Feb 22, 2011

சுகம்தாங்கி கற்கள்.

எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென.
***************************************
எப்போதும் சுமைகளையே
தாங்கும் சுமைதாங்கி கற்கள்
நீ அமரும்போது மட்டும்
சுகம்தாங்கி கற்களாகின்றன.
*************************************
நிலவை காட்டினால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடித்த
குழந்தை எதிரில் வந்த
உன்னை பார்த்ததும்
சிரித்துக்கொண்டே சாப்பிட
தொடங்குகிறது.
***************************************
வெறுமனே என்னை பார்த்து
புன்னகைத்து சென்றால்
துள்ளி குதித்து கும்மாளமிடுகிறது
இந்த மனசு.
இனிமேல் கூடவே ஒரு
முத்தமும் வைத்துவிட்டு போ..
மூர்ச்சையாகி கிடக்கட்டும்.
***************************************
அது எப்படி..
நீ ஏறிய பின்பு
பேருந்து
பேரழகுந்தாகிறது.
*****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

14 comments:

ரேவா said...

நிலவை காட்டினால்தான்
சாப்பிடுவேன் என அடம்பிடித்த
குழந்தை எதிரில் வந்த
உன்னை பார்த்ததும்
சிரித்துக்கொண்டே சாப்பிட
தொடங்குகிறது.

super nanba........
கலக்குங்க

karthikkumar said...

நாலு வரின்னாலும் சும்மா நச்சுன்னு இருக்கு மாம்ஸ் :)

து. பவனேஸ்வரி said...

" எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென"

அழகான வரிகள்....:)

gayathri said...

" எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..
பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென"

adada ithu enaku theriyama pochi

சுசி said...

காதல்ல்ல்ல்.. :)

நல்லா இருக்கு லோகு.

logu.. said...

ஹைய்யொடா..

கையோட ஒரு கரண்டி கொண்டு வந்து குடுதீங்ணா நல்லாருக்கும்.

நன்றிங்க ரேவா.

logu.. said...

மாம்ம்ஸூ...

எல்லாம் உங்களுக்குதான்..
நன்றிங்க மாமு.

logu.. said...

பவன்ஸ்ஸ்ஸ்..

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.
நன்றி.

logu.. said...

நன்றிங்க காயத்ரி & சுசி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா... கவிதை கவிதை :-))

logu.. said...

ஹையோடா... வாங்க.. வாங்க.. ஆனந்தி.

போளூர் தயாநிதி said...

" எப்போது முத்தம் கேட்டாலும்
முறைத்துக்கொண்டே
திரும்பி நின்று கொ(ல்)ள்கிறாயே..
தெரியுமாடி உனக்கு..

ஹேமா said...

சுகம்தாங்கும் கல் ...என்ன கற்பனை...அற்புதம் லோகு !

sathishsangkavi.blogspot.com said...

..பின்னங்கழுத்தில் முத்தமிட கூடாதென்று
காதலில் எந்த விதியும் இல்லையென...

ம் ரசிச்சேன் இவ்வரிகளை....