Aug 10, 2011

குட்டி..

இழப்புகளின் வலி
அறியாத காலம்
அதன் போக்கில்
சென்று கொண்டிருக்கிறது.
உன் நினைவுகளை
கட்டி வைக்க பெரும்பாடு
படுகிறேன் நான்.
******************************
சொல்லாதே குயிலே
எந்த பாடலும் என்னோடு..
என் சோகம் சொல்லவே
நாதியற்று கிடக்கிறேன்.
******************************
உணர்வுகள் என்று
பார்த்தால் என்னிடம்
ஒன்றும் இல்லயடி குட்டி..
உன் நினைவுகளை தவிர.
***************************
ஒவ்வொரு நாளும்
பொய்யாய் கழிந்து
கொண்டிருக்கிறது..
இன்றேனும் எனை
தேடி வருவாய் என்ற
நம்பிக்கையோடு.
**************************
காலுடைந்த மயிலை
போலல்ல..
கனவுடைந்த நெஞ்சம்.
கண்ணீரிலும் உன்னைதான்
நினைத்துகொண்டிருக்கிறதடி குட்டி.
*****************************
கூந்தல் இளைப்பாறும்
பூக்கள் அறிந்திருக்குமா?
கருகிப்போகும்
காம்பின் வலிகள்.
********************************
நானும் கவிதையும்
நலமாய் வாழ்ந்திருக்கலாம்தான்.
நாளும் உன் நினைவற்று
போயிருந்தால்.
***************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

5 comments:

Harini Resh said...

//உணர்வுகள் என்று
பார்த்தால் என்னிடம்
ஒன்றும் இல்லயடி குட்டி..
உன் நினைவுகளை தவிர.//
Nice kavithai logu

gayathri said...

ஒவ்வொரு நாளும்
பொய்யாய் கழிந்து
கொண்டிருக்கிறது..
இன்றேனும் எனை
தேடி வருவாய் என்ற
நம்பிக்கையோடு.

naan ready nee ready logu

logu.. said...

\\ Harini Nathan said...
//உணர்வுகள் என்று
பார்த்தால் என்னிடம்
ஒன்றும் இல்லயடி குட்டி..
உன் நினைவுகளை தவிர.//
Nice kavithai logu\\

dan q

logu.. said...

\\ gayathri said...
ஒவ்வொரு நாளும்
பொய்யாய் கழிந்து
கொண்டிருக்கிறது..
இன்றேனும் எனை
தேடி வருவாய் என்ற
நம்பிக்கையோடு.

naan ready nee ready logu\\

Adi aatheeee...

kavitha said...

///வாழ்ந்திருக்கலாம்தான்.நாளும் உன் நினைவற்று ///

மிக அருமை, எப்டி தான் வரிகள் இவ்ளோ அழகு வருதோ.
ரொம்ப உணர்ச்சியான கவிதை