Nov 22, 2008

நமக்கான உலகம்..

நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..
புல்மீது பனியென
என் மடியோடு நீ..
எவ்வளவு நேரமோ..
சட்டென்று
எழுந்து தோள்சாய்கிறாய்..
கூடவே..
'கால் வலிக்கிறதா..'
கேள்வி வேறு..
அடி பைத்தியக்காரி..
நீ இருக்கும் வரைதான்
என் மடி மட்டுமல்ல..
மனதும் கூட
சுமை இன்றி
இருக்கிறது என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பேன் நான்..
..................................................
நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..

கண்மூடி கவலை மறந்து
உன் மடியோடு நான்..
சட்டென்று..
' நேரமாகிறது..
வா.. போகலாம்'
என்கிறது வார்த்தை வழி
உன் வெட்கம்.
கூடவே..
' இன்னும் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும்
இப்படியே இருக்கலாம்'
என்று விரலால் தலை கோதும்
உன் காதல்.

உன் வெட்கத்திற்கும்
காதலுக்கும் இடையில்
சிக்கி அவஸ்தைப்படுகிறேன் நான்.
.............................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு
எதிரே வந்தாய்.
சட்டென்று எதோ
தடுக்கிவிடுகிறது உன்னை..
உள்மனம் பதற..
' பார்த்து வரக்கூடாதா?'
என்றேன்.
'பார்த்துக்கொண்டுதான்
வந்தேன்டா'
என்கிறாய்.
'பிறகு எப்படி?'
என்றேன் எதுவும் புரியாமல்.
'உன்னைத்தானடா
பார்த்துக்கொண்டு வந்தேன்.
நீ எதிரே வரும்போது
எனக்கு வேறு எதுவுமே தெரிவதில்லை'
என்கிறாய் மீண்டும்
என்னையே பார்த்துக்கொண்டு.
.................................................................
அழகாகத்தான்
புன்னகைத்துக்கொண்டு வந்தாய்.
நானும் புன்னகைக்க..
'நலமா' என்றாய்..
'நலம்' என்றேன்.
'அப்புறம்' என்றாய்.
'ம்.. அப்புறம்..'என்றேன்.
'சரி.. வருகிறேன்'
போகவும் செய்தாய்..
சிலையான உணர்வுகள்
உயிர்த்த பின்புதான் தெரிந்தது..
நாமும் ஏதாவது
கேட்டிருக்கலாமோ என்று.
.................................................................
' உனக்கு ரொம்ப புடிச்சது என்னடா'
'ம்ம்ம்ம்ம் ... எல்லாமே..'
'எல்லாமேன்னா?'
'எல்லாமேதான்..'
'அப்பா நானும் அந்த
எல்லாத்துல ஒன்னுதானா?'
'இல்ல.. நீதான் என் எல்லாமே..'
..............................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

2 comments:

gayathri said...

நமக்கான உலகம்..
நமக்கான ரோஜா தோட்டம்..
கண்மூடி கவலை மறந்து
உன் மடியோடு நான்..
சட்டென்று..
' நேரமாகிறது..
வா.. போகலாம்'
என்கிறது வார்த்தை வழி
உன் வெட்கம்.
கூடவே..
' இன்னும் எவ்வளவு
நேரம் வேண்டுமானாலும்
இப்படியே இருக்கலாம்'
என்று விரலால் தலை கோதும்
உன் காதல்.

intha lines rompa nalla iruku pa

logu.. said...

mmm... thanks

va zh thi ya tha rk ku..