Dec 20, 2010

அழகிற்கெல்லாம் அழகு..

ஒருமுறை வெட்கப்பட்டு காட்டு
என சொன்னால் முறைக்கிறாய்..
ம்ம்.. ஒரு முறை கொஞ்சமே கொஞ்சமாய்
கோபப்பட்டு காட்டேன் என்றால்
சீய்.. போடாவென வெட்கப்படுகிறாய்..
கிறுக்கியாடி நீ?
**************************************
ஹய்யோ.. பகலிலேயே இப்படி
பொறுக்கித்தனம் செய்கிறாயே
இரவில் என்னவெல்லாம் செய்வாய் என
கன்றிப்போன உதடுகளை ஈரம்
செய்துகொண்டே முறைக்கிறாய்..
நான் வேறெதுவும் செய்யபோவதில்லை..
விடியாத இரவுகள் மட்டும் செய்து
வைத்துக்கொள்வேன் அவ்வளவுதான்.
***********************************
என்னதான் ஆடைகள் அணிந்து
ஒய்யாரமாக வந்தாலும்
அழகாக மட்டும்தான் தெரிகிறாய்.
ஒரு முறை என் காதலையும்
சூடிக்கொண்டு வந்துதான் பாரேன்
அழகிற்கெல்லாம் அழகு
பேரழகாய் தெரிவாய்.
*************************************
அழகு செய்கிறேனென நீ வைக்கும்
நெற்றிபொட்டு கூட உன்னைக்கொண்டு
தன்னை அழகு செய்துகொள்வதை போல
உன் மனதோடு வாழ்ந்து தன்பிறவி
பயனை அடைய நினைக்கிறது என் காதல்.
****************************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

8 comments:

Arun Prasath said...

அடா அடா.. அசத்துங்க

தினேஷ்குமார் said...

கலக்குங்க நல்லாருக்கு கவிதை மூன்றாவது சூப்பர் தல

karthikkumar said...

"அழகிற்கெல்லாம் அழகு.//
தலைப்பு முதல் முற்றுபுள்ளி வரை என்னவளை ஞாபகபடுத்தி கொண்டே இருக்கிறது எனக்கு. :))

logu.. said...

ha..ha.. nanringa machans...

Anonymous said...

முதல் கவிதையும் மூன்றாவது கவிதையும் நல்லாயிருக்கு லோகு..

Anonymous said...

வெட்கக் கவிதை அழகு

logu.. said...

nanringa Tamil & indira.

ஹேமா said...

விடியாத இரவைச் செய்துகொள்வது...ரசித்தேன் !