Dec 16, 2010

நட்பூபூபூ.. பூ... பூ ..

கடந்த சனிகிழமை . நேரம் நாலு மணி
நாம்பாட்டுக்கு சிவனேன்னு ஆபீஸ்ல உக்காந்து வேலைய பாத்துட்டு இருந்தேன்.( என்ன வேலைன்னு கேக்காதீங்க நானே சொல்லிடறேன். வேறென்ன பண்ணுவம்? மொக்கைதான்.)

"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
ஆஹா..எவனோ ஆரம்பிசுடானேனு பயந்துட்டே செல்ல எடுத்து பாக்க நம்ம பங்காளி பயபுள்ளை..
" ஹலோவ்.."
" ஹலோவ்.."
"ஹலோவ்.."
"ஹலோவ்..'
"இங்கிட்டு லோகுங்க ..அங்கிட்டு..?"
" டேய்..வெளக்கெண்ணை.. நாந்தாண்ட பேசுறேன்.."
"தெரிது..தெரிது.. சொல்லு பங்கு.."
"எங்கேடா இருக்க?"
"எங்க இருக்கணும்?"
" சொர்கத்துல இருக்கோணும்..போறியாடா.. மாலை வாங்கிட்டு வரேன்.. கேக்குறான் பாரு கேள்வி.."
"ஆபீஸ் தான்.."
"அதானே பார்த்தேன் .. கழுதை கேட்ட குட்டிசெவுறு.."
(நம்ம வேலைக்கு போறத என்னமா நெனசுட்ட்ருகானுங்க..க்க்ராதகர்கள்..)
" என்னடா சொல்லி தொலை.."
"ஒரு ஆறு மணிக்கெல்லாம் பஸ் ஸ்டாப் வாடா.."
"டேய்.. எனக்கு ஆபீஸ் ஏழு மணிக்கு.."
"எல்லாம் தெரியும் ..வந்து சேருடா.. ரொம்ப முக்கியம்.. பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்றோம்.."
மறு வார்த்தை பேசும் முன் இணைப்பு கட்.

பண்றோமா? அப்டீன்ன என்னவாக இருக்கும்? யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் சொன்ன அதே கழுதை கெட்ட குட்டிசெவுறு ஞாபகம் வந்தது. ம்ம்..அப்போ அதுக்குதான் கூப்ட்ட்ருபானுங்கலோ..
போய்தான் பார்ப்போமே. சரியாக ஐந்து ஐம்பதுக்கு பஸ் ஸ்டாப்பில் இறங்க..
" எண்டா.. இதன் வர டைமா? கல்யாணத்துக்கு வர சொன்னா புள்ள பொறந்ததுகப்ரம்தான் வருவியாட..?"
( என்னா ஒரு உதாரணம் )
" டேய்..சொன்ன டைமுக்கு முன்னாடியே வந்தாச்சு.இதுக்கு மேல பேசின கொரவளைய கடிச்சு துப்பிடுவேன்.. ஜாக்ரதை.."
" சரி..சரி.. வாடா போலாம்.."
"எங்கேனு சொல்லவே இல்லியேட.."
" அது ஒண்ணுமில்ல பங்கு.. எனக்கு பொண்ணு பாத்துட்டாங்க.. நாளைக்கு பேசி முடிக்க வரசொல்லிட்டாங்க.. அதுக்குதான் ட்ரீட் வைடா எனக்கு.."
( இது எப்பருந்து ஆரம்பிச்சங்கனு தெரிலையே..ஆண்டவா..)
"டேய்..கல்யாணம் உனக்கு.. ட்ரீட் நானடா.. அதெல்லாம் இங்க நடக்காது ராசா.."
"டேய்.. பங்கு.. நாமல்லாம் அப்டியா பழகுனோம்..?"
( அஹா..ஒரே வார்த்தைல ஆப் பண்ண கத்து வச்சிருக்கானுங்களே..)
" சரி.. வாடா.. பொய் தொலையலாம்.. ஆனா வீட்டுக்கு போயிடுதான் வருவேன்.. காணோம்னு தேடுவாங்கடா.."
" அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. பேக்க குடு இங்கியே கடைல வச்சுட்டு போலாம்.."
.
.
.
" டேய்.. உனக்கு ஒரு பீர் போதும்தானேடா.."
" இல்லடா.. நீ வாங்குரதுலையே எனக்கும் சேத்து வங்கிக்கோ.."
எதோ சொல்ல கூடாததை சொன்ன மாதிரி என்ன மேலும் கீழும் பாத்துட்டு.. சரிடா என்றான்.
" எங்க போலாம்டா?"
"எங்கும் வேணாம் இங்கயே பாத்துட்டு.. சாப்டு போய்டலாம்ட.. இனி வீட்டுக்கு போய் சாப்ட முடியாது."
"சரி வாட.."

உள்ளே போகவும்.. அங்கே ராஜ வரவேற்ப்பு அவனுக்கு. எங்கல்லாம் பழக்கம் புடிச்சு வச்சிருக்கானுங்க.
ஒரு அரை மணி நேரம் கழிச்சு..
"டேய்.. பங்கு.."
"என்னடா வெளக்கெண்ணை..?"
"இன்னும் ஒரு ரவுண்டு..."
"சொல்லுடா பங்கு.. கடையே நம்மோடதுதாண்டி.."
அங்கேயே ஆரம்பித்தது சனியன்.
" ஹலோ அண்ணா.. நா சிகரெட் கேட்டு ஒரு மணி நேரமாச்சு.. இன்னுமா கொண்டு வர?"
( இவன் எப்ப கேட்டான் நமக்கு தெரியாம)
" என்னப்பா நீ கேக்கவே இல்லல்ல?" இது கடைக்காரர்.
"அதான் இப்போ கேக்குரமுள்ள..போ..பொய் கொண்டு வா.."
"டேய்..பங்கு.."
"ஆஹா.. பசிக்குதுடா.. வா போலாம்.."
.
.
.
" வாங்கப்பா.. எங்க இப்போல்லாம் கடை பக்கமே காணோம்.."
"யோவ்.. எங்கள பாத்தா உனக்கு அப்பன் மாதிரி தெரிதா.."
"அட அதுக்கில்லப்பா.."
"அதான் வந்துட்டமுள்ள.. இலைய போடறது.."
"சரி உக்காருங்க.."
"என்ன சாப்ட்றீங்க?"
"அதெல்லாம் நாங்க சொல்லிகறோம்.. நீங்க பொய் கல்லா பொட்டிய பாருங்க.. எவனாச்சும் அமுக்கிர போறான்.. மச்டர்ர்.. ரெண்டு செட்டு தோசை.."
.
.
"யோவ்.. மாஸ்டர்.. நா ஒரு அம்லேட்தனே கேட்டேன்.. உன்ன யாரு ரெண்டு வெக்க சொன்னா?"
"டேய்..பங்கு.. ஒன்னுதண்ட இருக்கு.. கம்னு கொட்டி தொலை.."
மணி பார்க்க ஒன்பது ஆகியிருந்தது.
" டேய் பங்கு போலாம்டா.."
"ம்ம்.. வண்டிய எடுத்துட்டு வா.. போலாம்.."
" அந்த பேச்சுக்கே எடமில்ல.. என்னால ஓட்ட முடியாதுட.."
" என்னாலும் முடியாதுடா பங்கு.."
ஒரு பத்து நிமிட அலசலுக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தான்.
" விட்றா.. எல்லாம் எங்க அப்பன் வீடு ரோட்தானே.. வா போவோம்.."
ஹய்யோ.. அம்லேட்டே ரெண்டா தெரிஞ்சதே இவனுக்கு.. ரோடு நாலா தெரியுமே.. மறுபடியும் ஆலோசனையில் வரிந்து கட்டிக்கொண்டு இறங்கினோம். கடைசியில் ஒரு ஜென்டில் அக்ரீமென்ட்.
வண்டியை ஸ்டாண்டில் போட்டுவிட்டு இருவரும் பஸ் ஏறி போவதென்று. அங்கே பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டுக்கு நடந்து போவதென்று ஒருமானதாய் தீர்மானம். எப்டியோ பஸ் ஏறி நம்ம ஊர் பஸ் ஸ்டாப்பில் இறங்கியாச்சு. இனி ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணுமே..
" டே..பங்கு.. ரீ சார்ஜ் பண்ணலாம்டா.."
"வந்து தொலை.."
" அக்கா.. ஏர்செல் நூறு ரூபா கார்டு இருக்கா?"
"இருக்குப்பா.."
"அப்போ எனக்கு ஒரு பத்து ரூபாய்க்கு ஈ சி பண்ணிவிடுங்க.."
(டேய்..அக்கா அடிசிற போறாங்கடா)
"நம்பர் சொல்லுப்பா.."
"நோ டெல்லிங்.. ஒன்லி மிஸ்டு கால்.."
ரீ சார்ஜ் பண்ணிக்கொண்டு நடராஜா சர்வீசை தொடங்கினோம். வழியில் பண்ணாத அலப்பறை இல்லீங்க. சொன்ன உங்க காதுல ரத்தம் வந்துடும். இந்த குளுருல ராத்திரி பதினோரு மணிக்கு கெணத்துல குதிச்சு குளிச்ச புண்ணியமெல்லாம் கெடச்சது எனக்கு. ஒருவழியா வீட்டுக்கு வந்து படுக்கும் போது தோனுச்சு..
இனிமேல் இந்த பொழப்பு ஆகாது.
மறு நாள் காலைலயே கெளம்பியாச்சு.. பிரண்ட் வீட்டுக்கு போறேன்னு.. ( பின்ன .. இருந்தா ஆயிரத்தெட்டு கிராஸ் கொஸ்டியன்ஸ் வரும்.. சமாளிக்க தெம்பில்ல... அதன் இந்த பொழப்பு.)
மணி மதியம் ரெண்டு இருக்கும்..
"பூங்காத்தே பூங்காத்தே போனவள பூங்குயில பாத்தியா..
தாங்காம தவிச்சேனே சின்னவள.."
எடுத்து பாத்தா பங்காளி பயல்.
" டேய்..பங்கு.. எங்க இருக்க.."
" பிரண்ட் வீட்லதா.. ஏன்டா?"
" ஒண்ணுமில்ல.. உங்கம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேடா.."
"ஐயோ.. ஒரு அரை மணி நேரத்துல வந்துடறேண்ட.."
" வேண்டாம்டா.. நா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடு ஊசி போட்டுட்டு வந்தாச்சு.. மாத்திரை வாங்கிருக்கு .. வந்தவுடன் பாத்து குடுத்துடு.. ஒ.கே வ?"
"சரிடா.. வச்சிரு.. நா வந்திடுவேன் அரை மணி நேரத்துல.."

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தான்னு சொல்லுவாங்க. அப்டியேதாங்க.. கெட்டு குட்டிசுவர் ஆனாலும்.. ஆக்குனாலும்.. நண்பன் நண்பன்தாங்க.
-------------------------------------------------------------------------------------------------------
ப்ரியமுடன்..
லோகநாதன்.

8 comments:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

சூப்பருங்க. உங்க அனுபவமா?

karthikkumar said...

கொஞ்சம் ஸ்பெல்லிங் கரெக்ட் பண்ணிக்குங்க. :)

karthikkumar said...

வோட்டு பட்டை எதுவும் இல்லை போல

logu.. said...

agga... adutha pathivulernthu payasamum aethu vachuta poguthu..


mm..ellam vachudalanga..
nanringa karthik..

Arun Prasath said...

ஹி ஹி சூப்பர்... கொஞ்சம் ஸ்பெல்லிங் பாருங்க தல

logu.. said...

pathukalam machan..

ஹேமா said...

லோகு...நண்பேந்தாண்டா.
அனுபவம் அழகு !