Jan 6, 2011

காதல்பேச்சு.


உன்னுடன் இருக்கும் நேரங்களிலெல்லாம்
சொல்பேச்சு கேளாமல் காதல் பேச்சு மட்டுமே
கேட்பேனென அடம் பிடிக்கின்றன
என் நேரங்களும் வார்த்தைகளும் மற்றவையும்.
அதற்காக என் காதலை சீண்டி பார்க்காதே
பிறகு உதடு வலிக்கிறதென சொன்னால்
நான் பொறுப்பாக முடியாது.
***********************************************
குட்டி கவிதைகளாகவோ அல்லது
கொஞ்சும் நினைவுகளாகவோ எப்படியும்
என்னுடன்தான் இருக்கப்போகிறாய் நீ..
பிறகு ஏன் இனிமேல் உன் முகத்திலே
முழிக்கவே மாட்டேனென அழிச்சாட்டியம்
செய்து போகிறாய்?
************************************************
"வர வர என்னை சீண்டுவதே உனக்கு
வேலையாக போய்விட்டது
இனிமேல் உன் பக்கமே வரமாட்டேன் பார்.. "
கொஞ்சலாய் வந்தது கோபமொழி.
"ஆமா.. ஆமா.. உன் வெட்கத்தை பார்த்தாலே
எதாச்சும் பண்ண தோணுது எனக்கு..
வரும்போதே அதை எங்காச்சும் விட்டுட்டு வந்துடு.
எனக்கும் வெட்கமில்லாத உன்னை பார்க்க
ஆசையாய் இருக்கிறது.." என்றேன் புன்னகைத்துக்கொண்டே.
"ம்க்கூம்.. ரொம்பதான் ஆசை.."
மறுபடியும் போர்த்திகொண்டாய் வெட்கத்தை.
புன்னகைகளில் கரையத்தொடங்கியது
வெட்கம் மெல்லமாய்.
********************************************************
என்றுமில்லாத அதிசயமாய்
என் தோட்டத்து செடிகளில் ஒன்று மட்டும்
அதிகமாக பூத்து குலுங்கியது.
என்னவென்று கேட்டுதொலைக்க
கர்வமாய் சொல்கிறது..
நேற்று நீ அந்த செடியில்தான் பூ பறித்து சென்றாயாம்.
*************************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

9 comments:

karthikkumar said...

arumai nanba kurippa kadaisi varigal

Harini Resh said...

//புன்னகைகளில் கரையத்தொடங்கியது
வெட்கம் மெல்லமாய்//
Nice lines :)

ஹேமா said...

கர்வம் கொண்ட பூ மிக மிக அழகு.புதிதும் கூட !

Anonymous said...

காதல் பூந்தோட்டமா? கவிதைத்தோட்டமா? லோகு அத்தனையும் அழகு

Unknown said...

ஆஹா... அருமையான கவிதைகள்.. ரொம்ப அழகா எழுதிருக்கிங்க.. :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

logu.. said...

Natpooooooooooooooo..

Nanri...

logu.. said...

Nanringa harini, hema, Tamil,JJ & Prasha

gayathri said...

nalla irukuga unga kavithaikal anithum