Dec 8, 2010

நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு..

கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம்
உன் கண்களை உற்று பார்த்து விடாதே..
உன்னால் களைந்தெறியப்பட்ட
என் ப்ரியங்கள்
உன் நேரங்களை அல்லது சந்தோஷங்களை
பறித்து விட கூடும்.
**********************************
காலை பனியாய்..
மாலை மயக்கமாய்..
சிரிக்கும் பூக்களாய்..
வெடிக்கும் ஆசைகளாய்..
கடக்கும் காலம் முழுதும்
காதலாய் உன்னை
சுமக்க வேண்டுமென்றேன்..
பதிலாக நினைவுகளையேனும்
தந்து சென்றாயே..
செல்லம்தானடி நீ எனக்கு.
*******************************
நீ.. உன் வார்த்தைகள்..
உன் மனம்.. அதன் வாசங்கள் என
உன்னை சார்ந்த எல்லாவற்றையும்
நேசிக்க கற்றுகொண்டவன் நான்.
உன் பிரிவுகளை மட்டும்
வெறுத்து விடுவேனென
நினைத்து விட்டயாடி முட்டாள் பெண்ணே..
*************************************
பூவும் வாசம் போல
இணைந்திருந்தோம் நீயும் நானும்.
பூக்கள் போல வாடிவிட்டேன்
உன் பிரிவுகளினால்..
ஆனாலும் வாடிய பூக்களின் வாசங்களாய்
உன் நினைவுகள் மட்டும் என்னுடனே.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

3 comments:

sakthi said...

நீ.. உன் வார்த்தைகள்..உன் மனம்.. அதன் வாசங்கள் என உன்னை சார்ந்த எல்லாவற்றையும் நேசிக்க கற்றுகொண்டவன் நான்.உன் பிரிவுகளை மட்டும் வெறுத்து விடுவேனென நினைத்து விட்டயாடி முட்டாள் பெண்ணே..

அப்போ அப்படி இல்லையா லோகு

sakthi said...

பூவும் வாசம் போல இணைந்திருந்தோம் நீயும் நானும்.பூக்கள் போல வாடிவிட்டேன் உன் பிரிவுகளினால்..ஆனாலும் வாடிய பூக்களின் வாசங்களாய் உன் நினைவுகள் மட்டும் என்னுடனே

கிரேட் லைன்ஸ்

logu.. said...

mmmm... nanringa sakthi.