May 19, 2009

முத்தவியல்..

"டேய்.. "
"........................."
"டேய்.. உன்னத்தான்டா.."
"ம்ம்.. என்ன..?"
"என்ன அய்யா வந்ததுலேர்ந்து
ஒண்ணுமே பேசல?"
"ஒண்ணுமில்ல..
ஒரு யோசனைல இருந்தேன்.."
"என்னிடம் கூட பேசாமல்
அப்டி என்ன யோசனை உனக்கு?"
"அதான் யோசனையே..
உன்னிடம் பேசாமலேயே
உன்னிடம் முத்தம் வாங்க வேண்டும்..
எப்டீன்னு யோசித்து பார்த்தேன்.."
"அதானே பார்த்தேன்..
நீ திருந்தவே மாட்டியாடா.."
"சரி..சரி.. ஒரு சின்ன்ன்ன முத்தம் கொடு..
ஒரு ரெண்டு நிமிசத்துக்கு திருந்திகறேன்.."
"ஏய்.. கொன்னுடுவேன்.. வேற பேசு.."
"செல்லம்மா.."
"என்ன சொல்லு.."
"அள்ளஅள்ள குறையாதுன்னு
சொல்லுவாங்களே என்ன அது?"
"அது அட்சய பாத்திரம்டா.."
"அத பாத்திருக்கியா?"
"இல்ல.. கேள்விப்பட்டதோட சரி.."
"சரி.. கொள்ள கொள்ள நிறையாததுனு
கேள்விப்பட்டிருக்கியா ?"
"இல்லையே.. என்ன அது?"
"அது என்னன்னெல்லாம் சொல்லமுடியாது..
ஆனா அது என்னிடமே இருக்கு.."
"என்னடா அது?"
"அதான் சொல்றேன்ல சொல்லமுடியாதுன்னு..
வேணும்னா நீ டெஸ்ட் பண்ணி பாரு.."
"நானா.. எப்படீடா.."
"அப்படி கேளு..
இப்போ நீ எனக்கு முத்தம்
தந்துட்டே இரு ..
என் காதல் நிறையுதான்னு பார்ப்போம்.."
"நான் அப்பவே நெனச்சேண்டா..
நீ இங்கதான் வந்து நிப்பேன்னு..
இதுக்கு மேல பேசாதே நீ.."
"....................."
"....................."
"......................................... . . . ."
"டேய்.."
"ம்ம்.."
"உனக்கு என் முத்தம்ன அவ்ளோ இஷ்டமா?"
"ம்ம்.. நீ முத்தங்களாக வெறும்
சத்தங்களை மட்டும் தருவதில்லையே..
உன் காதலையும் சேர்த்தல்லவா தருகிறாய்.."
"ம்ம்.. எதாச்சும் ஒன்னு சொல்லிடுவியே..
சரி உனக்காக ஒன்னே ஒன்னு தரேன்.."
.
.
.
.
.
.
"அம்மாடீ.. ஒன்னே ஒண்ணுனு சொன்ன..
இப்போ கூடை நிறைய தந்துட்ட.."
"ம்ம்..பரவால்ல.. வச்சுக்க.."
"ம்ஹூம்.. எனக்கு இப்போதைக்கு
ஒன்னு போதும்..
மீதியை உனக்கே திருப்பி தரேன்..
எங்கே உன் கன்னம்.. கழுத்து.. மா.."
"ஷ்.. சொல்லாதே.. செய்.."
ஹய்யோ.. என்னதான் தினமும் கொடுத்தாலும்
உன் காதல் குறைவதுமில்லை..
என் மனம் நிறைவதுமில்லை..
............................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்..

12 comments:

gayathri said...

me they 1st

நட்புடன் ஜமால் said...

\"ம்ஹூம்.. எனக்கு இப்போதைக்கு
ஒன்னு போதும்..
மீதியை உனக்கே திருப்பி தரேன்..\\

ஹா ஹா ஹா அருமையப்பே!

gayathri said...

சரி.. கொள்ள கொள்ள நிறையாததுனு
கேள்விப்பட்டிருக்கியா

illa pa naanum kelvi pattathuilla

gayathri said...

kalailaye ivalavu romancesana kavithaiya nadakkattum nadakkatum

gayathri said...

எங்கே உன் கன்னம்.. கழுத்து.. மா.."


unaku vaai rompa thanadigamaidichi pa

gayathri said...

உன்னிடம் பேசாமலேயே
உன்னிடம் முத்தம் வாங்க வேண்டும்..
எப்டீன்னு யோசித்து பார்த்தேன்.."

nalla yosanai kedachitha illaya

அப்துல்மாலிக் said...

//\"ம்ஹூம்.. எனக்கு இப்போதைக்கு
ஒன்னு போதும்..
மீதியை உனக்கே திருப்பி தரேன்..\\
//

அட இந்த லாஜிக்கூட நல்லான்கீது

அப்துல்மாலிக் said...

//சரி உனக்காக ஒன்னே ஒன்னு தரேன்.."
.
.
.
.
.
.
"அம்மாடீ.. ஒன்னே ஒண்ணுனு சொன்ன..//


இங்கே கேப்புலே இன்னாதான்பா நடந்தது??? ஒரே குழப்பமாக்கீதே...

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//சரி உனக்காக ஒன்னே ஒன்னு தரேன்.."
.
.
.
.
.
.
"அம்மாடீ.. ஒன்னே ஒண்ணுனு சொன்ன..//


இங்கே கேப்புலே இன்னாதான்பா நடந்தது??? ஒரே குழப்பமாக்கீதே...


rompa than lollu athigam ungaluku

Anonymous said...

அப்பப்பா இந்த முத்த ஓசையில் மொத்தமாய் நான் மூழ்கிவிட்டேன்.....திரைக்கதையாய் இங்கு ஒரு காதல் காட்சி படமானதோ அரங்கேறியதோ லோகுவுக்கே வெளிச்சம்....எத்தனை தத்துவம் அள்ள குறையாதாம்....யப்பா எப்படிப்பா முத்தம் ஒன்னு வாங்க இப்படி சுத்தி வளைத்து கடைசியில் ஒன்னே ஒன்னு போதுமாம்....லோகு புதுசா இருந்தது இந்த கவிதை நடை....வாழ்த்துக்கள்..மேலும் முத்தம் பெற.....

logu.. said...

Gayathri..
Jamal Anna..
Abhu..
Tamil..
Matrum ithuvari
aravanaithu Anbu kattiya
Anaivarukkum enathu NANRIGAL..

து. பவனேஸ்வரி said...

அழகான காதல் கவிதை....