
காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************



















































