Apr 19, 2011

திமிரும் திமிர்.

அழகாக இருந்தாலே
திமிரும் கொஞ்சம் கூட இருக்கும் போல..
உன் திமிரும் திமிரின் திமிரை
பார்த்ததிலிருந்து திமிர் பிடித்து
அலைகிறது மனசு.
******************************

எந்த பகையும் இல்லாமலே
எதிரியாகி போகிறேன்
உன் ஆடைகளுக்கு..
கட்டியணைக்கும்போது
குய்யோ முய்யோவென
கூச்சலிட்டு
கன்னாபின்னாவென
சாபமிடுகின்றன என்னை.
**********************************

உன்னை பார்த்ததுமே
முத்தமிட துடிக்கும் உதடுகளையும்
கட்டியணைக்க துடிக்கும் கைகளையும்
முறைத்தே அடக்கிவிடுகிறாய்.
ஆனால் தாறுமாறாக வந்து விழும்
வார்த்தைகளை என்ன செய்வாய் என கேட்க
அவற்றைத்தானே பத்திரமாய்
எடுத்து வைத்துக்கொள்கிறேன்..
தனிமையின் இனிமையான
துணையல்லவா எனக்கது என்கிறாய்.
எல்லாம் சரிதான்..
முத்தங்களையும் மூச்சடைக்க
பெற்றுக்கொண்டால் குறைந்தா போய்விடுவாய்?
*****************************************

ஏதேச்சையாய் உன்புகைப்படத்தை
பார்த்த என் வீட்டு கிளி
உன் உதடுகளை கொத்திப்பார்த்து விட்டு
ஏன் இந்த கோவைப்பழம்
இனிக்கவில்லை என கேட்டு
நச்சரிக்கிறது.
அது புகைப்படமென்று எப்படி
புரிய வைப்பேன் அதற்கு?
*********************************

எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை
வம்பிழுப்பதே உனக்கு வேலையாக
போய்விட்டது.
இனிமேல் வம்பிழுத்துதான் பாரேன்
மூச்சுக்கு முந்நூறு முத்தங்கள்
வைக்கப்போகிறேன் நான்.
**********************************
ப்ரியமுடன்..
லோகநாதன்.

4 comments:

கருணாகார்த்திகேயன் said...

nalla kavithaigal..

manasai ezandhan..


anbudan
karthik

சுசி said...

:))

ஹேமா said...

கன்னா பின்னா சாபம் !

து. பவனேஸ்வரி said...

காதல் மொழிகள் அருமை நண்பரே... எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது தங்களால்?