Feb 14, 2012

காதல்..

காதல்..
உணர்வை சுமக்கும்
அற்புத மந்திரம்.
உயிரை வருடும்
மந்திர வாக்கியம்.
காதல் உணர்வு.
உயிர் உண்டு..
உருவம் இல்லை.
காதல் குழந்தை.
அழுதால் அழும்..
சிரித்தால் சிரிக்கும்.
காதல் மழை.
ரசிப்பவருக்கு சாரல்.
வெறுப்பவருக்கு புயல்.
காதல் கவிதை.
சிலருக்கு மனதோடு..
சிலருக்கு இதழோடு.
குளிரும் சித்திரையாய்
குளிராத மார்கழியாய்
முரன்பாடானதுதான் காதல்
முற்றும் உணரும் வரை.
எத்தனை எத்தனை
இதயங்களில் வாழ்ந்திருக்கும்..
எத்தன எத்தனை
கரங்களில் தவழ்ந்திருக்கும்..
இன்றும் கறைபடியாத
முதல் மழைத்துளியாய் காதல்.
வாருங்கள்..
ஒருமுறையேனும் வாழ்ந்து
பார்ப்போம்.
காதலாகி.. காதலோடு..
****************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

3 comments:

kavitha said...

அருமையா இருக்கு கவிதை.
ரொம்ப நாள் கழிச்சி எழுதி இருக்கே.. ஏன் இவ்ளோ நாள் இடைவெளி விட்டுட்டே கவிதைக்கு??!!. எழுது நெறையா

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html