Dec 9, 2010

நான் + நாம்..

தயக்கமின்றி பேசிய
வார்த்தைகளெல்லாம்
தள்ளி செல்ல மறுத்துவிட்டன.
தவணை முறையில்
தந்த முத்தங்களெல்லாம்
தயக்கமின்றி கொல்கின்றன.
குறுகி போய் ஒரு வட்டத்திற்குள்
அடைபடும் முன்
வந்துவிடு வசந்தங்களாய்..
ஒருமுறையேனும்.
---------------------------------------------------------------
நான் கேட்காமலேயே
உன் பிரியங்களை
வரங்களாக்கி தர
தெரிந்திருந்தது உனக்கு.
கெஞ்சி கேட்டும்
பிரிவுகளை தள்ளி போட
முடியவில்லை உன்னால்.
----------------------------------------------------------

அவள் என்னோடு
பழகியது வரங்களாக
இருக்கலாம் எனக்கு.
நான் அவளோடு
பழகியது சாபங்களாகி
போய்விட்டதே..

வரங்களை மறுக்கலாம்..

சாபங்களை என்ன செய்ய?
-------------------------------------------

நான் அவளுடன் இருந்த
நேரங்கள் குறைவுதான்..
அனால் அவள் என்னுடன்
இருந்த.. இருக்கபோகும்
நேரங்கள் மிக அதிகம்.
முன்பு நிஜமாகவும்..
கனவாகவும்..
இனி நினைவாகவும்..
கண்ணீராகவும்.
-------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

17 comments:

sakthi said...

தயக்கமின்றி பேசிய வார்த்தைகளெல்லாம் தள்ளி செல்ல மறுத்துவிட்டன.தவணை முறையில் தந்த முத்தங்களெல்லாம் தயக்கமின்றி கொல்கின்றன.குறுகி போய் ஒரு வட்டத்திற்குள் அடைபடும் முன் வந்துவிடு வசந்தங்களாய்..ஒருமுறையேனும்.

சீக்கிரம் வந்து விடேன் இவ்வளவு கெஞ்ச வைத்தல் தகுமோ

sakthi said...

முன்பு நிஜமாகவும்..கனவாகவும்..இனி நினைவாகவும்..கண்ணீராகவும்

ஏன் எப்போதும் கண்ணீர் கவிதை :(

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் நெஞ்சை வருடுகின்றது...

நீங்கள் ஈரோடா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_11.html

நன்றி!

Anonymous said...

//அவள் என்னோடு
பழகியது வரங்களாக
இருக்கலாம் எனக்கு.
நான் அவளோடு
பழகியது சாபங்களாகி
போய்விட்டதே.. வரங்களை மறுக்கலாம்..சாபங்களை என்ன செய்ய?//

வலிக்கத்தான் செய்யும்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

"நிஜமாகவும்.. கனவாகவும்...,
நினைவாகவும்...கண்ணீராகவும்."

ஹ்ம்ம்.. ரொம்ப அழகா இருக்கு வரிகள்..
படங்கள்.. ரொம்ப ரொம்ப க்யூட்-ஆ இருக்கு :)

logu.. said...

appapo vanthuruthunga sakthi..
ini nalla podalam..

Nanringa sakthi.

logu.. said...

muthal varugaiku nanringa sangavi.


mm.. na eroduthanga.

logu.. said...

agga... nanringa ramsamyannooovvvv...

logu.. said...

Nanringa Tamil...

logu.. said...

Poonainale azhaguthane ananthi..

Nanringa Ananthi.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ரொம்ப அழகா இருக்கு வரிகள்..

logu.. said...

mm..Nanringa prasha.

gayathri said...

pujji photos ellam azaga iruku

un kavithai varikalum azhagu

ஹேமா said...

லோகு...காதல் என்றாலே வரமும் சாபமும் நிறைந்த தெருவீதிபோலத்தான்.வாகனத்தை ஓட்டுபவனும் சரி நடைபாதையில் பாதசாரியும் சரி விதியின் பிடியில்தான் !

logu.. said...

Nanringa gayathri...

logu.. said...

\\ ஹேமா said...
லோகு...காதல் என்றாலே வரமும் சாபமும் நிறைந்த தெருவீதிபோலத்தான்.வாகனத்தை ஓட்டுபவனும் சரி நடைபாதையில் பாதசாரியும் சரி விதியின் பிடியில்தான் \\

Corrcta sollirukeenga hema..