Aug 24, 2009

உணர்வு நீ..

வெறும் வார்த்தைகளாகவோ..
அல்லது உன் செய்கைகளில்
அன்னியமகவோ எனக்கு
உணர்த்தியிருக்கலாம் நீ..
ஏன் உன் வார்த்தைகளில்
பரிவையும்..
உன் செய்கைகளில்
காதலையும்
கொட்டி வைத்தாய்..
இப்போது பார்..
நலமாய் வாழ்வான் என
நீ நினைத்திருக்க..
இங்கே யாரும் அறியாமல்
மிக நுட்பமாய்
பைத்தியமாகிகொண்டிருக்கிறேன் நான்.
..........................................................................
என் உலகம் முழுதும்
உன் நினைவுகளால்
சூழப்பட்டு அதற்கான
கதவுகளாலேயே
அடைத்துக்கொண்டு விட்டது.
நானும் அவ்வப்போது
ஒவ்வொன்றை உடைத்து
வெளியில் வர
முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.
இன்னும் முழுதாய் வந்தபாடில்லை.
ஒருவேளை என் காலம்
முழுதும் இப்படியே
சென்று விடுமோ..
........................................................................
ஒரு சர்வாதிகாரியை போல
என் நெஞ்சில் சிம்மாசனமிட்டு
ஆங்காரமாய் அமர்ந்திருக்கிறாய்..
நீ இருக்கிறாய் என்று
ஆணவமாய் நடைபோட வேண்டிய
நானோ இன்று அழுதுகொண்டு.
.....................................................................
மழையை கண்டாலே
மகிழ்ந்தாடும் என் மனதிற்கு
இப்போதெல்லாம் மழை நாட்களை
கண்டாலே பயமாய் இருக்கிறது .
எப்போதும் போல அது
மனதை நனைத்து செல்லாமல்
இப்போதெல்லாம் மிக ஆழமாய்
காயங்கள் செய்யவும் செய்கிறது.
உன் நினைவுகளால்..
.....................................................................
இதுவரை எவ்வளவோ
தொலைத்தாயிற்று..
ஒன்று கூட என் மனதில்
ஆழமாய் சலனம்
ஏற்படுத்தியதில்லை..
உன்னை தவிர.
..................................................................

5 comments:

நட்புடன் ஜமால் said...

ஏன் உன் வார்த்தைகளில்
பரிவையும்..
உன் செய்கைகளில்
காதலையும்
கொட்டி வைத்தாய்..]]

மிக சரியான கேள்வி ...

லோகு said...

அட்டகாசமான கவிதை..
தனிமையின் நரக வேதனையை சொல்கிறது.. மிக அருமை..

நட்புடன் ஜமால் said...

ஒருவேளை என் காலம்
முழுதும் இப்படியே
சென்று விடுமோ..]]


ஆகாது ஆகாது

சரியாயிடும் ...

ப்ரியமுடன் வசந்த் said...

//மழையை கண்டாலே
மகிழ்ந்தாடும் என் மனதிற்கு
இப்போதெல்லாம் மழை நாட்களை
கண்டாலே பயமாய் இருக்கிறது .//

ப்ச்

அட விடுங்க .....

கவிதைகள் பட்டாசா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை.

எப்படி இவ்வளவு நாளா இந்தப் பக்கம் வராமல் போனேன். நன்றி காயு