Dec 4, 2010

மறந்து விடுகிறேன்..

கலைந்து கொண்டிருப்பவை
எல்லாமே கனவுகள் அல்ல..
சமயங்களில் நிஜங்களும்
கலைந்து கதறுகின்றன.
தூக்கி எறிபவை
எல்லாமே குப்பைகள் அல்ல..
சமயங்களில் பிரியங்களும்
தூக்கி எறியப்பட்டு
ஊமையாய் அழுகின்றன.
கடக்கும் காலங்கள் எல்லாம்
கண்களில் ஏந்துகிறேன்
கிடைக்கும் தனிமைகள் எங்கும்
நினைவுகளில் தேடுகிறேன்
பூக்கள் வாடிய பின்தானே
வாசங்களை உணர்ந்தேன்
மனது வலித்த பின்தானே
வார்த்தைகளை உணர்ந்தேன்..
என்னுடைய உண்மைகளை
சொல்ல வார்த்தைகள் இல்லை
உன்னுடைய நினைவுகளை
கலைக்க வழி இல்லை..
இழந்து விடுகிறேன் எல்லாவற்றையும்
உன்னை நினைக்கும்போது..
மறந்து விடுகிறேன் என்னையும்
உன்னை மறக்க நினைக்கும் போது.
********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

5 comments:

Anonymous said...

kathalin valimai sollum varigal valikathaan seigirathu logu

vinu said...

இழந்து விடுகிறேன் எல்லாவற்றையும்
உன்னை நினைக்கும்போது..
மறந்து விடுகிறேன் என்னையும்

nijam ellaa nearangalilum sudum

logu.. said...

mm.. nanringa Tamilarasi & Vinu.

ஹேமா said...

லோகு....மறப்பது என்பது அவ்வளவு சுலபமா என்ன.எம்மை நாம் மறக்கும்வரை நினைவுகள் மனதோடுதான் !

logu.. said...

Sulabamai irunthal romba nallarukkum hema..

Nanringa hema.