Aug 23, 2013

காதலூட்டும் அன்னப்பறவை..


ஒவ்வொரு
முறையும்
எனை கடந்து
சென்றபின்
நீ திரும்பி பார்க்கும்போது
கரைவதற்கென்றே
தனியாக ஒரு
இதயம் செய்து
வைத்திருக்கிறேன்.
தெரிந்திருக்குமாடி உனக்கு?
 *************************************

நீலக்கடலில்
சோலைக்குயில்
பாதம் நனைக்க
காணாத கற்பக
விருட்சம் கண்டதாய்
களிப்புற்று கடலலையும்
துள்ளி வரும்..!
என் மனதை போலவே


ஒரு மழை நாளோ
அல்லது
அலைபேசி பாடலோ
சட்டென்று தூவிச்செல்லும்
உன் நினைவை..!
ஆனால் இந்த தனிமை
மட்டும்தான்
உன் நினைவோடு
வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது!

பசியறிந்து
உணவூட்டும்
அம்மாவைப்போல்
மனசறிந்து
காதலூட்டி செல்பவள் நீ!
***********************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்..

No comments: