முத்தம் கேட்டால்
பழிப்பு காட்டுகிறாய்..
எல்லோரும் இருக்கும்போது
ரகசியம் சொல்கிறேனென்று
காதில் சொல்லாமல்
கன்னத்தில் சொல்கிறாயே..
நீ திருட்டு சிறுக்கியா..
முரட்டு ராட்சசியா.
நீயோ ஒன்ன்றே ஒன்றுதான்
என்கிறாய்.
சரி.. உனக்கும் இல்லை..
எனக்கும் இல்லை..
மூன்றாக வைத்துகொள்வோம்.
ஆனால் ஒவ்வொரு முத்தமும்
குறைந்தபட்சம்
அரை மணி நேரமாவது
தர வேண்டும்.
சரியாடி செல்லம்மா.
இனிமேல் கைவிரல்களில்
நகம் வளர்க்காதே என்றாய்.
'ஏன் அழுக்கு பிடிக்குமா'
என கேட்க
இல்லை..எனக்கு காயங்கள்
படுமே என்கிறாய்.
சரி.. வெட்டிகொள்கிறேன்.
ஆனாலும் ஒரு சந்தேகமடி..
நகங்களால் மட்டும்தான்
காயங்கள் செய்ய முடியுமா என்ன?
...............................................................................
ப்ரியமுடன்..
லோகநாதன்.