Nov 22, 2008

காதலுடன்..

என் நினைவோடு
தந்ததை எல்லாம்
நிஜமாக தந்தவள்..
நீ..
நிஜமாக
தந்ததை எல்லாம்
நினைவாக்கி சென்றவள்..
.................................................
உதிரும் பூவோ..
கரையும் நொடியோ..
இனி ஒருபோதும்
மீளமுடியா சோகத்துடன்
உதிரவோ..
கரையவோ கூடாது..
என் காதலை போல..
................................................
யாருக்காகவும் காத்திரா
காலங்களை போல்தான்
என் காதலும்..
எதற்காகவும் உன்னை
விட்டு தரமாட்டேன்..
.....................................................
கல்லறை பூக்கள்
பூத்திருந்தும்
பூத்து சிரித்திருந்தும்
அவை கூந்தல்
ஏறமுடியா சோகம் சொல்ல
வார்த்தை ஏது?
காத்திருக்கும் காதல்
முகம் பார்த்திருந்தும்
சேரமுடியா சோகம் போல..
.......................................................
நீ இல்லா நாட்களில்
நிலவில்லா வானம் போல்
வெறுமையாகத்தான்
இருக்கிறது மனசு..
என்றாலும் பரவாயில்லை..
ஆங்காங்கே
நட்சத்திர குவியலை போல்
சிதறி கிடக்கிறதே..
உன் நினைவுகள்..
............................................
ஒரு நிமிடம்..
அல்லது
ஒரு ஜென்மம்..
உன் மடி சாய வேண்டும்..
இருக்கும்போதில்லாவிட்டாலும்
இறந்தபிறகாவது.
.........................................................
உன்னால் நான்
புனிதமடைந்தேனோ இல்லையோ..
நல்ல மனிதனானேன்.
ஆம்..
காதலின் ஆழம் அறியாதவன்
புனிதமானவனும் இல்லை..
கண்ணீரின் ஆழம் அறியாதவன்
நல்ல மனிதனும் இல்லை.
.............................................................
ஒரு நிமிடம்தான்..
அழகான தென்றல் போல
வந்ததும் சென்றுவிட்டாய்..
ஆனால் இன்னும் நிலைத்திருக்கிறது
உனக்கான என் நினைவு சுவடுகள்.
பிரிவுகளால் இதயம் உடைந்தாலும்
உடைந்தவற்றிலும் உனக்கான என்
காதல் நிலைத்திருப்பது போல..
.............................................
சிறு உயிருக்கும்
துன்பம் தரமாட்டேன்..
ஒரு பூ வாடினாலும்
என்னால் தாங்க முடியாது..
சொல்லிக்கொண்டே
பிரிகிறாய்..
என் இதயத்தை
உடைத்துவிட்டு..
..........................................
ப் ரி ய மு ட ன் . . லோ க நா த ன். .

5 comments:

gayathri said...

hai logu kavithai lines nalla iruku sekaram oru nalla head line podunga pa

Unknown said...

//நீ இல்லா நாட்களில்
நிலவில்லா வானம் போல்
வெறுமையாகத்தான்
இருக்கிறது மனசு..
என்றாலும் பரவாயில்லை..
ஆங்காங்கே
நட்சத்திர குவியலை போல்
சிதறி கிடக்கிறதே..
உன் நினைவுகள்..//

Very nice :))

logu.. said...

gayoo u the first..
unga aasapadiye heding poduren..

nanringa s r i . .
ungalukku pidichirukkuna appa ellarukkum pidikkum.

Bee'morgan said...

நட்சத்திரக்குவியலாய் சிதறிக்கிடக்கும் நினைவுகள் அழகான கற்பனை.. :)
இந்த கவிதை பளிச்னு மனசில் ஒட்டிகிச்சு..

logu.. said...

Bee'morgan கூறியது...
நட்சத்திரக்குவியலாய் சிதறிக்கிடக்கும் நினைவுகள் அழகான கற்பனை.. :)
இந்த கவிதை பளிச்னு மனசில் ஒட்டிகிச்சு..


thanksnga..
ungal muthal varukaikkum
vazhththirkkum.