Apr 19, 2011

திமிரும் திமிர்.

அழகாக இருந்தாலே
திமிரும் கொஞ்சம் கூட இருக்கும் போல..
உன் திமிரும் திமிரின் திமிரை
பார்த்ததிலிருந்து திமிர் பிடித்து
அலைகிறது மனசு.
******************************

எந்த பகையும் இல்லாமலே
எதிரியாகி போகிறேன்
உன் ஆடைகளுக்கு..
கட்டியணைக்கும்போது
குய்யோ முய்யோவென
கூச்சலிட்டு
கன்னாபின்னாவென
சாபமிடுகின்றன என்னை.
**********************************

உன்னை பார்த்ததுமே
முத்தமிட துடிக்கும் உதடுகளையும்
கட்டியணைக்க துடிக்கும் கைகளையும்
முறைத்தே அடக்கிவிடுகிறாய்.
ஆனால் தாறுமாறாக வந்து விழும்
வார்த்தைகளை என்ன செய்வாய் என கேட்க
அவற்றைத்தானே பத்திரமாய்
எடுத்து வைத்துக்கொள்கிறேன்..
தனிமையின் இனிமையான
துணையல்லவா எனக்கது என்கிறாய்.
எல்லாம் சரிதான்..
முத்தங்களையும் மூச்சடைக்க
பெற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவாய்?
*****************************************

ஏதேச்சையாய் உன்புகைப்படத்தை
பார்த்த என் வீட்டு கிளி
உன் உதடுகளை கொத்திப்பார்த்து விட்டு
ஏன் இந்த கோவைப்பழம்
இனிக்கவில்லை என கேட்டு
நச்சரிக்கிறது.
அது புகைப்படமென்று எப்படி
புரிய வைப்பேன் அதற்கு?
*********************************

எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை
வம்பிழுப்பதே உனக்கு வேலையாக
போய்விட்டது.
இனிமேல் வம்பிழுத்துதான் பாரேன்
மூச்சுக்கு முந்நூறு முத்தங்கள்
வைக்கப்போகிறேன் நான்.
**********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

Apr 16, 2011

மனசு..

காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************


Apr 5, 2011

பல்லாங்குழி..

கனவுகள் அவரவர்
சொந்த உரிமையாம்..
அவற்றைகூட திருடி கொள்ள
உன்னால் மட்டும்தான் முடிகிறதடி.
************************

”நல்லா சாப்ட்டு சீக்கிரம்
குண்டாகுனா கேக்கவே மாட்டியா நீ?”
“ஏன்.. நா குண்டானா உனக்கென்ன?”
“ஹி..ஹி.. குண்டானா இடுப்புல
ஏதோ மடிப்பு விழுமாம்ல..
அங்கதான் வீடு கட்டி
குடித்தனம் பண்ணுவேன்னு
அடம் புடிக்குது மனசு..”
“அய்..அஸ்கு.. புஸ்கு.. ஆசைய பாரு”
பழிப்பு காட்டியதில்
பல்லாங்குழி ஆடுதடி அதே மனசு.
***************************

இனிமேல் சேலையெல்லாம்
கட்டவே கட்டாதே..
உன் எல்லா அழகையும்
தானே திருடி வைத்து கொள்(ல்)கிறது
கர்வம் பிடித்த சேலை.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.