




ப்ரியமுடன்..
லோகநாதன்.
நினைவோடு வாழ்தல் தவமென்பர்.. வரமென்கிறேன் நான்..

பேருந்து பயணத்தின்
பின்னோக்கி செல்லும்
நினைவுகளாகவோ
கவிதை சொல்லிக்கொண்டு
உன்னையே சுற்றிகொண்டிருக்கும்
என் ப்ரியங்கள்.
தூறலாய் பொழியும்
ஒரு மழை நாளில்
கண்ணில் சாரலாய்
வழியும் சபிக்கப்பட்ட
நிமிடங்களில்
இது போதுமென
ஏகாந்தமாய் சாய்ந்திருக்கும்
வேளைகளில்
அல்லது கண்மூடி
மனம் நிறைந்து
ரசித்துக்கொண்டிருக்கும்
ஒரு பாடலின் வரிகளில்
என ஏதோ ஒன்றில்
உன் ஞாபக சிதறல்களில்
மெல்ல தட்டுபடலாம்
என் ப்ரியங்கள்.
நிச்சயமாக அவ்வேளையில்
கண்ணில் நீராக அல்ல
உன் இதழில் புன்னகையாக
வாழும் என் ப்ரியங்கள்.
ப்ரியமுடன்
லோகநாதன்.






























உன் கைவளைகள் சொல்லவில்லையா