Jul 28, 2009

மனசின் வார்த்தைகளின்மை..

முகம் மூடி
வைத்துகொண்டால்
முக(ம்)வரி மறந்து விடுமா?
இதழ் மூடி
வைத்துக்கொண்டால்
வார்த்தைகள்
தொலைந்து விடுமா?
இமைகள் பாரமென்று
கண்கள் சொல்லாதடி..
நினைவுகள் சோகமென்று
இதயம் வெறுக்காதடி....
கெஞ்சும் உன்னை கெஞ்சும்
உன் வெட்கம் கண்டு கொஞ்சும்..
நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உன் மடியில்தான் தஞ்சம்..
மூடிவைக்கவா நான்
ஆசைகள் வளர்த்தேன் பெண்ணே..
உன்னை பிரிந்து செல்லவா
நான் காதல் வளர்த்தேன் பெண்ணே..
சொல்லி புரிவதில்லையடி காதல்
சொல்லவும் வார்த்தைகள்
இல்லையடி என்னிடம்..
ஆம் பெண்ணே..
வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
...............................................

7 comments:

அப்துல்மாலிக் said...

நல்லாயிருக்கு

ரசித்தேன்

sakthi said...

வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.

அருமை லோகு

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகளில் சந்தம் சிந்து பாடுது

சோகம் இழையோடுது ...

ivingobi said...

Happy Bday dear Logu...... ungkalin kanavugal ellamum ungalin viruppa padi niraivera.... neenda aayulum niraivaana vaazhvum vaazha iraivanai vaendukindren.....

dharshini said...

கவிதை அழகு..

லோகு said...

அருமை...

//வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
....................................//

தீராத வலியையும், வெறுமையையும் உணர்த்துகிறது...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Anonymous said...

//சொல்லி புரிவதில்லையடி காதல்
சொல்லவும் வார்த்தைகள்
இல்லையடி என்னிடம்..
ஆம் பெண்ணே..
வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
//

காதலின் தன்மை மொத்தமும் சொல்கிறது இவ்வரிகள்..

ஏன் உன் போஸ்டிங் எனக்கு அப்டேட் ஆவதில்லை..