உன்னால் இவ்வளவு
காதலை சேர்த்து வைக்க முடிகிறது.
...................................................
"ஹலோ.."
"..........."
"ஹலோ .. ஹலோ.. ஹலோ.."
".........."
"இப்ப பேசறியா இல்லையாடா.."
" ஹாய் செல்லம்.."
"எரும மாடு.. தண்டம்..
எத்தனை ஹலோ சொன்னேன்
ஏன்டா பேசல"
" ஒண்ணுமில்ல..
என்னோட மொபைல்ல
மழை பெய்யுதோன்னு
சந்தேகமா இருந்துச்சி ..
அதான் பாத்துட்டு இருந்தேன்.."
"ச்சீய்.. போடா.."
ஹய்யோ.. எவ்வளவு அழகாய்
இனிக்கிறது உன் "ச்சீ .. போடா".
.............................................
"ஏண்டீ.. உங்க அப்பா
அம்மாவுக்கு அறிவே இல்லையா.."
" டேய் .. என்ன வம்புக்கு இழுக்காத..
நான் கோபமா இருக்கேன்.."
"பின்ன என்னடி..
உனக்கு இப்படி பேர் வச்சிருக்காங்க"
" எங்க பேருக்கு என்னவாம்?"
"உன்ன கூப்டும்போதெல்லாம்
இனிக்குது..
கம்முனு சர்க்கரைனு வச்சிருக்கலாம்"
"ஆரம்பிச்சுட்டியா.." ன்னு நீ
ஆரம்பிக்கும்போதே
ஆரம்பிக்கிறது உன் வெட்கம்.
ஹய்யோ.. வெட்கத்திற்கு
இத்தனை நிறங்கள் இருக்கிறதா.
.........................................................

ப் ரி ய மு ட ன். . லோ க நா த ன். .

Nov 25, 2008

'ம்..'

ஒரு நிலவை போல்தான்
நானும் என் காத்திருப்புகளும்..
தினம் தனிமையில்.
அந்த அலையை போல்தான்
நானும் என் நினைவுகளும்..
ஓயாமல் உன்னைத்தேடி.

காற்றாய் மாறிவிடுகிறேன்
உன் சுவாசம் மட்டும் வாழ..
ஒரு பூவாய் மாறிவிடுகிறேன்
உன் கூந்தல் மட்டும் வாழ..
கொடுத்தது இதயம்தான்
கொண்டது எதுவென தெரியவில்லை..
இழந்தது நிம்மதிதான்
இனி இருப்பது எது புரியவில்லை..
கண்கள் பார்த்தது சில நாட்கள்
காதல் சொன்னது சில நாட்கள்..
கானலாய் கொதிக்கும்
பிரிவோ இன்றுவரை..
தயக்கங்களில் மூழ்கி
சுயங்கள் தொலைத்து பின்
இனி சந்திப்பே வேண்டாம்
என நானும்..
தனிமைகளின் தவிப்புகளில்
மயக்கங்களின் இறுக்கத்தில் சிக்கி
சந்திக்க வேண்டும் என நீயும்..
கண்ணில்லா இறைவன்
ஜன சந்தடி மிக்க ஏதேனும்
ஒரு சாலையோரத்தில்
சந்திக்கவைத்துவிடுகிறான்..
'நல்லாருக்கியா..' என நீ கேட்கவும்..
'ம்..' என்ற ஒற்றை வார்த்தையில்
நான் பொய் சொல்லவும்.
.............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 24, 2008

இப்படிக்கு..

எத்தனை தரம்
வாடினாலும்
நீ சூடுவாய்
என்பதற்காக
மீண்டும் மீண்டும்
ஜனனம் எடுக்க
தோன்றுகிறது எனக்கு.
-இப்படிக்கு..
ரோசாப்பூ...
.......................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

என் காதல்..

என்றோ நாம் சேர்ந்து
சென்ற பயணங்களின்
சுவடுகளை இன்றும்
நினைவுபடுத்தும்
ஒற்றையடி பாதை..

மணிக்கணக்காய்
அருகருகே அமர்ந்திருந்தும்
எதுவும் பேசாமல்
மௌனங்களால் மனதோடு பேசி
அமர்ந்திருந்த
கோவில் படிக்கட்டுகள்..

உச்சி வெயில்தான் என்றாலும்
உன் அருகாமையினால்
உள்ளம் குளிர்ந்த
மந்திர நாட்கள்..

எல்லாம் வாடிவிட்டன
நீயின்றி..
என்றாலும்
என் காதல் மட்டும்
உன் நினைவுகளோடு வாழ்ந்தேனும்
ஆண்டாண்டு காலம்
பூத்துக்கொண்டுதானிருக்கும்.
..............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 22, 2008

காதலுடன்..

என் நினைவோடு
தந்ததை எல்லாம்
நிஜமாக தந்தவள்..
நீ..
நிஜமாக
தந்ததை எல்லாம்
நினைவாக்கி சென்றவள்..
.................................................
உதிரும் பூவோ..
கரையும் நொடியோ..
இனி ஒருபோதும்
மீளமுடியா சோகத்துடன்
உதிரவோ..
கரையவோ கூடாது..
என் காதலை போல..
................................................
யாருக்காகவும் காத்திரா
காலங்களை போல்தான்
என் காதலும்..
எதற்காகவும் உன்னை
விட்டு தரமாட்டேன்..
.....................................................
கல்லறை பூக்கள்
பூத்திருந்தும்
பூத்து சிரித்திருந்தும்
அவை கூந்தல்
ஏறமுடியா சோகம் சொல்ல
வார்த்தை ஏது?
காத்திருக்கும் காதல்
முகம் பார்த்திருந்தும்
சேரமுடியா சோகம் போல..
.......................................................
நீ இல்லா நாட்களில்
நிலவில்லா வானம் போல்
வெறுமையாகத்தான்
இருக்கிறது மனசு..
என்றாலும் பரவாயில்லை..
ஆங்காங்கே
நட்சத்திர குவியலை போல்
சிதறி கிடக்கிறதே..
உன் நினைவுகள்..
............................................
ஒரு நிமிடம்..
அல்லது
ஒரு ஜென்மம்..
உன் மடி சாய வேண்டும்..
இருக்கும்போதில்லாவிட்டாலும்
இறந்தபிறகாவது.
.........................................................
உன்னால் நான்
புனிதமடைந்தேனோ இல்லையோ..
நல்ல மனிதனானேன்.
ஆம்..
காதலின் ஆழம் அறியாதவன்
புனிதமானவனும் இல்லை..
கண்ணீரின் ஆழம் அறியாதவன்
நல்ல மனிதனும் இல்லை.
.............................................................
ஒரு நிமிடம்தான்..
அழகான தென்றல் போல
வந்ததும் சென்றுவிட்டாய்..
ஆனால் இன்னும் நிலைத்திருக்கிறது
உனக்கான என் நினைவு சுவடுகள்.
பிரிவுகளால் இதயம் உடைந்தாலும்
உடைந்தவற்றிலும் உனக்கான என்
காதல் நிலைத்திருப்பது போல..
.............................................
சிறு உயிருக்கும்
துன்பம் தரமாட்டேன்..
ஒரு பூ வாடினாலும்
என்னால் தாங்க முடியாது..
சொல்லிக்கொண்டே
பிரிகிறாய்..
என் இதயத்தை
உடைத்துவிட்டு..
..........................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

நமக்கான உலகம்..

நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..
புல்மீது பனியென
என் மடியோடு நீ..
எவ்வளவு நேரமோ..
சட்டென்று
எழுந்து தோள்சாய்கிறாய்..
கூடவே..
'கால் வலிக்கிறதா..'
கேள்வி வேறு..
அடி பைத்தியக்காரி..
நீ இருக்கும் வரைதான்
என் மடி மட்டுமல்ல..
மனதும் கூட
சுமை இன்றி
இருக்கிறது என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பேன் நான்..
..................................................
நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..

கண்மூடி கவலை மறந்து
உன் மடியோடு நான்..
சட்டென்று..
' நேரமாகிறது..
வா.. போகலாம்'
என்கிறது வார்த்தை வழி
உன் வெட்கம்.
கூடவே..
' இன்னும் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும்
இப்படியே இருக்கலாம்'
என்று விரலால் தலை கோதும்
உன் காதல்.

உன் வெட்கத்திற்கும்
காதலுக்கும் இடையில்
சிக்கி அவஸ்தைப்படுகிறேன் நான்.
.............................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு
எதிரே வந்தாய்.
சட்டென்று எதோ
தடுக்கிவிடுகிறது உன்னை..
உள்மனம் பதற..
' பார்த்து வரக்கூடாதா?'
என்றேன்.
'பார்த்துக்கொண்டுதான்
வந்தேன்டா'
என்கிறாய்.
'பிறகு எப்படி?'
என்றேன் எதுவும் புரியாமல்.
'உன்னைத்தானடா
பார்த்துக்கொண்டு வந்தேன்.
நீ எதிரே வரும்போது
எனக்கு வேறு எதுவுமே தெரிவதில்லை'
என்கிறாய் மீண்டும்
என்னையே பார்த்துக்கொண்டு.
.................................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு வந்தாய்.
நானும் புன்னகைக்க..
'நலமா' என்றாய்..
'நலம்' என்றேன்.
'அப்புறம்' என்றாய்.
'ம்.. அப்புறம்..'என்றேன்.
'சரி.. வருகிறேன்'
போகவும் செய்தாய்..
சிலையான உணர்வுகள்
உயிர்த்த பின்புதான் தெரிந்தது..
நாமும் ஏதாவது
கேட்டிருக்கலாமோ என்று.
.................................................................
' உனக்கு ரொம்ப புடிச்சது என்னடா'
'ம்ம்ம்ம்ம் ... எல்லாமே..'
'எல்லாமேன்னா?'
'எல்லாமேதான்..'
'அப்பா நானும் அந்த
எல்லாத்துல ஒன்னுதானா?'
'இல்ல.. நீதான் என் எல்லாமே..'
..............................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 21, 2008

புன்னகை சாரல்..

கனவானாலும்
நனவானாலும்
உன் முகம் ஒன்றை
மட்டுமே தேடும்
என் விழிகளின் ஏக்கங்கள்..

கடைசி வரை
வராமற் போனாலும்
உனக்காக காத்திருந்த
காத்திருப்புகளின் தாக்கங்கள்..

பேனா என்ற ஒன்றை
கைகளில் எடுத்தாலே
உன் பெயரை
எழுதி பார்க்கும்
என் விரல்களின் தேடல்கள்..

தினம் தினம்
காயப்பட்டாலும்
மீண்டும் மீண்டும்
உன் நினைவுகளையே
சொந்தம் கொண்டாடும்
என் இதயத்தின் வலிகள்..

என்றேனும்
எதிரில் வரும்
உன் ஒற்றை புன்னகையில்
கரைந்து விடும்
மாயம்தான் என்ன?
..............................................
உலகம் மயங்க
வானவில்லில் வர்ணம்
வைத்தவன்
உன் புன்னகையில் என்ன
வைத்தானோ..
நான் மயங்கிட..
............................................
அமைதியாகத்தான்
புன்னகைக்கிறாய்..
ஆனால் எல்லா
உள்ளங்களையும்
கொள்ளையடித்துவிடுகிறாய்..
ரோஜாவின் வம்சமா நீ..
............................................
நொடிக்கொருதரம்
பூத்தாலும்
பன்னிரண்டு வருடங்களுக்கு
ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி மலரை விட
அபூர்வமானதுதான்..
உன் புன்னகை.
........................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

காத்திருப்புகள்..

நீ

மலர் சூடி

ஒருமுறைகூட

நான் பார்த்ததில்லை..

என்றாலும்

பூக்களை எங்கு

பார்த்தாலும்

எனக்கு தோன்றும்..

உன் கூந்தல்

வாசம் செய்யவா

இந்த காத்திருப்புகள் என்று..

............................................

ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

இது மழைக்காலம்...

மழை..
மண்ணுக்கு ஈரம்..

மனதுக்கு இதம்..
மழையை பிடிக்காதவர் யார்..
மழைக்கு பிடிக்காதவர் யார்..
ஏனோ எனக்கு மட்டும்
பிடிக்காமல் போய்விட்டது மழையை..
ஏதோ ஒரு நாளின்
அந்திப்பொழுதில் சாரலாய் பொழிந்து
உன்னை பார்க்கவிடாமல் தடுத்ததிலிருந்து..
...............................................................
நேரம் காலமில்லாமல்
உன்னால் முடிந்தவரை
பேசிக்கொண்டே இரு..
எனக்கு மழை என்றால்
ரொம்ப பிடிக்கும்..

உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு மழைக்காலம்
வந்து போகிறது..
..............................................................
சிலுசிலுவென
தூறல் பொழிய ..
தூரத்தில் எங்கோ
இரு புள்ளிகள் தெரிய..
அட.. அது நீயும்
நானுமாய் இருக்க..
கண்மணியே..
மழையோடு மழையாய்
உன் அணைப்பில் கரைய மாட்டேனா..
.................................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

Nov 20, 2008

வார்த்தைச் சிதறல்கள்..

எந்தக் குழந்தையிடம்
கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
சதிராட..
என் செவியெல்லாம்
நிறைகிறது..
........................................
உன் இதழ்கள்
தேனாய் இருக்குமோ..
உன் வார்த்தை சர்க்கரை
ஆகிறதே..
...........................................
மௌனம் அழகானதுதான்
என்றாலும்
உன் சின்ன 'சீ போடா' வை
நினைக்க அழகற்றதாகி
விடுகிறது மௌனம்..
..........................................
குயில் பாடல்
போலெல்லாம்
உன் வார்த்தைகள் இல்லை..
என்றாலும் உன் வார்த்தைகளை
கேட்டுத்தான் குயில்
நன்றாக பாட
கற்றுக்கொண்டிருக்க வேண்டுமென
நினைக்கிறேன் நான்..
.....................................................
எங்கே கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
மழை தூவ..
என் இதயமெல்லாம்
நனைகிறதடி..
.....................................................
'ம்' என்பது
ஒற்றை எழுத்து
என்றாலும்
எனக்கு அது
கவிதைதான்..
நீ
சொல்வதால்..
..............................................
கடைகளில்
மதுவிற்கு பதில்
உன் வார்த்தைகளை
விற்கலாம்..
...........................................
உலகின் எட்டாவது
அதிசயமாய் இருக்குமோ
உன் வார்த்தைகள்..
பகலிலும் பனி தூவுகிறது..
.................................................
கனவில் எல்லாம்
இனி என்னோடு
பேசாதே நீ..
உன் மற்ற கனவுகள்
கனவுகள் எல்லாம்
காத்திருந்து பார்த்துவிட்டு
அதிகாலையில்
சண்டைக்கு
வருகின்றன என்னிடம்..
..........................................................
என் வீட்டு
தோட்டத்தில்
ரோஜாக்களோடு ரோஜாவாய்
உன் வார்த்தைகளையும்
வளர்க்க ஆசை எனக்கு..
................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

Nov 19, 2008

நம்பிக்கை..

இன்றைக்காவது அவள் கூந்தல்
சேர்ப்பாயா..
நம்பிக்கையோடு தினம் தினம்
பூத்துதிரும் என் தோட்டத்து
ரோஜாக்களை போல்தான்
என் காதலும் காத்திருக்கிறது..
என்றேனும்
என் பக்கத்தில் வருவாய்..
வந்தெனை
ஒரு முத்தத்தில் கொல்வாய்
என்ற நம்பிக்கையோடு..

ஒரு நாள்..

இயல்பாய் நடப்பதென்றாலும்
யாரும் அறிவதே இல்லை..
பூப்பறிக்கும்போது காம்பின் வலியை..
அப்படித்தான் நம் பிரிவும்..
உன் உயிராய் வாழ்ந்த காலங்கள்
இன்னும் பசுமையாய் என் நெஞ்சில்..
இப்போதும் உன் நினைவுகளால்தான்
வாழ்கிறது மனது..
உதிர்ந்த மலரின் கலையாத வாசம் போல..
உடைந்த இதயத்தின் கரையாத நேசங்களோடு..
இருக்கும் ஒன்றோ.. இல்லாத ஒன்றோ..
தேடி தேடி தொலையும் மனிதர்கள்..
உன் காதலும் அப்படித்தான்
தேடிக்கொண்டு இருக்குமோ..
நிஜமான என்னை தொலைத்து விட்டு
நிழலான என் நினைவுகளில் மூழ்கி..
ஒரு நாள்..
ஒரே ஒரு நாள்..
உனக்காக மட்டும் வாழ்ந்து பார்..
ஒரு குழந்தையாகி என் மடி சாய்ந்திருப்பாய்..
எல்லாவற்றையும் மறந்து.
............................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

கண்மணிக்கு..

உன் காதலை எல்லாம்
ஒன்று சேர்த்து
ஒரே ஒரு முத்தமாய்
எனக்கு கடன் கொடு..
என் காலம் உள்ள காலம் வரை
உனக்கு திருப்பி செலுத்திகொண்டே
இருக்கிறேன் நான்..

கண்மணிக்கு..

உலகத்தில் உள்ள
பூக்களை எல்லாம்
உன் காலடியில் கொட்டி விட
ஆசை எனக்கு..
ஆனாலும் ஒரு பூவை கூட
பறிப்பதற்கான மனம்
இல்லை என்னிடம்..