Mar 29, 2010

எனக்கான சொந்தம்..

நீ சூடும் பூக்களெல்லாம்
உதிர்வதாகவே நான்
நினைப்பதில்லை.
என் மனதோடும்..
மூடப்பட்ட என்
புத்தகத்தின் ஏதேனுமொரு
பக்கத்திலும்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றன..
இன்றுவரை.
............................................................
என் நினைவெங்கும்
உன் வாசம் ..
நாளெல்லாம் என்னில்
வீசும்..
நினைவுகளால்
உன்னை சூட
மனதெங்கும்
மழைசாரலடி..
கவிதையாய்
உன்னை பாட
என் உலகெங்கும்
புது வசந்தமடி.
..........................................
நீ வரமாட்டாய் என
தெரிந்தும்
பூச்செடிகள்
வளர்த்து வைத்திருக்கிறேன்
என் வாழ்வில்.
உன் நினைவுகளாவது
சுகமாய் இருந்துவிட்டு
போகட்டுமே.
.................................................
நீ பூக்களை சிந்துகிறாய்
என்றால்..
இல்லை நான் புன்னகை
சிந்துகிறேன் என்கிறாய்..
கவிதை எழுதி காட்டினால்
அது என் பெயரென்று சொல்கிறாய்..
இப்போது சொல்கிறேன்..
நீ கட்டி இருப்பது
சேலைதான் என்று..
நீயும் எப்போதும் போலவே
இல்லை..அது உன் காதல் என்கிறாய்..
பூக்களை சிந்திக்கொண்டே.
. .................................................................................
உன் கூந்தல்
பூக்களை போலவே
என் பிரியங்களையும்
மிக சுலபமாய்
எடுத்தெறிந்து விடுகிறாய்..
அதற்காக பூக்களை போல்
அவை வாடிவிடுமென
எண்ணிவிடாதே..
அவை காலங்கள்
தாண்டியும் உன்னை
சொந்தமென கொள்ள
ஆசைபடுகிறது.
.......................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

3 comments:

நட்புடன் ஜமால் said...

புத்தகத்தின் ஏதேனுமொரு
பக்கத்திலும்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றன..]]

அழகு காதல் லோகு ...

kavitha said...

என் மனதோடும்..
மூடப்பட்ட என்
புத்தகத்தின் ஏதேனுமொரு
பக்கத்திலும்
பூத்துக்கொண்டுதானிருக்கின்றன.



**** மிக அருமை ****

gayathri said...

hi pa unga kavithai eppavum pola rompa azaka iruku

innum neraya kavithai neegaa ezuthite irukanum vazthukkal