செம்பவழம் நீதானே
பூவாசம் நான்தானே
போகும் வழியெங்கும்
மகாராணிக்கு வாசங்கள்
கொட்டி வைக்கும்
என் காதல் கண்மணியே
கள்ளிருக்கும் ரோசாவே
வண்ண பூஞ்சோலை நீதானே
வாடைகாத்தும் நான்தானே
உன்னை வட்டமிட்டு
செல்லம் கொஞ்சும்
என் காதல் செல்லம்மாவே
உன் முகம் நெஞ்சில் நிறைத்து
நெஞ்சுக்குள்ளே ஆசை வைத்து
ஆசைகளில் ஊஞ்சல் கட்டி
ராசாத்தி நீ ஆட
ராப்பகலா பார்த்திருக்கும்
என் காதல் கதையெல்லாம்
கட்டுமரம் போலாச்சு
கட்டவிழ்ந்து போயாச்சு
கண்ணீரில் மிதக்குது
கரை அது காணவில்லை
தேடிப்பார்க்கவும் மனசில்லை.
...........................................................
எது காதல்? -அத்தியாயம் 1
5 years ago