Nov 24, 2008

என் காதல்..

என்றோ நாம் சேர்ந்து
சென்ற பயணங்களின்
சுவடுகளை இன்றும்
நினைவுபடுத்தும்
ஒற்றையடி பாதை..

மணிக்கணக்காய்
அருகருகே அமர்ந்திருந்தும்
எதுவும் பேசாமல்
மௌனங்களால் மனதோடு பேசி
அமர்ந்திருந்த
கோவில் படிக்கட்டுகள்..

உச்சி வெயில்தான் என்றாலும்
உன் அருகாமையினால்
உள்ளம் குளிர்ந்த
மந்திர நாட்கள்..

எல்லாம் வாடிவிட்டன
நீயின்றி..
என்றாலும்
என் காதல் மட்டும்
உன் நினைவுகளோடு வாழ்ந்தேனும்
ஆண்டாண்டு காலம்
பூத்துக்கொண்டுதானிருக்கும்.
..............................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

6 comments:

gayathri said...

எல்லாம் வாடிவிட்டன
நீயின்றி..
என்றாலும்
என் காதல் மட்டும்
உன் நினைவுகளோடு வாழ்ந்தேனும்
ஆண்டாண்டு காலம்
பூத்துக்கொண்டுதானிருக்கும்

nalla kavithai varikal

photo azaka iruku pa

gayathri said...

மணிக்கணக்காய்
அருகருகே அமர்ந்திருந்தும்
எதுவும் பேசாமல்
மௌனங்களால் மனதோடு பேசி
அமர்ந்திருந்த
கோவில் படிக்கட்டுகள்

iru managal pesikkondu irukum pothu ange utathukku enna velai

logu.. said...

...thnks...

unmaithaan...

manangal pesumpothu
varthaikalukku vekaiyillai.

Unknown said...

:))

logu.. said...

punnakaikku nanri..

து. பவனேஸ்வரி said...

//எல்லாம் வாடிவிட்டன
நீயின்றி..
என்றாலும்
என் காதல் மட்டும்
உன் நினைவுகளோடு வாழ்ந்தேனும்
ஆண்டாண்டு காலம்
பூத்துக்கொண்டுதானிருக்கும்//

ஆமாம்..காதலுக்கு அழிவேது? அருமையான கவிதை...