Jul 28, 2009

மனசின் வார்த்தைகளின்மை..

முகம் மூடி
வைத்துகொண்டால்
முக(ம்)வரி மறந்து விடுமா?
இதழ் மூடி
வைத்துக்கொண்டால்
வார்த்தைகள்
தொலைந்து விடுமா?
இமைகள் பாரமென்று
கண்கள் சொல்லாதடி..
நினைவுகள் சோகமென்று
இதயம் வெறுக்காதடி....
கெஞ்சும் உன்னை கெஞ்சும்
உன் வெட்கம் கண்டு கொஞ்சும்..
நெஞ்சம் எந்தன் நெஞ்சம்
உன் மடியில்தான் தஞ்சம்..
மூடிவைக்கவா நான்
ஆசைகள் வளர்த்தேன் பெண்ணே..
உன்னை பிரிந்து செல்லவா
நான் காதல் வளர்த்தேன் பெண்ணே..
சொல்லி புரிவதில்லையடி காதல்
சொல்லவும் வார்த்தைகள்
இல்லையடி என்னிடம்..
ஆம் பெண்ணே..
வலிகள் என்றால் என்னவென்று
சொல்லி தருகிறதடி..
மனசின் வார்த்தைகளின்மை.
...............................................

Jul 24, 2009

ஜமால் அண்ணாவுக்கு பிறந்தநாள்..

உறவுகளையெல்லாம் தாண்டி
என் உயிருக்கு மிக மிக
நெருக்கமாய்..
மயக்கங்களைஎல்லாம் தாண்டி
என் மனதுக்கு மிக மிக
இதமாய்..
எழுதும் வார்த்தை வசந்தமாய்..
சொல்லும் சொல்லில் சுகந்தமாய்..
வாழும் வாழ்க்கையில் வாசங்களாய்..
எல்லைகள் தாண்டி
ஏகாந்தமாய் வாழும் கவிதை
உனக்கு இன்று பிறந்தநாள்..
உன்னை வாழ்த்தினால் அவை
வெறும் வார்த்தைகளாகி போகும்..
வாழ்க பல்லாண்டு..
வணங்கி மனம் நிறைகிறேன்..
அல்லது..
நீ.. நானாகி
கர்வப்பட்டுகொள்கிறேன்.
- இப்படிக்கு..
உன் உடன்பிறவா சகோதரன்.

Jul 9, 2009

உன்னை நினைத்தே..

உன் நினைவுகளினூடே
தேடிப்பார்க்கிறேன் என்னை..
எங்கும் தட்டுப்படவே
இல்லை நான்..
அடிபாவி..
இப்படியா முழுவதுமாய்
என்னை ஆட்கொள்(ல்)வாய் நீ..
...............................................................
இடரும்போதெல்லாம்
இதமாய் தாங்கி பிடிக்கும்
உன் ப்ரியங்களால்தான்
இன்னும் கொஞ்சமேனும்
நல்லவனாய் இருக்க
முடிகிறது என்னால்..
நன்றியடி பெண்ணே..
என்மீதான உன்
தொலைந்துபோன
பிரியங்களுக்கு.
..............................................
சோலையின்
சுகந்தமாய்..
தென்றலின்
வசந்தமாய்..
தனிமை
இனிமையாய்..
நெஞ்சின்
ரணமாய்..
வாழ்க்கையின்
ஆதாரமாய்..
இன்னும் எத்தனை
முகம் இருக்கும்..?
உன் நினைவுகளுக்கு.
................................................
பொன்னேரம் இந்நேரம்
பூங்காத்தும் தாலாட்ட..
பூவாசம் வந்தாட..
ராசாத்தி உன் நினைவால்..
என் மனதில் தேரோட்டம்.
......................................................
களவு
கற்று மற..
காதல்..
கற்றவுடன் இற.
................................
வசந்தம்
வரும்போதெல்லாம்
இயல்பாய்
செழித்திருக்கும்
சோலையை போல்தான்..
உன் நினைவுகள்
தொடும்போதெல்லாம்
தானாய் சில்லிடுகிறது
என் இதயம்.
...................................................

Jul 7, 2009

நினைவோ ஒரு பறவை..

விதி வழி
போகும் வாழ்க்கை..
காதல் வழி
போகும் மனம்..
எந்த வழியில் வரும் ?
நிம்மதி..
........................................
கூந்தல் வாழ
ஆசைப்படும்
பூவுக்கு வாழ்க்கை
தொடர்வதுமில்லை..
காதல்கொண்ட
மனதிற்குள் நிம்மதி
இருப்பதுமில்லை..
இரண்டையும்
ஓரிரு நாட்களிலேயே
கசக்கி எறிந்துவிடுகிறார்களே..
இந்த பெண்கள்..
.......................................
இரண்டுமே
எட்டி பிடிக்கும்
தூரம்தான்..
என்னதான் முயன்றாலும்
கடைசீ வரை
கையில் கிடைக்கவே இல்லை..
நீயும் .. என் வாழ்க்கையும்..
................................................
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய்
இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய்
வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே
உன்னால்..
......................................
ஆண்கள் இதயம் தர
எந்த நிபந்தனையும் இன்றி
திரும்ப இலவசமாக
தருவார்கள் பெண்கள்..
.
.
கண்ணீர்..
...............................................
...........................................