Feb 11, 2011

கடைசியாய்..



"ஹாய்.."

"வந்துட்டியா.. வாடி குட்டி.."
"இந்த குட்டி பட்டிலாம் வேணாம்.."
"சரி விடு.. குளிச்சிட்டியா?"
"ஓ.. ஆச்சே.."
"அடடா..போச்சே.."
"என்ன போச்சு?"
"ம்ம்.. நான் இதுவரைக்கும்
பொம்மையை குளிப்பாட்டியதே இல்லையடி..
அதான் நீ குளிக்கலேன்னா குளிப்பாட்டி விடலாமேன்னு பார்த்தேன்.
சரி விடு.. சாப்டாச்சா?"
"ம்ம்.. ஆச்சே.. நீ?"
"அட.. அதும் போச்சா?"
"ஏன் பொம்மைக்கு ஊட்டி விட போறியாக்கும்?"
"அட லூசுபுள்ள.. பொம்மை சாப்ட்டு எங்காச்சும் பாத்திருக்கியா?"
"பின்ன?"
"ஹிஹி .. கொழந்தைங்களுக்கு நான் இதுவரை
ஊட்டி விட்டதே இல்லையடி.. அதான் கேட்டேன்."
"ஏய்.. இந்த மாதிரில்லாம் பேசாதே..
அப்புறம் நான் போய்டுவேன்.. "
"சரி.. சரி.. விடு.. மத்தியானம் தூங்குவியா?"
" அதெல்லாம் இல்ல .. ஏன் கேக்குற?"
"ம்ம்.. பூக்கள் என் மடி சாஞ்சு பார்த்ததே இல்லையடி..
அதான் நீ தூங்குனா.. உன்ன மடியில சாய்த்து ... "
"அடேய்... "


சட்டென்று கலைந்துவிட்டது.
விழியோரம் உணர்ந்த ஈரத்தால்.
முழுமையாக உன் நினைவுகளிலிருந்து
கலைந்து திரும்பலாமென நினைத்து
கடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.
காணவில்லை மனதை மட்டும்.
கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.
********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

9 comments:

ரேவா said...

விழியோரம் உணர்ந்த ஈரத்தால்.
முழுமையாக உன் நினைவுகளிலிருந்து
கலைந்து திரும்பலாமென நினைத்து
கடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.
காணவில்லை மனதை மட்டும்.
கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.


superbbbbbbbbbb

Anonymous said...

//சட்டென்று கலைந்துவிட்டது.
விழியோரம் உணர்ந்த ஈரத்தால்.
முழுமையாக உன் நினைவுகளிலிருந்து
கலைந்து திரும்பலாமென நினைத்து
கடைசியாய் என் இருப்புகளை சரிபார்த்துகொண்டேன்.
காணவில்லை மனதை மட்டும்.
கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது. //

எனக்கும் வலிக்கிறது இந்த வதை..

gayathri said...

கடந்து சென்றதுதான் உன்னுடனான
இறுதி பயணம் என்பதை அறியாமல்
இன்னும் உன்னை கொஞ்சிகொண்டோ
அல்லது கெஞ்சிகொண்டோ இருந்தது அது.

சுசி said...

நல்லா இருக்கு லோகு.

logu.. said...

Nanringa Reva..

logu.. said...

\\எனக்கும் வலிக்கிறது இந்த வதை..\\

mm..
valigalna valikathan seium.
nanringa tamil.

logu.. said...

Nanringa gayathri, Susi..

எவனோ ஒருவன் said...

மனசுல ஒரு வித சந்தோசத்தோட இப்பதிவை படித்துக் கொண்டிருந்தேன். திடீர்னு கனவு என்று சொல்லிட்டீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ். கவிதை மிக அருமை.

து. பவனேஸ்வரி said...

அழகான நினைவுகளெல்லாம் கனவாக ஆவது ஏனோ?