Jul 17, 2013

புதைகுழி..



என்ன சொன்னாலும்
ஏனோதானோவென்று
ஒரு அவதானிப்பு!
என்ன கேட்டாலும்
ஏதுமில்லாமற்போல்
ஒரு ஏகாந்தம்..!
எத்தனை காதலை
கொட்டினாலும்
புரியாதாவென அவ்வப்போது
சண்டையிட்டதாய் ஞாபகம் .
பிரிதொரு மழை நாளில்
ஈரமாய் புன்னகைத்து
மழையோடு மழையாய்
பொழிந்தாய் ஒற்றைப்பார்வையை..
விருப்பா..
வெறுப்பா..
இயலாமையா..
களிப்பா..
ஏகாந்தமா..
எதுவும் புரியாமலேயே
புரிந்துகொண்டேன்.
உனக்கு புரியாமலில்லை..
புதைத்து வைத்திருக்கிறாய் என்று!
**************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்..

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

நச் வரிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

புரிந்தும் புரியாமலும்... அருமை...

ஹேமா said...

ம் காதல் !