Jan 31, 2010

கண்ணாடி பொம்மை..

அடர்ந்த பனி பொழிவினூடே
மெரூன் வர்ணத்தில்
கண்ணாடி பொம்மை ஒன்று

நெருங்கி வா..
பேரானந்தம் என்றது.
நெருங்க நெருங்க
காயங்களை தருமென்று
தெரியாமல் போய்விட்டதெனக்கு.

சிந்தித்து பார்..
உன்னை நெருடவில்லை
நெருங்குகிறேன் என்றது
என் சிந்தனைகளை
முடக்கி வைத்துவிட்டு.

நினைவுகளில் இதமாகவும்
சமயங்களில் ரணமாகவும்..
கனவுகளில் சுகமாகவும்
சமயங்களில் சுமையாகவும்
எப்போதும் என்னுடனே
இருக்க பழகிவிட்டது அது.

நானே அறியாமல்
மெல்ல மெல்ல
மிக நுட்பமாய் என்
சுயங்களை திருடி எங்கோ
ஒழித்து வைக்க தொடங்கியது.

மெல்ல மெல்ல சிதைந்து
தனிமையில் புதைந்து
ஆழ்மனத்தின் ஏதுமற்ற வெளியில்
மிக மிக நிதானமாய்
பயணிக்கும்போது
சர்வ நிச்சயமாய்
என்னால் உணர முடிகிறது.

அது கண்ணாடி பொம்மையல்ல..
காதலென்று.
.................................................
ப்ரியமுடன்
லோகநாதன்.

Jan 18, 2010

முழுதாய் நான் தோற்றுவிட்டேன்..

எதிர்படும் எத்தனையோ
முகங்களில் மனதில்
பளிச்சென்று பதியும்
சிற்சில முகங்களில்
ஒன்றாகவோ..

சூழல் மறந்து
தாய்மையை
ரசிக்க வைக்கும்
மழலையின் மந்திர
புன்னகையாகவோ..

கண்ணாடி முன்
நிற்கும்போதெல்லாம்
சட்டென்று ஞாபக செல்களில்
தெறித்து செல்லும்
விநாடி நேர
நினைவுகளாகவோ..

நாள் முழுதும்
நனைந்திருந்தாலும்
வீட்டில் நுழைந்ததும்
ஜன்னல் கம்பிகளில்
பட்டு தெறித்து முகம்
சிலிர்க்க வைக்கும்
அந்தி நேரத்து
மழை சாரலாய்..

இன்னும் எப்படிஎல்லமோ..
உன்னுள் எந்தன் இருப்பை
உணர செய்ய முயன்று
முழுதாய்
தோற்றுவிட்டேன் நான்.
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 13, 2010

நானும்.. எனக்கான நீயும்..

உறவுகள் மீது
நம்பிக்கை இழந்து விட்டேன்..
கூடவே நட்புகள் மீதும்..
காதல் மீதும்..
என் எல்லாமே நீதானென்று
வாழ்ந்தது சத்தியமாய்
என் தவறுதான்.
..............................................
ஏமாற்றங்கள்
இயல்பாய் நிகழும்..
எதிர்பார்ப்புகள்
இருக்கும்வரை..
எதிர்பார்க்காதே..
யாரிடமும்..
எதுவும்.
.............................................
மனதெங்கும்
உன்னை
காணவேண்டுமென
ஏக்கம்தான்..

ம்.. கிணற்று தவளை
கத்துவது ஊருக்கு
கேட்கவா போகிறது?
...............................................
இயல்புகளை மீறிய
ஒன்றுதான்..
உனக்கும் எனக்குமான
சொந்தம்.,
அதற்காக நீ
இயல்புகளை
இழந்து விடாதே..
பிறகு வழிகள் மறந்து
வலிகள் மட்டுமே
தெரியும் உனக்கு.
...............................................
எப்போதும் போல
இனி எப்போதும்
பொய் சொல்ல
அறிவை பழக்கி கொள்கிறேன்
அல்லது சுத்தமாய்
அழித்தொழித்து விடுகிறேன்..
தினமும் 'எப்படி
இருப்பாய் நீ' என
கேட்கும் ஏன் வீட்டு
தோட்டத்து பூக்களையும்..
என் மனதையும்.
................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 4, 2010

வெறுமை..

ஈரமில்லா இடத்தில்
செடிகள் நட்டு
ரசசனைகளை புதைத்து
பூக்கள் வளர்க்க
ஆசைப்படுவதை போல்தான்
இதயத்தை தொலைத்து
இருட்டினில் வாழும் உன்னிடம்
அன்பையும் நேசத்தையும்
யாசிக்கிறேன் நான்..

யாராலும் எட்ட முடியா
அடர்ந்த தனிமைகளில்
பயணம் செய்ய போகிறேன் இனி..
அங்கே உன் உயிரை கொள்ளும்
பிரியங்களும் ..
நெஞ்சம் வதைக்கும்
நேசங்களும் துணை வரப்போவதில்லை.
வழித்துணையாக வரப்போவதெல்லாம்
ஆழ் மனதின் வெறுமைகளும்..
சிற்சில கவிதைகளும்தான்.

மற்றவரை துன்புறுத்தும்
விருப்பங்கள் வேண்டாம்..
நம்மை வஞ்சிக்கும்
இலக்குகள் வேண்டாம்..
போகின்ற போக்கில்
வாழ்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை..

வாழ்க்கையின் ஆதாரமே
கொஞ்சம் நம்பிக்கையும்..
நிறைய்ய நேசமும்தான் ..
உணர்ந்திருந்தும்
வெறுமையை விரும்பும்
நானும் ஒரு மனிதன்தான்.
.................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Jan 1, 2010

என் காதல் கண்மணியே..

குழந்தையாய் மாறி
புத்தாண்டு வாழ்த்துகள்
சொல்லிகொண்டிருக்கிறாய்
எனக்கு.
உன்னை பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
நானே புதிதாய்
பிறந்து வருகிறேன்
என்பதை அறியாமல்.
.......................................................
இனிமேல் தயவு செய்து
கண்களை நிமிர்ந்து பார்க்கவோ..
அல்லது யாரிடமும் சிநேகமாக
புன்னகைக்கவோ செய்யாதே..
ஒரு இதயம் சிதைந்து
கொண்டிருப்பதே போதும்.
........................................................
எல்லோருக்கும் கொடுத்தே
பழகியவள் நீ..
என்னிடம் மட்டும் எடுத்து செல்கிறாயே..
இதயத்தை.
.......................................
"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.."
"என்னடா?"
"நியூ இயர்க்கு என்ன ஸ்பெஷல்?"
"ஒண்ணுமில்லடா.."
"அப்ப ஒன்னு பண்ணு.."
"என்னடா..?"
" தின்னுட்டு மாமன நெனச்சு
கனா கண்டுக்க.."
"அதன் டெய்லி கண்டுகறேனே.."
"அப்போ போரடிக்குமா..?"
" அதன் இல்ல.. டெய்லி
கனவுல வந்தாலும்..
நீ மட்டும் புதுசாத்தான் தெரியிற எனக்கு.."

அட.. இந்த காதலிகளுக்கு
எவ்வளவு அழகாய்
காதலிக்க தெரிந்திருக்கிறது.
........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.