Jan 13, 2010

நானும்.. எனக்கான நீயும்..

உறவுகள் மீது
நம்பிக்கை இழந்து விட்டேன்..
கூடவே நட்புகள் மீதும்..
காதல் மீதும்..
என் எல்லாமே நீதானென்று
வாழ்ந்தது சத்தியமாய்
என் தவறுதான்.
..............................................
ஏமாற்றங்கள்
இயல்பாய் நிகழும்..
எதிர்பார்ப்புகள்
இருக்கும்வரை..
எதிர்பார்க்காதே..
யாரிடமும்..
எதுவும்.
.............................................
மனதெங்கும்
உன்னை
காணவேண்டுமென
ஏக்கம்தான்..

ம்.. கிணற்று தவளை
கத்துவது ஊருக்கு
கேட்கவா போகிறது?
...............................................
இயல்புகளை மீறிய
ஒன்றுதான்..
உனக்கும் எனக்குமான
சொந்தம்.,
அதற்காக நீ
இயல்புகளை
இழந்து விடாதே..
பிறகு வழிகள் மறந்து
வலிகள் மட்டுமே
தெரியும் உனக்கு.
...............................................
எப்போதும் போல
இனி எப்போதும்
பொய் சொல்ல
அறிவை பழக்கி கொள்கிறேன்
அல்லது சுத்தமாய்
அழித்தொழித்து விடுகிறேன்..
தினமும் 'எப்படி
இருப்பாய் நீ' என
கேட்கும் ஏன் வீட்டு
தோட்டத்து பூக்களையும்..
என் மனதையும்.
................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.

6 comments:

gayathri said...

nalla iruku pa

S.A. நவாஸுதீன் said...

ஏன் இத்தனை சோகம், விரக்தி. கவிதையில் மட்டும் இருந்துவிட்டு போகட்டும்.

நல்லா இருக்கு லோகு.

நட்புடன் ஜமால் said...

இயல்புகளை
இழந்து விடாதே..
பிறகு வழிகள் மறந்து
வலிகள் மட்டுமே
தெரியும் உனக்கு.]]

இங்க தான் நிக்கிறீங்க ...

அருமை

kavitha said...

எப்போதும் போல
இனி எப்போதும்
பொய் சொல்ல
அறிவை பழக்கி கொள்கிறேன்
அல்லது சுத்தமாய்
அழித்தொழித்து விடுகிறேன்..

varigal nalla irukku logu

து. பவனேஸ்வரி said...

அருமையான கவிதை...

து. பவனேஸ்வரி said...

அருமையான கவிதை...