Apr 16, 2011

மனசு..

காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு.
****************************

தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.
*******************************

காற்றின் திசையில்
பறக்கும் பட்டமாய்
மனசின் திசையில்
வாழ்க்கை.
விருப்பங்களற்று.
*********************************

கருவோடு சுமந்ததை போலல்ல..
தெருவோடு காண்பதெல்லாம்
சில புன்னகைகளும்..
கொஞ்சமாய் நலம் விசாரிப்புகளும்
போதுமல்லவா?.
*****************************

சிரித்தால் சிரிக்கிறது
முறைத்தால் முறைக்கிறது
அழுதால் அழுகிறது.
உன் போலில்லை
என் வீட்டு கண்ணாடி.
*****************************


10 comments:

சுசி said...

பட்டமும், கண்ணாடியும் செம.

வியா (Viyaa) said...

nice poem..
keep it up

ஹேமா said...

#தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.#

மனிதனின் மனசை சரிவரப் படித்த வார்த்தைகள் !

Anonymous said...

அனைத்துமே வலி கலந்த உணர்வுகள்..

முதலாவது கூடுதல் ரணம் தருகிறது.

logu.. said...

\\ சுசி said...
பட்டமும், கண்ணாடியும் செம.\\

நன்றிங்க சுசி

logu.. said...

\\ வியா (Viyaa) said...
nice poem..
keep it up\\

நன்றிங்க வியா

logu.. said...

\\ ஹேமா said...
#தீராத ஆசைகளையும்
கரையாத நேசங்ளையும்
புதைக்க தெரிந்தவன்
நல்ல மனிதனாகிறான்.
தெரியாதவன் பைத்தியமாகிறான்.#

மனிதனின் மனசை சரிவரப் படித்த வார்த்தைகள் !\\

நன்றிங்க ஹேமா.

logu.. said...

\\ இந்திரா said...
அனைத்துமே வலி கலந்த உணர்வுகள்..

முதலாவது கூடுதல் ரணம் தருகிறது.\\

நன்றிங்க இந்திரா.

அனைவருக்கும் அன்பு  said...

//காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு. //

காதலால் நிரம்பி
வழிகிறது .............

உணர்வுகளால்
உருக்கப்பட்ட
வார்த்தைகள் ..............

அனைத்தும் சுவை
ஆனாலும் ஒரே சுவை ..........

அருமை நண்பா
நானும் கவிதை பிரியைதான் என் தளமும் வருகை தாருங்கள்
http://kovaimusaraladevi.blogspot.in/

அனைவருக்கும் அன்பு  said...

//காட்சிகள் வர்ணம் தொலைத்து விட்டன.
வார்த்தைகள் ஜீவன் இழந்து விட்டன.
நேரங்களின் சிறகு முறிந்து விட்டது.
இன்னும் உன்னை தேடி தேடி
அலைந்து கொண்டுதானிருக்கிறது
மனசு. //

காதலால் நிரம்பி
வழிகிறது .............

உணர்வுகளால்
உருக்கப்பட்ட
வார்த்தைகள் ..............

அனைத்தும் சுவை
ஆனாலும் ஒரே சுவை ..........

அருமை நண்பா
நானும் கவிதை பிரியைதான் என் தளமும் வருகை தாருங்கள்
http://kovaimusaraladevi.blogspot.in/