Jan 1, 2010

என் காதல் கண்மணியே..

குழந்தையாய் மாறி
புத்தாண்டு வாழ்த்துகள்
சொல்லிகொண்டிருக்கிறாய்
எனக்கு.
உன்னை பார்க்கும்
நேரங்களில் எல்லாம்
நானே புதிதாய்
பிறந்து வருகிறேன்
என்பதை அறியாமல்.
.......................................................
இனிமேல் தயவு செய்து
கண்களை நிமிர்ந்து பார்க்கவோ..
அல்லது யாரிடமும் சிநேகமாக
புன்னகைக்கவோ செய்யாதே..
ஒரு இதயம் சிதைந்து
கொண்டிருப்பதே போதும்.
........................................................
எல்லோருக்கும் கொடுத்தே
பழகியவள் நீ..
என்னிடம் மட்டும் எடுத்து செல்கிறாயே..
இதயத்தை.
.......................................
"செல்லம்மா.."
"ம்.."
"செல்லம்மா.."
"என்னடா?"
"நியூ இயர்க்கு என்ன ஸ்பெஷல்?"
"ஒண்ணுமில்லடா.."
"அப்ப ஒன்னு பண்ணு.."
"என்னடா..?"
" தின்னுட்டு மாமன நெனச்சு
கனா கண்டுக்க.."
"அதன் டெய்லி கண்டுகறேனே.."
"அப்போ போரடிக்குமா..?"
" அதன் இல்ல.. டெய்லி
கனவுல வந்தாலும்..
நீ மட்டும் புதுசாத்தான் தெரியிற எனக்கு.."

அட.. இந்த காதலிகளுக்கு
எவ்வளவு அழகாய்
காதலிக்க தெரிந்திருக்கிறது.
........................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

3 comments:

து. பவனேஸ்வரி said...

நன்றாகக் காதலிக்கத் தெரிந்தவர்களே காதலிகள் :)

gayathri said...

kavithai ellam azaga iruku pa

kavitha said...

arumai