Dec 29, 2009

ஏய்.. செல்லம்மா..

உனக்கென ஒரு
மழைகாலம் செய்து
வைத்திருக்கிறேன்..
வா..
சேர்ந்து நனைவோம்
நம்மை மறந்து.
..............................................
மழை என்றால்
மண்வாசம்..
நானென்றால்
உன் வாசம்.
.....................................
காலம் நேரம்
சேர்ந்து வாழ்த்தும்
தென்றலாக..
நீயும் நானும்
வாழ்ந்திருப்போம்
பூவும் வாசம் போலே.
..........................................
எத்தனை நாளைக்குதான்
வெறும் சேலைகளையே
கட்டிக்கொண்டிருப்பாய்..
ஒரு நாளைக்கு
என்னையும்தான் கட்டிக்கொண்டு
போய்ப்பாரேன்..
அப்புறம் சேலை கட்டவே
யோசிப்பாய் நீ.
.........................................................
செந்தாழம்பூவுக்கு
கொண்டாட்டம்..
நேற்று பெய்த மழை.
அலைபாயும் என் மனதில்
சந்தோசம்..
நேற்று கனவில் உன் முத்தம்.
..........................................................

ப்ரியமுடன்..
லோகநாதன்.

Dec 13, 2009

வாழ்ந்து பார்க்கிறேனே..

இலக்குகளற்ற பயணத்திலிருந்தேன்..
இலக்காய் உன்னை நினைக்க செய்தாய்..
நினைத்து நினைத்து நெருங்கி
வரும்போதுதான் நெருப்பென
சுடுகிறது உண்மை..
உனக்கான இலக்கு நான் மட்டுமே அல்ல..

வார்த்தை என்றால் அது
இதழிலிருந்து அல்ல..
இதயத்திலிருந்து வரவேண்டும்..
புன்னகை என்றால் அது
இதயத்தை நிறைக்கவோ. .
அல்லது கரைக்கவோ..
காயங்கள் செய்யகூடாது.
உன் வார்த்தைக்கும்..
புன்னகைக்கும் இனி
சாத்தியமே இல்லை என தோன்றுகிறது.

நீண்ட நெடிய ஆங்காரமான
இரவுகளிலெல்லாம் அனலில்
பட்ட புழுவாய் துடிதுடித்து
பெரும் போராட்டத்திற்கு பின்
பேரமைதியாகும்போதே உணர்ந்து கொண்டேன்.
என் மனம் உன்னை விட்டு
விலக ஆரம்பிக்கிறதென்று.

இனி நான் கண்டு ரசிக்க
எதுவுமே தட்டுபடபோவதில்லை
என் கண்களுக்கு.
இனி நான் பேசி மகிழ
எந்த இரவுமே வாய்க்கபோவதில்லை
என் ப்ப்ரியங்களுக்கு.

பரவாயில்லை..
மீண்டுமொருமுறை
வாழ்ந்துதான் பார்க்கிறேனே..
ஆசைகளற்ற இயந்திரமாய் வாழ்க்கையோடும்..
வலிகளை மட்டுமே தரும் கொடிய தனிமையோடும்.
..........................................................................

ப்ரியமுடன்.
லோகநாதன் .