Dec 10, 2008

பொறாமை..

தினம் காலை நீ
கண்விழித்ததும்
நீ சோம்பல்
முறிக்கும் அழகை
கண்மூடாமல் பார்க்கும்
உன் வீட்டு கண்ணாடி ஜன்னலை
பார்க்க பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.........................................
பூவை தாங்கும்
காம்பென..
தண்ணீர் குடம்
தாங்கி நீ நடந்து வர..
தழும்பி வழியும்
தண்ணீரை பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
நீ தூங்க ஆரம்பிக்கும்போது
சமர்த்தாய்
உன் கூந்தலோடு
உறவாடிக்கொண்டிருந்தாலும்..
நடு இரவில்
உன் நெஞ்சாங்குழியில்
தஞ்சமடைந்திருக்கும்
தலையணையை
பார்க்க பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
.............................................
சின்ன குழந்தைதான்
என்றாலும்..
நீ ஒரே ஒரு
முத்தம் கொடு என
கொஞ்சும்போது..
வேறென்ன...
பொறாமைதான் எனக்கு.
........................................
எங்கேனும்
அருவியை பார்க்க..
உன் புன்னகையை
கடன் வாங்கியிருக்குமோ என
பொறாமையாக
இருக்கிறது எனக்கு.
............................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

6 comments:

gayathri said...

பூவை தாங்கும்
காம்பென..
தண்ணீர் குடம்
தாங்கி நீ நடந்து வர..
தழும்பி வழியும்
தண்ணீரை பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு

intha nalla iruku pa

gayathri said...

photo nalla iruku pa

logu.. said...

\\ gayathri கூறியது...
பூவை தாங்கும்
காம்பென..
தண்ணீர் குடம்
தாங்கி நீ நடந்து வர..
தழும்பி வழியும்
தண்ணீரை பார்க்க
பொறாமையாக
இருக்கிறது எனக்கு

intha nalla iruku pa\\

nanri.

logu.. said...

\\ gayathri கூறியது...
photo nalla iruku pa \\


orukkk...kaal
unnoda face antha mathiri irukkumo?

து. பவனேஸ்வரி said...

//தினம் காலை நீ
கண்விழித்ததும்
நீ சோம்பல்
முறிக்கும் அழகை
கண்மூடாமல் பார்க்கும்
உன் வீட்டு கண்ணாடி ஜன்னலை
பார்க்க பொறாமையாக
இருக்கிறது எனக்கு.//

எனக்கும் பொறாமை வந்துவிட்டது... கண்ணாடி ஜன்னல் மீதல்ல கண்ணாடி மீது!

logu.. said...

\\ து. பவனேஸ்வரி கூறியது...
//தினம் காலை நீ
கண்விழித்ததும்
நீ சோம்பல்
முறிக்கும் அழகை
கண்மூடாமல் பார்க்கும்
உன் வீட்டு கண்ணாடி ஜன்னலை
பார்க்க பொறாமையாக
இருக்கிறது எனக்கு.//

எனக்கும் பொறாமை வந்துவிட்டது... கண்ணாடி ஜன்னல் மீதல்ல கண்ணாடி மீது!\\

nanringa..
muthal varugaikum vazhthirkum..

athukkaga kannadi pakkam pogama irukkatheenga.