Feb 16, 2011

மனமுதிரும் காலம்.

கொஞ்சம் கூட
உறுத்தவே இல்லை.
இலையுதிர்கால மரங்கள்.
.
.
துணை.
***********************************************
பூஜைக்கு போவேனா மாட்டேனா
கேட்டுவிட்டு பூப்பதில்லை.
.
.
கல்லறை பூக்கள்.
**************************************
ரசிக்க எத்தனையோ உள்ளன.
ரசிக்கும் மனம்தான் கேள்வியாகிறது.
.
.
பிரிவுகள்.
******************************
பறக்க ஆசைப்படும்
சிறகொடிந்த பறவையை போல்
தடுமாறுகின்றன
நமக்கான நேரங்கள்.
.
.
மனசின் வார்த்தைகளின்மை.
********************************
எப்போதும் வெறுப்புகளை
உமிழ்ந்தாலும்
தேவதையாக வாழ
தெரிந்திருக்கிறது.
.
.
காதலி.
**************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

6 comments:

Unknown said...

nice

Anonymous said...

அழகிய முத்துக்கள் வரிகளிலும் படங்களும்..

gayathri said...

ரசிக்க எத்தனையோ உள்ளன.
ரசிக்கும் மனம்தான் கேள்வியாகிறது.
.
.
பிரிவுகள்.

logu.. said...

Nanringa JJ

logu.. said...

Nanringa tamil & gayathiri

எவனோ ஒருவன் said...

ரொம்ப நல்லா இருக்கு லோகு. ஏதோ ஒரு இனம் புரியாத வலியுடன் தங்கள் கவிதைகளை கடக்கிறேன்....