Nov 20, 2008

வார்த்தைச் சிதறல்கள்..

எந்தக் குழந்தையிடம்
கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
சதிராட..
என் செவியெல்லாம்
நிறைகிறது..
........................................
உன் இதழ்கள்
தேனாய் இருக்குமோ..
உன் வார்த்தை சர்க்கரை
ஆகிறதே..
...........................................
மௌனம் அழகானதுதான்
என்றாலும்
உன் சின்ன 'சீ போடா' வை
நினைக்க அழகற்றதாகி
விடுகிறது மௌனம்..
..........................................
குயில் பாடல்
போலெல்லாம்
உன் வார்த்தைகள் இல்லை..
என்றாலும் உன் வார்த்தைகளை
கேட்டுத்தான் குயில்
நன்றாக பாட
கற்றுக்கொண்டிருக்க வேண்டுமென
நினைக்கிறேன் நான்..
.....................................................
எங்கே கற்றுக்கொண்டாய்..
இப்படி வார்த்தைகளால்
மழை தூவ..
என் இதயமெல்லாம்
நனைகிறதடி..
.....................................................
'ம்' என்பது
ஒற்றை எழுத்து
என்றாலும்
எனக்கு அது
கவிதைதான்..
நீ
சொல்வதால்..
..............................................
கடைகளில்
மதுவிற்கு பதில்
உன் வார்த்தைகளை
விற்கலாம்..
...........................................
உலகின் எட்டாவது
அதிசயமாய் இருக்குமோ
உன் வார்த்தைகள்..
பகலிலும் பனி தூவுகிறது..
.................................................
கனவில் எல்லாம்
இனி என்னோடு
பேசாதே நீ..
உன் மற்ற கனவுகள்
கனவுகள் எல்லாம்
காத்திருந்து பார்த்துவிட்டு
அதிகாலையில்
சண்டைக்கு
வருகின்றன என்னிடம்..
..........................................................
என் வீட்டு
தோட்டத்தில்
ரோஜாக்களோடு ரோஜாவாய்
உன் வார்த்தைகளையும்
வளர்க்க ஆசை எனக்கு..
................................................
ப் ரி ய மு ட ன் . .
லோ க நா த ன். .

5 comments:

gayathri said...

hai logu kavithai ellam nalla iruku

gayathri said...

மௌனம் அழகானதுதான்
என்றாலும்
உன் சின்ன 'சீ போடா' வை
நினைக்க அழகற்றதாகி
விடுகிறது மௌனம்

intha line rompa azaka iruku da

itha naan solla kudathu irunthalum sollren

logu.. said...

hayyo..
vanthacha...
thnks for u'r comment..
meendum meendum varuga..

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்கு கவிதைகள் எல்லாமே....

//மதுவிற்கு பதில் உன் வார்த்தைகளைவிற்கலாம்//

Liked a lot..:))

logu.. said...

thnk u very much..
for u'r comments..

romba santhosama irukku.