Nov 21, 2008

இது மழைக்காலம்...

மழை..
மண்ணுக்கு ஈரம்..

மனதுக்கு இதம்..
மழையை பிடிக்காதவர் யார்..
மழைக்கு பிடிக்காதவர் யார்..
ஏனோ எனக்கு மட்டும்
பிடிக்காமல் போய்விட்டது மழையை..
ஏதோ ஒரு நாளின்
அந்திப்பொழுதில் சாரலாய் பொழிந்து
உன்னை பார்க்கவிடாமல் தடுத்ததிலிருந்து..
...............................................................
நேரம் காலமில்லாமல்
உன்னால் முடிந்தவரை
பேசிக்கொண்டே இரு..
எனக்கு மழை என்றால்
ரொம்ப பிடிக்கும்..

உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு மழைக்காலம்
வந்து போகிறது..
..............................................................
சிலுசிலுவென
தூறல் பொழிய ..
தூரத்தில் எங்கோ
இரு புள்ளிகள் தெரிய..
அட.. அது நீயும்
நானுமாய் இருக்க..
கண்மணியே..
மழையோடு மழையாய்
உன் அணைப்பில் கரைய மாட்டேனா..
.................................................................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

2 comments:

gayathri said...

நேரம் காலமில்லாமல்
உன்னால் முடிந்தவரை
பேசிக்கொண்டே இரு..
எனக்கு மழை என்றால்
ரொம்ப பிடிக்கும்..
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஒரு மழைக்காலம்
வந்து போகிறது

kavithia variakl nalla iruku pa

logu.. said...

romba santhosamnga gayooo.